|
||||||||
பகர ஒகர வருக்கம் |
||||||||
பொறியெனும் பெயரே பொடித்தெழு நுண்
சிறுகல னோடு மரக்கலம் செல்வம்
இலாஞ்சினை திருவும் ஐம்புலனு மோதிரமு
மெழுத்துமாம். ....1142
பொன்னெனும் பெயரே பொறியுங் கனகமும்
அழகும் வியாழமும் திருவுங் குபேரனும்
இரும்பு மெனவே யியம்புவர் புலவர். ....1143
பொழிலெனும் பெயரே யுலகமுஞ் சோலையும்
பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....1144
பொறையெனும் பெயரே பூமியும் பொறுமையும்
துறுகல் லுடனே மலையுஞ் சொல்லுவர். ....1145
பொங்க ரெனும்பெயர் மரத்தின் கோடும்
பொருப்பும் இலவ மரமும் புகலுவர். ....1146
பொருட்டெனும் பெயரே பொருப்பு மொக்குளும்
பங்கயப் பொன்னிறக் கொட்டையும் பகருவர். ....1147
பொருந ரெனும்பெயர் பொருபடை வீரரும்
கொற்றவர் பெயரும் கூத்தர்தம் பெயரும்
திண்ணியோர் பெயரும் செப்பப் பெறுமே. ....1148
பொகிலெனும் பெயரே புட்பொதுப் பெயரும்
கொப்புளு முகையுங் கூறப் பெறுமே. ....1149
பொம்ம லெனும்பெயர் பொலிவுஞ் சோறுமாம். ....1150
பொங்க லெனும்பெயர் மிகுதியுங் கொதித்தலும். ....1151
பொய்த்த லெனும்பெயர் மகளிர் விளையாடலும்
பொய்த்திடு சொல்லும் புகலப் பெறுமே. ....1152
பொத்தக மெனும்பெயர் சித்திரப் படாமும்
திருமுறைப் பெயருஞ் செப்புவர் புலவர். ....1153
பொய்யெனும் பெயரே பொந்தும் பொய்மையும். ....1154
பொச்சாப் பெனும்பெயர் மறவி பொல்லாங்குமாம்.....1155
பொறியெனும் பெயரே பொடித்தெழு நுண் சிறுகல னோடு மரக்கலம் செல்வம் இலாஞ்சினை திருவும் ஐம்புலனு மோதிரமு மெழுத்துமாம். ....1142
பொன்னெனும் பெயரே பொறியுங் கனகமும் அழகும் வியாழமும் திருவுங் குபேரனும் இரும்பு மெனவே யியம்புவர் புலவர். ....1143
பொழிலெனும் பெயரே யுலகமுஞ் சோலையும் பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....1144
பொறையெனும் பெயரே பூமியும் பொறுமையும் துறுகல் லுடனே மலையுஞ் சொல்லுவர். ....1145
பொங்க ரெனும்பெயர் மரத்தின் கோடும் பொருப்பும் இலவ மரமும் புகலுவர். ....1146
பொருட்டெனும் பெயரே பொருப்பு மொக்குளும் பங்கயப் பொன்னிறக் கொட்டையும் பகருவர். ....1147
பொருந ரெனும்பெயர் பொருபடை வீரரும் கொற்றவர் பெயரும் கூத்தர்தம் பெயரும் திண்ணியோர் பெயரும் செப்பப் பெறுமே. ....1148
பொகிலெனும் பெயரே புட்பொதுப் பெயரும் கொப்புளு முகையுங் கூறப் பெறுமே. ....1149
பொம்ம லெனும்பெயர் பொலிவுஞ் சோறுமாம். ....1150
பொங்க லெனும்பெயர் மிகுதியுங் கொதித்தலும். ....1151
பொய்த்த லெனும்பெயர் மகளிர் விளையாடலும் பொய்த்திடு சொல்லும் புகலப் பெறுமே. ....1152
பொத்தக மெனும்பெயர் சித்திரப் படாமும் திருமுறைப் பெயருஞ் செப்புவர் புலவர். ....1153
பொய்யெனும் பெயரே பொந்தும் பொய்மையும். ....1154
பொச்சாப் பெனும்பெயர் மறவி பொல்லாங்குமாம்.....1155
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|