LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தனித்தமிழ் அறிஞர் புலவர் கி.த.பச்சையப்பனார் மறைவுக்கு அஞ்சலி

தாய்மொழிக் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தமிழறிஞர் புலவர்  திரு. கி.த.பச்சையப்பன் அவர்கள் இன்று காலை சென்னையில் காலமானார். இவருக்கு வயது 82.

ஊடகங்களில் தமிழ் மணப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குபவர்களுள் புலவர் கி.த.பச்சையப்பன் அவர்கள் தலையாயவர். மொழிநடை ஆசிரியர் என்னும் பொறுப்பளிக்கப்பட்டு மொழிச்செப்பம் அமையத் தமிழ் ஓசை நாளேட்டில் பணிபுரிபவர்.

புலவர் அவர்கள் காலையில் புதுச்சேரியில் இருப்பார். பகலில் சென்னையில் போராட்டத்தில் இருப்பார். மறுநாள் கன்னியாகுமரியில் உண்ணாநோன்பில் தலைமை ஏற்பார். மறுநாள் தஞ்சையில் தமிழ்வழிக் கல்விக்குக் குரல் கொடுத்துப் பேசுவார். அந்த அளவு பம்பரமாகச் செய்பட்டவர்.

இளமையில் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பணிபுரிந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் கற்ற பெரும்புலமையாளர். தமிழாசிரியராகப் பல பள்ளிகளில் பணிபுரிந்தவர். புதுச்சேரி இந்தியாவுடன் இணையப் போராடி அடிபட்டவர். பிறப்பிலேயே வீரமும் தமிழ்ப்பற்றும், போராட்டக் குணமும் அமையப்பெற்ற நம் புலவர் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளில் தலைமை தாங்கிப் பணிபுரிபவர்.

மயிலம் கல்லூரிப் படிப்பிற்குப் (1955-59) பிறகு அரக்கோணம் ,செங்கழுநீர்ப்பட்டு, சென்னை உள்ளிட்ட ஊர்களில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழ், பொதுவுடைமை, பகுத்தறிவு, திராவிட இயக்க உணர்வை மாணவர்களுக்கு ஊட்டி வளர்த்தவர்.  தாய்மொழிக் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.

இவர் கடைசி மூச்சு வரை தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கணினி, செல்பேசிகளில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த ஆங்கிலத்திற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். இவர் தமிழாசிரியர் சங்கத்திற்கும் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவிற்கு தமிழாசிரியர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..



by Swathi   on 20 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
27-Sep-2018 08:59:58 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.தமிழறிஞர், தமிழாசிரியர்களின் தலைவர்,சுதந்திர போராட்ட வீரர், தற்போதய கணினி மற்றும் அழைபேசிகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர், திராவிட சிந்தனையை மாணவர்களுக்கு போதித்தவர்......, இவரது பன்முகத்தன்மையும், சுறுசுறுப்பும் நிச்சயமாக இன்றைய இளைஞர்களுக்கு பாடமாக அமையும்.இவ்வளவு சிறப்பு பெற்ற திரு கி த பச்சையப்பனாரை இழந்து வாடும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வலைதமிழோடு நானும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.