LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரிய சிந்தனைகள் :

 உயிர் விண்ணாம் சூக்குமம் ஆம் உடலுக்குள்ளே 
உயிர் சுழல விரியும் அலை சீவகாந்தம்
உயிர் காந்தம் உடலில் அணு அடுக்கைக் காக்கும்
...

உடலியக்கம் மனஇயக்கம் நடத்திவைக்கும் 
உயிர் காந்தம் உடலில் மின்குறுக்கு ஆனால்
உடலில் வலி நோய்கள் இவையாக மாறும்
உயிர் காந்தம் மின் குறுக்கால் வற்றிப் போனால்
உயிர் தாங்கும் வித்துடையும் உயிரும் போகும்.

-வேதாத்திரி மகரிஷி 

பஞ்ச பூதங்களின் கூட்டுதான் சீவன்கள் ஆகும். சீவன்களில்
கண்களால் காணக்கூடிய உடல் பரு உடலாகும். கண்களுக்குப்
புலப்படாத சூக்கும உடல் என்பது தன்னைத் தானே 
சுற்றிக்கொண்டும் உடல் முழுதும் சுற்றிக்கொண்டிருக்கக் 
கூடிய உயிர் துகள்களின் தொகுப்பே ஆகும். இதே போன்று 
கண்களுக்குப் புலப்படாத காந்த உடல் என்பது தன்னைத் 
தானே சுற்றிக்கொண்டிருக்கக் கூடிய உயிர் துகள்களிலிருந்து 
வெளியேறும் நுண் துகள்களான காந்தமும் அது உடல் முழுதும் 
சுற்றி கொண்டிருக்கும் ஓட்டமும் ஆகும். இக்காந்த ஓட்டம்தான்
அணு அடுக்குகளை சீராகக் காக்கிறது. இதுவே உடல் 
இயக்கங்களையும் மன இயக்கங்களையும் பராமரிக்கிறது.
அணு அடுக்கில் ஏதேனும் காரணத்தால் சீர்குலைவு
ஏற்பட்டால் அதை சீர்செய்ய அதிகமான சீவகாந்தம்
அங்கே குவியும்போது அது மின் குறுக்காகி, வலியாக
உணரப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி இடத்தால் அகன்றும்,
காலத்தால் நீட்டிக்கும்போது நோய் எனப் படுகிறது.
அதிகமான சீவகாந்தம் நோயைப் போக்க முயலும்போது
உடலை நடத்த போதுமான சீவகாந்தம் குறைவுபடுகிறது.
இத்தேவையை நிறைவு செய்யவேண்டி உயிர்த் துகள்கள்
வழக்கத்தைவிட வேகமாக சுழல்வதால் உடல் வெப்பம்
அதிகமாகி, அவ்வெப்பத்தைத் தாங்கமுடியாமல் வித்துக்
கலயம் உடைந்து சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு
வெளியேறிவிடுகிறது. உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த
சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு வெளியேறியதும்
உடலிலிருந்து உயிர் வெளியேறிவிடுகிறது. இதுவே 
மரணம் ஆகும்.
 
வாழ்க வளமுடன்.

--

by Swathi   on 14 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.