LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

பக்குவம்

 வாங்க ! வாங்க சார் !  வெங்காயம் கிலோ பதினைஞ்சு ரூபாய், தக்காளி கிலோ பத்து ரூபாய் என்று கூவி விற்றுக்கொண்டிருந்தான் தன்னாசி.தன்னாசியின் குடும்பத்தை சிறுவயது முதலே எங்களுக்கு தெரியும்.அந்த சந்தையில் வரிசையாக கூவி விற்று கொண்டிருப்பவர்களில் இவன் குரல் தனியாக தெரியும். நல்ல உச்சரிப்புடன் கூவுவான். நான் கூட தன்னாசி நீ ரேடியோ ஸ்டேசனுக்கு வேலைக்கு போயிருந்தா உன் உச்சரிப்புக்கே வேலைக்கு எடுத்திருப்பாங்க என்று நகைச்சுவையாக பேசுவதுண்டு.அதுக்கெல்லாம் எனக்கு கொடுப்பிணை இல்லைம்மா. படிப்பு ஏறலை, எங்க குடும்பம் எல்லாம் இந்த சந்தையிலேயே காய்கறி வியாபாரம் பண்றவங்க, அதுனால இதுல இழுத்து விட்டுட்டாங்க, எங்க காலமும் இப்படியே ஓடிடுச்சு.சொல்லிக்கொண்டே காய்கறிகளை வாகாய் பொறுக்கி போடுவான்.

 

இங்க பாரு தன்னாசி இந்த காய் சொத்தை மாதிரி இருக்கு, என்றவளிடம் அம்மா உங்களுக்கெல்லாம் அப்படிப்பட்ட காய் போட மாட்டேன் என்பான். அப்ப 

மத்தவங்களுக்கெல்லாம் போடுவ இல்லையா? என்று அவனை மடக்கி விட்ட திருப்தியி ல்கேள்வி கேட்டால் அம்மா கொஞ்சம் கீழே பாருங்கம்மா என்று காட்டுவான். அவன் காட்டிய 

இடத்தில் பழையதும் அழுகியதும் ஒரு கூடையில் வைக்கப்பட்டிருந்தது.இதெல்லாம்  எங்க போகுது? என்ற கேள்வியை வீசினேன்.எப்படியும் ஓட்டல்காரனுக்குத்தான் போடுவான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு.சாயங்காலம் ஒரு மாட்டுக்காரன்  வந்து வாங்கிக்குவான். சும்மாதான் கொடுப்பேன்.வாயில்லா ஜீவங்களும் கொஞ்சம் சாப்பிடட்டுமே. சொல்லிவிட்டு சிரிப்பான்.

 

திடீரென்று என்று எங்கள் பேச்சு தடைப்பட்டது. என்ன தன்னாசி என்று நோட்டும் கையுமாக ஒருவர் வந்து நிற்க கொஞ்சம் இருங்கம்மா என்று சொல்லி காய்கறிகள் வைத்திருக்கும் கீழ்ப்புறமுள்ள சாக்குப்பைக்குள் கையை விட்டு பணம் எடுத்து எண்ணி வந்தவர் கையில் கொடுத்தான். அவர் எண்ணி அதை நோட்டு புத்தகத்தில் குறித்துக்கொண்டு வரட்டுமா தன்னாசி என்று கிளம்பினார்.  

 

எனக்கு தேவையான காய்கறிகளை பொறுக்கி எடுத்து, கொண்டு வந்த பையில் போட்டு எவ்வளவு ஆச்சு? என்று கேட்டேன். சொன்ன தொகையை என் கையில் இருந்தகைப்பையில் இருந்து பணம் எடுத்து கொடுத்து விட்டு இது இங்கேயே இருக்கட்டும், நான் உள்ளே போய் கொஞ்சம் பழமெல்லாம் வாங்கிட்டு வந்திடறேன்.அவனும் என் காய்கறி கூடையை வாங்கி தன் பக்கத்தில் வைத்துக்கொண்டான்.நான் சந்தையின் உள் புறம் நடக்க ஆரம்பித்தேன்.

