LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

சூதாட்ட சர்ச்சை காரணமாக பாகிஸ்தான் நடுவரை சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலிருந்து நீக்கியது ஐ.சி.சி. !

 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுப்பும் ஈடுபட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான நடுவர் குழுவில் இருந்து 
அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 
நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் 13 ஆட்டங்களுக்கு நடுவராக பணியாற்றிய இவர், பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி இருப்பதாகவும், இதனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் 
ஏற்பட்டுள்ளதாக கூறிய மும்பை போலீசார், அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கையில் 
இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக பணியாற்றும் குழுவில் ஆசாத் ரவுப்பும் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரது 
பெயர் சூதாட்டத்தில் அடிபடுவதால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் 
கூறுகையில், "நடுவர் ஆசாத் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து, அது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது நலனுக்காகவும், கிரிக்கெட் 
விளையாட்டின் நலனுக்காகவும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து அவரை விலக்குவது என்று முடிவு செய்தோம்" என்றார். 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுப்பும் ஈடுபட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான நடுவர் குழுவில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 


நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் 13 ஆட்டங்களுக்கு நடுவராக பணியாற்றிய இவர், பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி இருப்பதாகவும், இதனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறிய மும்பை போலீசார், அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக பணியாற்றும் குழுவில் ஆசாத் ரவுப்பும் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரது 
பெயர் சூதாட்டத்தில் அடிபடுவதால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், "நடுவர் ஆசாத் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து, அது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டின் நலனுக்காகவும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து அவரை விலக்குவது என்று முடிவு செய்தோம்" என்றார். 

 

by Swathi   on 24 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.