LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

பகுத்தறிவுத் தெருக்கள்ள்

 

இரண்டொருநாள் நாங்கள் பிாிந்திருந்தோம்.
ஒரு நெடுந்தூரப் பயணம் நீ சென்றுள்ளாய் என்று
எனக்குத் தொியும்.
நாங்கள் சந்திக்காத தினங்களில்தான்
எமது சமூகங்களுக்கிடையில்
திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப!
நமது நகரம்
மீண்டும்
தாலி அறுத்துக் கிடந்தது.
எப்போதுமே காற்றுக்கு பொய்சொல்ல ஆசைதான்!
அது பெருவிரலால் நடந்து
கண்டபடி தூவியது கதைகளை. 
நகரத்தில்
சுவரொட்டிகளும், அவைகளைத் தாங்கிய பழைய மதில்களும்
அமைதியாய் இருக்க
மற்றெல்லாம் அதற்குச் செவிமடுத்து ஆடியதால்
தலைமயிரைக்கூட எழுப்பிவிட்டது
உணர்ச்சி!
இன்று 
மூன்று தினங்களின் பிறகு
உன்னைச் சந்தித்தேன்.
நெடுந்தூரப் பயணத்தின் களைப்பை
உன்முகத்தில் கண்டேன். 
இருந்தாலும் நகரம் இயங்கவில்லை
அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம்
இன்றும் சாியாகப் பாயவில்லை.
நாம் மட்டும் சினேகித்தோம்
அந்தப் பொது இடத்தில் நின்றபடி
உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்தனம் பற்றி
கருத்துகளை வௌியிட்டோம். 
பழையபடி
உன்னோடு நானும்
என்னோடு நீயுமென
நாம் இருவரும் ஒன்றாக மனங்களுக்குள் காற்று
புகவிட்டுக் கதைக்கின்ற,
தினமும்
கைசூப்பும் அந்தப் பருவத்தை அடைகின்ற,
இடத்திற்க நாம் போக மறியலுண்டு.
தெருக்களுக்குத் தொியும் 
தூவானம் அடங்கும்வரை
அவைகள் தேடாது. 

 

இரண்டொருநாள் நாங்கள் பிாிந்திருந்தோம்.

ஒரு நெடுந்தூரப் பயணம் நீ சென்றுள்ளாய் என்று

எனக்குத் தொியும்.

 

நாங்கள் சந்திக்காத தினங்களில்தான்

எமது சமூகங்களுக்கிடையில்

திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப!

 

நமது நகரம்

மீண்டும்

தாலி அறுத்துக் கிடந்தது.

 

எப்போதுமே காற்றுக்கு பொய்சொல்ல ஆசைதான்!

அது பெருவிரலால் நடந்து

கண்டபடி தூவியது கதைகளை. 

 

நகரத்தில்

சுவரொட்டிகளும், அவைகளைத் தாங்கிய பழைய மதில்களும்

அமைதியாய் இருக்க

மற்றெல்லாம் அதற்குச் செவிமடுத்து ஆடியதால்

தலைமயிரைக்கூட எழுப்பிவிட்டது

உணர்ச்சி!

 

இன்று 

மூன்று தினங்களின் பிறகு

உன்னைச் சந்தித்தேன்.

 

நெடுந்தூரப் பயணத்தின் களைப்பை

உன்முகத்தில் கண்டேன். 

 

இருந்தாலும் நகரம் இயங்கவில்லை

அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம்

இன்றும் சாியாகப் பாயவில்லை.

 

நாம் மட்டும் சினேகித்தோம்

அந்தப் பொது இடத்தில் நின்றபடி

உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்தனம் பற்றி

கருத்துகளை வௌியிட்டோம். 

 

பழையபடி

உன்னோடு நானும்

என்னோடு நீயுமென

நாம் இருவரும் ஒன்றாக மனங்களுக்குள் காற்று

புகவிட்டுக் கதைக்கின்ற,

தினமும்

கைசூப்பும் அந்தப் பருவத்தை அடைகின்ற,

இடத்திற்க நாம் போக மறியலுண்டு.

 

தெருக்களுக்குத் தொியும் 

தூவானம் அடங்கும்வரை

அவைகள் தேடாது. 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.