LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

பாங்கிமதியுடன்பாடு

ஐயமுற்றோர்தல்.
69.
வளையாத சூலர் கலைசைத் தியாகர் வரையின்மலர்
களையாய்ந் தெடுத்துத் தொடை தொடுத்தோவண்டல் கார்க்குழலி
குளையாயத் தோடயர்ந் தோசிவ கங்கை குடைந்துமிக
விளையாடி யோவறி யேனிவண் மேனி மெலிந்ததுவே. 1

ஐயந் தீர்தல்.
70.
உண்டோர் புதுமண முண்டோ ரழகுண் டொழுக்கமிப்போ
துண்டோ தனங்கைத் தலுண்டோர் தொழிற்கரவுண்டொருவல்
உண்டோ ரிடநிற்ற லாதலி னாலிவ ளுற்றறிந்த
துண்டோர் மணந்தென் கலைசைத் தியாக ருயர்வெற்பிலே. 2

பிறைதொழுகென்றல்.
71.
சிலைக்கேயொப் பாமெண் புயத்தார் கலசத் தியாகர்முடித்
தலைக்கேறி யம்மை சிவகாமி நெற்றியிற் சாய்ந்துதொட்டிக்
கலைக்கேச வன்மெய்ப் புகழ்போல் விளங்குங் கதிர்ப்பிறையை
அலைக்கேதஞ் செய்குழ லாய்தொழ வேதகு மங்கைகொண்டே 3

இதுவுமது.
72.
ஆனேறு மையர் கலைசைத் தியாக ரளித்ததந்திக்
கூனேறும் வெள்ளை யொருகொம்பின் வெண்பிறைக் கோலங்கண்டால்
தேனேறு பாணிக் கமலங்கள் கூம்பிடுஞ் செய்கையைப்போல்
தானே குவியுமிப் பாணிக் கமலமுந் தண்கொடிக்கே. 4

சுனைநயப்புரைத்தல்.
73.
அருளுங் கலைசைத் தியாகேசர் தம்மை யடுத்தவர்கண்
இருளினை வாங்கித் தமதருட் சோதியை யீந்தெனவுன்
பெருவிழிக் கார்கவர்ந் துன்வாயில் வெண்மை பெறத்தந்ததோ
மருவிமின் னேயங்கு நீமகிழ்ந் தாடு மலர்ச்சுனையே. 5

சுனைவியந்துரைத்தல்.
74.
நெய்யிலைச் சூலர் கலைசைத் தியாகர் நெடுங்கிரிமேல்
மெய்யினில் வேர்வு நவமா விளமுலை மீதெழுதும்
தொய்யிலுந் தான்பெற லாமெனின் யானுந் துடியிடையாய்
தையிலு மாசி தனிலுஞ்சென் றாடுவன் தண்சுனையே. 6

தகையணங்குறுத்தல்.
75.
முருக்கலர் வெண்மை கருவிளம் போது முழுச்சிவப்பா
இருக்குமல் லான்மற் றுனக்கு மவட்கு மெழிலொன்றுசீர்
பெருக்குங் கலைசைத் தியாகேசர் வெற்புறை பேரணங்கே
மருக்குயத் தாளை வரக்கண்டு நீசெல்க வாழிடமே. 7

நடுங்கநாட்டம்.
76.
பாவந் துமிக்குங் கலைசைத் தியாகர் பருப்பதத்து
வாவந் துலவையிற் குத்திற்றன் னோவம் மருங்கொதுங்கித்
தீவந் துடனணைந் தாற்போ லயிலைத் திரித்ததன்வெங்
கோவந் துகள்பட வென்றா ரொருவரெங் கோமளமே. 8

பெட்டவாயில்பெற் றிரவுவலியுறுத்தல்.
77.
கார்மாதை யாதரித் தென்று மவளுப காரத்தினால்
பார்மாதைத்தோண்மிசைத்தாங்கிமன்வாழும்பரிசினைப்போல்
சீர்மாதர் மல்குங் கலைசைத் தியாகர் சிலம்பினம
தேர்மாதி னாவியை யாஞ்சென் றிரந்திட்ட மெய்துவமே 9

ஊர் வினாதல்.
78.
தூக்கமுற் றாரிற் புதியேன் சுழன்றிந்தச் சூழலுற்றேன்
ஆக்கந் திரண்டதும் பாக்கமெங் கேசொலு மாயிழையீர்
போக்கங் கொருவுங் கலைசைத் தியாகர் பொருப்பிலென
தேக்கந் தவிர்ந்திரு நோக்கந் தெரிந்தங்க ணேகுதற்கே.

பெயர் வினாதல்.
79.
ஆராமஞ் சூழ்ந்த கலைசைத் தியாக ரசலத்துங்கள்
ஊராத ரத்தொ டுரைக்கவொண் ணாவகை யொன்றுளதேல்
கூராரும் வேற்கட் கொடியிடை யீரன்பு கூர்ந்தனிர்நும்
பேராகி லுஞ்சொல்லு வீர்சோத்தி ரானந்தம் பெற்றிடவே. 11

வேழம் வினாதல்.
80.
சேலோடு வண்டணை வாவிக் கலைசைத் தியாகர்வெற்பிற்
பாலோடு தேனித ழூறுசெவ் வாய்நற் பணிமொழியீர்
மாலோடு மும்மதங் காலோட நான்சிலை வாங்கியெய்த
கோலோடு மஞ்சியிங் கேவந்த தோவொரு குஞ்சரமே. 12

வேங்கை வினாதல்.
81.
தீங்கையெல் லாந்தவிர்த் தாளூங் கலைசைத் தியாகர்வெற்பில்
கோங்கைவென் றோங்குங் குவிமுலை யீரெரி கூர்ந்தபடை
தாங்கையிற் கொண்டுபன் மாவீட்டும் போதித் தடம்புனத்தார்
வேங்கையின் பால்வந்த தோவொரு வேங்கைதன் வீறழிந்தே [13]

