LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்து இலக்கியம்

பழனியாண்டவன் காவடிச் சிந்து

 

பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர்
1
சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம்
2
கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே 
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும்
3
துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன்
4
செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை
5
ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன்
6
திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன்
7
இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல்
8
பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே 
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும்
9
படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும் 
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு
10
கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம்
11

 

பழனிப்பதி வாழும் - வேலர்

பாதம்தனை நாளும்

உளமேதினம் துதிக்க - வினை

ஒடுக்கும் கதிகொடுக்கும்

வளமேவிய பரனே - சுத்த

மடவாழு தந்திமுகனே

அழகாகிய குருவாய் - எனக்

கருள்வாய் முன்பு வருவாய்

1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர்

1

 

சிவகிரியில் வாழ்வோன் - எனைத்

தினமும் குடி ஆழ்வோன்

தவமேவிய குமரன் - புகழ்

தானே அடியேனே

நவமீறிய காவடிச் - சிந்து

நாடத் தினம் பாட

புவனச் சரசுவதியே - சிந்து

புகல வருவாயே

2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.

நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம்

2

 

கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி

கானத் தினைப் புனத்தில்

உள்ளமே மகிழ்வாகிக் - கிழ

உருவாய்ப் பரண் ஏகி

தெள்ளிய தினை மாவை - பொசித்

திலகும் அண்டர் கோவை

வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு

வருவாய் தோகை மயிலே 

3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும்

3

 

துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்

சுத்தனைப் பரிசுத்தனை

அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்

அடியாரைத் தினம்காப்போன்

எண்டிசை பணி நேசன் - தவம்

இலகும் கிரிவாசன்

வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு

வருவாய் தோகைமயிலே

4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்

துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்

அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன்

4

 

செய்ய தாண்டவ ராயன் - அருள்

சேயனைக் கார்த்தி கேயனை

துய்ய குஞ்சரி பங்கனை - அயில்

துலங்கும் கர துங்கனை

உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்

உளத்தில் குடி இருப்போன்

வையகம் புகழ் வேலனைக் - கொண்டு

வருவாய் தோகை மயிலே

5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்

சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்

குஞ்சரி - தெய்வயானை

5

 

ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்

கழகாகிய கண்ணன்

ஞானதே சிக போதன் - நவ

வீரரும் பணி நீதன்

தேனுலா விய கடப்ப - மலர்

செறிவோன் அருள் புரிவோன்

வானவர் பணி வேலனைக் - கொண்டு

வருவாய் தோகை மயிலே

6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்

நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்

நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன்

6

 

திங்கள் சேர் நுதல் - மீனாள்

தருதேனை முருகோனை

எங்கள் நாயகப் பொருளை - பணிந்

தேற்றார் மனத் திருளைத்

துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்

தொழுதே நிதம் கும்பிட்டேன்

மங்களம் உயர் வேலனைக் - கொண்டு

வருவாய் தோகை மயிலே

7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி

ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன்

7

 

இச்செகம் தனில் அடியேன் - உனை

ஏற்ற தினம் போற்ற

மிச்சமாய்க் கலிவருத்த - நான்

மெலிவேனோ அலைவேனோ

அச்சமாய்த் துயர் ஓட - அருள்

நாடகக் கவி பாட

வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு

வருவாய் தோகை மயிலே

8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை

வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல்

8

 

பூசுரர் வெகுமானி - சிவப்

பொருப்பில் வளர் ஞானி

தேச மேழும் புகழ் - காவடிப்

பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்

$........ ......... ......... ........

........ ......... ......... ........

வாசனை வடி வேலனைக் - கொண்டு

வருவாய் தோகை மயிலே 

9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.

பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும்

9

 

படியெழும் புகழ் இடும்பன் - தினம்

பணியும் மலர்க் கடம்பன்

அடியார் வினை பொடி - செய்திடும் 

மான புகழ் குமரன்

துடிமீறு மும்முரசன் - தெய்வம்

தொழுவாழ் கொலு வாசன்

வடிவேல் முருகனையே - கொண்டு

வருவாய் தோகை மயிலே

10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்

பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்

துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த

மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு

10

 

கர்த்தனாகிய முருகன் - அருள்

கனியும் திரு மருகன்

பத்தர்கள் மிக வாழி! - நிதம்

படிப்போர் தினம் வாழி!

சுத்தமா நகர் வாழும் - முத்துக்

கறுப்பணன் சொல் நாளும்

சித்தமேவிய பெரியோர் - தினம்

செழித்து மிக வாழி!

11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்

முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம்

11

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.