LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
-

பாம்புத் தலையில் பாலன் நடனம்

குளிர்ந்த யமுனைக் கரையினிலே
….குழந்தைகள் பற்பலர் ஆடிவந்தார்,
வளியும் அவரது தோழனென
….வலமும் இடமும் சுற்றியது,
களிப்பாய் ஆடிப் பிள்ளைகளும்
….களைத்தே நீரைப் பருகவந்தார்,
உளியால் கொத்திய சிலையைப்போல்
….உருண்டும் புரண்டும் விழுந்துவிட்டார்!

நதிநீர் விஷமாய் ஆனதென
….நைந்தே துடித்தார் மக்களெல்லாம்
’கொதிக்கும் நஞ்சைத் தன்னிடத்தில்
….கொண்டுள நாகம் யமுனையினை
அதிரச் செய்யும், விஷமாக்கும்
….அந்தோ கொடுமை, என்சொல்ல!
கதிநீ தானே கா’என்று
….கண்ணன் காலில் விழுந்துவிட்டார்!

நீலக் கண்ணன் அதுகேட்டு
….நெஞ்சில் கோபம் கொண்டெழுந்தான்,
ஆலம் அணையாய்க் கொண்டவனும்
….அம்பைப் போலே பாய்ந்துவந்தான்,
பாலன் அல்ல இப்போது,
….பாறை பிளக்கும் இடியானான்!
சாலப் பெருத்த மரமொன்றில்
….சட்டென அவனும் ஏறிவிட்டான்!

நதியின் நடுவே உக்கிரமாய்
….நாகம் ஒன்று வாலாட்ட,
குதித்தான் பாம்பின் படம்மீது,
….குலைந்தே நடுங்கிய தந்நாகம்,
மதிகெட் டந்தக் காளிங்கன்
….மதயா னைபோல் சத்தமிட்டான்,
மிதித்தே அவனை முடமாக்கி,
….மிளிர்ந்தே கண்ணன் ஆடுகிறான்!

நாகத் தலைகள் அரங்காக,
….நஞ்சின் உமிழ்வே ஒலியாக,
வேகக் குதிப்பே தாளமென,
….வெற்றிக் களிப்பே பாடலென,
தாகம் கொண்ட நன்னிலமும்
….தண்ணீர்த் துளியை உறிஞ்சுதல்போல்,
மேகக் கூட்டம் மலைத்தொடரின்
….மேலே சென்று தோய்வதுபோல்…

கண்ணன் ஆட்டம் தாளாமல்
….கதறித் துடித்தான் காளிங்கன்,
’உண்ணும் நீரில் இனிமேல்நான்
….ஒன்றும் விஷமம் செய்வதில்லை,
அண்ணல் உன்றன் அபயம்’என்றே
….அவனும் சொல்லக் கண்ணனும்தான்
தண்ணீர் மொத்தம் தூய்தாக்கித்
….தரணிக் களித்தே சிரித்துநின்றான்!

by Swathi   on 19 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.