கலை வினாதல்.
82.
உடுக்குங் கலைகளன் றோதுங் கலையுமன் றும்பரிம்பர்
அடுக்குங் கலைசைத் தியாகேசர் வெற்பினி லாங்கொர்புள்வாய்
மடுக்குங் கலையிந்து போன்முகத் தீர்கண் மணிவலைக்குள்
படுக்குங் கலையொன்று வந்ததுண் டோவிப் பசும்புனத்தே. [14]

வன்றி வினாதல்.
83.
அருவன்றி யேயு முருவன்றி யாண்பெண் ணலியுமல்லா
ஒருவன் றியாகப் பெருமான் கலைசையை யொப்புடையீர்
பெருவன் றிறலுடை யென்னம் படவுடல் பின்னம்படக்
கருவன்றி யொன்றிங்கு வந்ததுண் டோசொலுங் கற்புடனே. [15]

இடை வினாதல்
84.
மிடியைத் துரத்துங் கலைசைத் தியாகர் வியன்கிரிமேல்
பிடியைக் கடந்த நடையுடை யீர்நற் பெரியதன
முடியைத் தரித்துநற் பூபாரங் கொண்டு முறைநிறுத்தும்
கொடியைக் கரந்துவைத் தீரென்ன காரணங் கூறுமினே. [16]

வழி வினாதல்.
85.
எவ்வழி யுஞ்சுழன் றேங்கிக் கிடந்த வெமக்குமலத்
தெவ்வழி வித்தருள் செய்தார் கலைசைத் தியாகர்வெற்பில்
மைவழி கூந்தன் மயிலனை யீரந்தி வந்திடுமுன்
செவ்வழி யொன்றுரை யீரினி யான்மெலச் செல்வதற்கே. [17]

மொழியாமை வினாதல்.
86.
காவாமற் காக்குங் கலசத் தியாகர் கலைசையன்னீர்
ஆவா வுழையுழை மேயச் சுகஞ்சுக மாரவிங்கே
ஓவா வினாவுடை யேற்கு வயாவைத் தொருகுமுதப்
பூவாய் திறந்துரை யாடா வகையென் புகன்மின்களே. [18]

யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்.
87.
சிங்கியங் கண்டர் கலைசைத் தியாகர் சிலம்பகநீர்
தங்கிய வூரெது நும்பெய ரேதென்பர் தைத்தவண்டோ
டுங்கிபம்போந்த துண் டோவென்பர் வாய்திறந் தொன்றுரையா
இங்கித மென்னென்ப ராலிவ ராரெண்ணம் யாதிவர்க்கே. [19]

எண்ணம் தெளிதல்.
88.
காற்றயி னாகர் கலசத் தியாகர் கலைசைமணல்
ஊற்றம் பெனமிகும் வேட்கைகொண்டேயிவரொன்றன்பினொன்
றேற்றம தாக வினாய்நிற்ப ராலிவை யெண்ணிடுங்கால்
தேற்றம தாகு மிவள்பொருட் டேயென்றென் சிந்தனைக்கே. 20

இருவருமுள்வழி ஒருமையிற் போதல்.
89.
நம்மலந் தீர்க்குங் கலைசைச் சிதம்பர நாதர்வெற்பில்
செம்மல ரோன்பெற்ற சித்தியும் புத்தியும் சேர்ந்திருந்தாங்
கம்மது வார்பொழி லம்மட வார்மணந் தாரவர்க்கண்
டெம்மனத் திட்டமெல் லாஞ்சொல்ல வேநல்லவேல்வையிதே. 21

கையுறையேந்திநின் றவ்வகை வினாதல்.
90.
அரையொன்று நாகர் கலைசைத் தியாக ரறையருவி
நிரையொன்று குன்றத்தி லென்கைச்சிலீமுக நேர்ந்துதைப்பப்
புரையொன்று தண்பனிக் காலத்திற் றாமரை போன்றுறுதா
மரையொன்று வந்ததுண் டோமட வீருங்கள் வார்புனத்தே. 22

பாங்கி எதிர்மொழி கொடுத்தல்.
91.
செஞ்சர ணன்பர்க் களிப்பார் கலைசைத் தியாகர்மகிழ்
பஞ்சரம் பொன்சொரி தண்டக நாட பனிப்புறத்தைக்
குஞ்சரத் தோடொரு குஞ்சர மஞ்சிக் குருதிபொங்க
மஞ்சர வஞ்செய் புனத்தெங் கனாவிலும் வந்திலதே. 23

பாங்கி இறைவனை நகுதல்.
92.
தேய்ந்தநுண் சிற்றிடை யாய்தென் கலைசைத் தியாகர்வெற்பில்
பாய்ந்தசிங் கேறன்னர் மாம்பத் திரமெனும் பத்திரத்தால்
காய்ந்தவ ராகமன் றோர்திண்ண னாரெய்த கைக்ககத்தான்
மாய்ந்தவ ராகத்தின் மேலாஞ் சதிரின் மறைந்ததுவே. 24

பாங்கி மதியினில் அவரவர் மனக்கருத்துணர்தல்.
93.
ஏட்டையை நீக்குங் கலைசைத் தியாகர்வெற் பேந்துதினைக்
காட்டைப் புரக்குங் கருத்தே யிவட்கின்றிக் காவலர்மா
வேட்டைக்கு வேட்ட வருமல்லர் கூட்ட விருப்பமனப்
பூட்டைத் திறந்தினி தாக்காட்டு மாலிவர் பூங்கண்களே. 25

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.