(இதற்கு முன்பு நானே மதிமயங்கி நோய்த்துன் புற்றேன்.) மதி மருண்டு மாலை படர் தரும் போழ்து- இன்று, கண்டாரெல்லாரும் மதிமயங்கும் வகை மாலை வரும் பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும்- இந்நகர் முழுதும் மயங்கி நோய்த் துன்புறும். மதி மருள என்பது ' மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. பதி முழுதும் துன்புறுவதால் யான் இறந்து படுவேன் என்பதாம். மாலை மயங்கி வரும் போழ்து என் பதி நிலை கலங்கி நோயுழக்கும் என்று ரைப்பார் மணக்குடவ பரிப்பெருமாளர்.
கலைஞர் உரை:
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.
Translation
If evening's shades, that darken all my soul, extend;
From this afflicted town will would of grief ascend.
Explanation
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.