 

மதியம் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து வாயில் போடும்போதுதான் கவனித்தேன். கையிலிருந்த வளையலை காணவில்லை. மனது திடுக்கிட்டது. எங்கே போயிருக்கும்? ஒன்னரை பவுன் இருக்கும்.எங்கேயும் கழட்டி வைத்தது போல் ஞாபகம் இல்லை, காலையில் வெளியே கிளம்பும்போது கையில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியானால் எங்கே போயிருக்கும்.

 

அந்த காய்க்கடையில் காய்கறிகளை பொறுக்கி எடுத்தது ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது வளையல் கழண்டு விழுந்திருக்கலாமோ? மனதுக்குள் கேள்வி எழ அவசர அவசரமாய் வீட்டை பூட்டிக்கொண்டு அந்த வெயிலில்  காய்கறிகள் சந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

 

தன்னாசி, கடை முழுவதும் தேடிப்பார்த்து விட்டு உதட்டை பிதுக்கினான். வீட்டுல நல்லா தேடிப்பார்த்தீங்களாம்மா? கேட்டவனிடம் பார்த்துட்டேன் தன்னாசி என்று மட்டும் பதில் சொன்னேன். உள்ளே சென்று பழக்கடையிலும் தேடிவிட்டுஉதட்டை பிதுக்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

 

இன்றைய மதிப்பில் ஐம்பாதியிரம் ரூபாய்க்கு மேல் ஆகும். அவருக்கு தெரிந்தால் வீட்டில் கண்டிப்பாய் சண்டை தான். மனசு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. ஒரு வேளை தன்னாசி கடையிலே விழுந்திருந்தாலும் விழுந்திருக்குமோ, சுளையாக ஐம்பதாயிரம் மதிப்புள்ள வளையல் கிடைத்தால் யாருக்கு திருப்பி கொடுக்க மனசு வரும்? மனசு விரும்பாவிட்டாலும், அறிவு அவனாகத்தான் இருக்கும் என்று அடித்து சொன்னது.

 

வீட்டில் சொன்னவுடன் எதிர்பார்த்தது போல் அவர் சண்டைக்கு வரவில்லை. எங்கேயாவது கழட்டி வச்சிருப்ப, நல்லா தேடிப்பாரு,நிதானமா யோசி, சொல்லிவிட்டு அவர் வேலையை கவனிக்க சென்று விட்டார். எனக்கு தன்னாசி மேல்தான் சந்தேகம் இருப்பதால் மற்றவற்றை யோசிக்க முயற்சிக்கவில்லை.

 

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சந்தைக்குள் சென்றவள், தன்னாசியை பார்க்கவே வெறுப்பாக இருந்தது. இதற்கும் அவன் என்னம்மா வளையல் கிடைச்சுதா? என்று அக்கறையுடன் கேட்டதற்கு அது எப்படி கிடைக்கும் என்று குதர்க்கமாய் எதிர் கேள்வியை போட்டு அவன் கடையை விட்டு விலகி அடுத்த கடையை நோக்கி நடந்தேன்.

 

எப்பொழுதும் நாலு வார்த்தை அவனிடம் பேசிவிட்டு ஏதேனும் இரண்டு மூன்று காய் கறிகள் வாங்கிவிட்டுத்தான் அடுத்த கடையை நோக்கி போவேன். ஆனால் இன்று அவன் கடையில் நிற்கவே என் மனது கேட்கவில்லை. அவன் கவலையுடன் என்னை பார்ப்பது போல் என் உள்ளுணர்வு சொல்லியது.

