|
||||||||
பழனியாண்டவன் காவடிச் சிந்து |
||||||||
பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர்
1
சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம்
2
கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும்
3
துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன்
4
செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை
5
ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன்
6
திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன்
7
இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல்
8
பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும்
9
படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு
10
கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம்
11
பழனிப்பதி வாழும் - வேலர் பாதம்தனை நாளும் உளமேதினம் துதிக்க - வினை ஒடுக்கும் கதிகொடுக்கும் வளமேவிய பரனே - சுத்த மடவாழு தந்திமுகனே அழகாகிய குருவாய் - எனக் கருள்வாய் முன்பு வருவாய் 1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர் 1
சிவகிரியில் வாழ்வோன் - எனைத் தினமும் குடி ஆழ்வோன் தவமேவிய குமரன் - புகழ் தானே அடியேனே நவமீறிய காவடிச் - சிந்து நாடத் தினம் பாட புவனச் சரசுவதியே - சிந்து புகல வருவாயே 2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது. நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம் 2
கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி கானத் தினைப் புனத்தில் உள்ளமே மகிழ்வாகிக் - கிழ உருவாய்ப் பரண் ஏகி தெள்ளிய தினை மாவை - பொசித் திலகும் அண்டர் கோவை வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு வருவாய் தோகை மயிலே 3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும் 3
துண்ட வெண்பிறை அணிவோன் - அருள் சுத்தனைப் பரிசுத்தனை அண்டர் கோன் பயம் - தீர்ப்போன் அடியாரைத் தினம்காப்போன் எண்டிசை பணி நேசன் - தவம் இலகும் கிரிவாசன் வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு வருவாய் தோகைமயிலே 4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன் துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன் அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன் 4
செய்ய தாண்டவ ராயன் - அருள் சேயனைக் கார்த்தி கேயனை துய்ய குஞ்சரி பங்கனை - அயில் துலங்கும் கர துங்கனை உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர் உளத்தில் குடி இருப்போன் வையகம் புகழ் வேலனைக் - கொண்டு வருவாய் தோகை மயிலே 5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான் சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன் குஞ்சரி - தெய்வயானை 5
ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக் கழகாகிய கண்ணன் ஞானதே சிக போதன் - நவ வீரரும் பணி நீதன் தேனுலா விய கடப்ப - மலர் செறிவோன் அருள் புரிவோன் வானவர் பணி வேலனைக் - கொண்டு வருவாய் தோகை மயிலே 6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன் நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன் 6
திங்கள் சேர் நுதல் - மீனாள் தருதேனை முருகோனை எங்கள் நாயகப் பொருளை - பணிந் தேற்றார் மனத் திருளைத் துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத் தொழுதே நிதம் கும்பிட்டேன் மங்களம் உயர் வேலனைக் - கொண்டு வருவாய் தோகை மயிலே 7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன் 7
இச்செகம் தனில் அடியேன் - உனை ஏற்ற தினம் போற்ற மிச்சமாய்க் கலிவருத்த - நான் மெலிவேனோ அலைவேனோ அச்சமாய்த் துயர் ஓட - அருள் நாடகக் கவி பாட வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு வருவாய் தோகை மயிலே 8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல் 8
பூசுரர் வெகுமானி - சிவப் பொருப்பில் வளர் ஞானி தேச மேழும் புகழ் - காவடிப் பூசை சிறக்கும் தமிழ்புரக்கும் $........ ......... ......... ........ ........ ......... ......... ........ வாசனை வடி வேலனைக் - கொண்டு வருவாய் தோகை மயிலே 9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும். பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும் 9
படியெழும் புகழ் இடும்பன் - தினம் பணியும் மலர்க் கடம்பன் அடியார் வினை பொடி - செய்திடும் மான புகழ் குமரன் துடிமீறு மும்முரசன் - தெய்வம் தொழுவாழ் கொலு வாசன் வடிவேல் முருகனையே - கொண்டு வருவாய் தோகை மயிலே 10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன் பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ் துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு 10
கர்த்தனாகிய முருகன் - அருள் கனியும் திரு மருகன் பத்தர்கள் மிக வாழி! - நிதம் படிப்போர் தினம் வாழி! சுத்தமா நகர் வாழும் - முத்துக் கறுப்பணன் சொல் நாளும் சித்தமேவிய பெரியோர் - தினம் செழித்து மிக வாழி! 11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள் முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம் 11
|
||||||||
by Swathi on 25 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|