பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் மீது கடந்த 6-ம் தேதி காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடவில்லை எனவும், ராணுவ உடையில் வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக பாராளமன்றத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி நேற்று முன் தினம் தெரிவித்தார். இதற்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின் ஏற்பட்ட அமளியால் நாடாளமன்றம் நாள் முழுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நேற்று லோக்சபாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி மீண்டும் விளக்கமளித்தார், எல்லையில் நடந்த தாக்குதல் தொடர்பாக ராணுவத்தினர் அளித்த முதல் தகவலின் அடிப்டையில் தான் நேற்று அவ்வாறு தெரிவித்தேன். இந்நிலையில் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படையினரின் சிறப்பு பிரிவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது. சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கட்டுப்பாட்டுடன் நடப்பதை பாகிஸ்தான் பலவீனமாக எடுத்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
|