|
|||||
மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகிறார் நவாஸ் ஷெரீப் ! |
|||||
பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை அன்று 272 தொகுதிகளுக்கான பார்லிமென்ட் தேர்தலும், நான்கு மாகாணங்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அன்றிரவே
தொடங்கி நடைபெற்று வருகிறது. நவாஸ் ஷெரீப்பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், பெனசிர் புட்டோவின் மகன் பிலால் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், இம்ரான் கானின்,
தேரிக் -இ- இன்சாப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.பார்லிமென்டின் கீழ் சபையில், மொத்தமுள்ள, 272 இடங்களில், பாகிஸ் தான் முஸ்லிம் லீக் கட் சிக்கு, 125 இடங்கள் கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, 32 இடங்களும், தேரிக்-இ-இன்சாப் கட்சிக்கு, 34 இடங்களும், ஜாமியத் உலேமா -இ- இஸ்லாம் கட்சிக்கு, 11 இடங்களும் கிடைத்துள்ளன. இதனை அடுத்து பாகிஸ்தான்
பிரதமராக 13 ஆண்டுகளுக்கு பிறகு நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் ஆட்சியில் இந்தியாவுடனான நட்புறவு மீண்டும் மலரும் என, மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான்
குர்ஷித், நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி ஏற்க உள்ள ஷெரீப்புக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காஷ்மீர் முதல்வர், ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை அன்று 272 தொகுதிகளுக்கான பார்லிமென்ட் தேர்தலும், நான்கு மாகாணங்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அன்றிரவே தொடங்கி நடைபெற்று வருகிறது. நவாஸ் ஷெரீப்பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், பெனசிர் புட்டோவின் மகன் பிலால் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், இம்ரான் கானின், தேரிக் -இ- இன்சாப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.பார்லிமென்டின் கீழ் சபையில், மொத்தமுள்ள, 272 இடங்களில், பாகிஸ் தான் முஸ்லிம் லீக் கட் சிக்கு, 125 இடங்கள் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, 32 இடங்களும், தேரிக்-இ-இன்சாப் கட்சிக்கு, 34 இடங்களும், ஜாமியத் உலேமா -இ- இஸ்லாம் கட்சிக்கு, 11 இடங்களும் கிடைத்துள்ளன. இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமராக 13 ஆண்டுகளுக்கு பிறகு நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் ஆட்சியில் இந்தியாவுடனான நட்புறவு மீண்டும் மலரும் என, மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி ஏற்க உள்ள ஷெரீப்புக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காஷ்மீர் முதல்வர், ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
|
|||||
by Swathi on 13 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|