 

மறு நாள் காலை எட்டு மணி இருக்கும், கதவு தட்டப்பட்டது,கதவை திறந்த என் கணவர் எதிரில் தன்னாசி நிற்பதை பார்த்ததும் என்ன தன்னாசி இந்நேரத்துக்கு இந்த பக்கம், அம்மா ஏதாவது சொல்லியிருந்ததா?  இல்லீங்கய்யா ! அம்மா வளையல் என் கடைக்கு வந்தபோது கானோம் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க, என் மேல கூட சந்தேகப்படற மாதிரி இருந்தது. நான் அப்படிப்பட்டவனெல்லம் இல்லையா ! என்று சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு கேட்டுக்கொண்டிருந்தது. என் கணவர் சே சே தன்னாசி என்ன சொல்றே? உன் அப்பா எங்கிட்ட படிச்ச பையன், நீயெல்லாம் என் கண் முன்னாடி வளர்ந்த பையன், அப்படி இருக்கும்போது அப்படியெல்லாம் நினைக்க மாட்டோம். இல்லீங்கய்யா அம்மா எப்பவும் என் கடையில எதுவும் வாங்கலியின்னா கூட நாலு நல்ல வார்த்தை பேசிட்டு போவாங்க, நேத்து சரியா கூட பேசாம போயிட்டாங்க அதனாலதான் மனசு கேக்கல, என்று கண்களில் கண்ணீர் வர பேசியவனிடம் காவேரி  முதல்ல காப்பி போட்டுட்டு வா, என்று சொல்லிவிட்டு முதல்ல உட்காரு, அன்று அவனை உட்கார வைத்தவர், நான் காப்பி போட்டு கொண்டு வந்ததை அவனிடம் கொடுத்து என்ன காவேரி நம்ம தன்னாசிய சந்தேகப்படறீயா? என்று கேட்டவருக்கு நான் "அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல", என்னை தப்பா நினைச்சுக்காத தன்னாசி, வளையல் தொலைஞ்சதுல மனசு

 

கொஞ்சம் வருத்தம் அவ்வளைவுதான்.அவனை சமாதானப்படுத்தி அனுப்பினோம். அன்று ஞாயிற்றுக்கிழமை, வெளியூரில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் 

எங்கள் மகளும், மகனும் வந்திருந்தார்கள். அவர்களை வைத்து சமையலறையை கொஞ்சம் சுத்தம் செய்யலாம் என்று கூப்பிட்டேன். என்னம்மா நீ என்று அலுத்துக்கொண்டே வந்த மகள் சமையலைறை ஓரத்தில் இருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாய் எடுத்து வெளியே வைத்துக்கொண்டிருந்தவள் அம்மா இங்க பாரு என்று எதையோ எடுத்து வந்து காட்ட அது என் வளையல். எங்கடீ கிடைச்சது?என்று கேட்டவளுக்கு, பாத்திரங்களுக்கு நடுவுல கிடந்தது என்றாள்.

 

காய்கறிகளுடன், வெங்காயத்தை கீழே கொட்டும்போது அதற்குள் கழண்டு இருந்த வளையல் உருண்டு அந்த பாத்திரங்களின் நடுவில் விழுந்திருக்கலாம் என முடிவு செய்தவள் என் கணவன் சொன்ன "தேடிப்பாரு" என்ற வார்த்தையை கேட்டு தேடி இருந்தால் பாவம் ஒரு அப்பாவி பையனின் மனதை நோக வைத்திருக்கவேண்டியதில்லையே.கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்தை நெருங்கிக்கொண்டிருக்கும் எனக்கு வயதுக்கு தகுந்த பக்குவம் வரவில்லையோ? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு நாளை தன்னாசியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

 

Maturity
by Dhamotharan.S   on 10 Aug 2016  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
15-Mar-2018 23:01:27 நிதியழகன் said : Report Abuse
நல்ல தலைப்பு, கதையை ஏன் நிறுத்திவிட்டிர்கள், படிப்பதற்கு அருமையாக இருந்தது, மிகவும் எதார்த்தமாக இருந்தது , பல பேர் வாழ்க்கையிலும் நடந்திருக்கு இந்த கதை .மிக நன்று.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.