LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்.. - வித்யாசாகர்

எல்லோருக்கும் வேலை வேண்டும்
வீடு கட்டனும்
ஒய்யாரமா வாழணும்னு
நிறைய கனவுகளுண்டு

எனக்கு மட்டும்
எப்போதும்
கனவொன்று தான்

அதிலும்
நீ மட்டுமே இருப்பாய்

உன்னைப் பார்ப்பதற்காகவே
தூங்கிக் கொண்டிருப்பேன் நான்

நீயே என்னைக் கண்டாலும்
இப்போதெல்லாம்
பைத்தியமென்று தான்
சொல்லிப் போகிறாய்..

சொல் சொல்
ஒருநாள்
கனவுகள் நின்றுவிடும்

நீ தெருவில் வருவாய்
எல்லோரும் என்னை

அனாதை பிணமென்பார்கள்

உனக்கு மட்டும் உள்ளே
குறுகுறுக்கும்
பிறகு உனக்கும் கனவு வரும்
கண்ணீர் விட்டு நீயும் அழுவாய்
உன்னையும் சிலர் பைத்தியம் என்பார்கள்

நாளை உனக்கும்
கனவுகள் நிற்கலாம்
நீயும் அனாதைப் …லாம்

இப்படியான வேதனையைத் தான்
நம்மில் நிறையப்பேர்

காதலுக்கென வைத்திருக்கிறோம்..
 
------

பள்ளிவிடுமுறையில் தான்
நீ பார்க்க நீயாக இருப்பாய்

அந்த ரெட்டைப் பின்னல்
வெள்ளை ரிப்பனில்லை
முகமெல்லாம் சிரிப்பிருக்கும்

வெள்ளை ரவிக்கை
கரும்பச்சை தாவனியில்லை
கதவோரம் நின்று
ஒற்றைக் கொண்டையில் எட்டிப்பார்க்க
கிடைப்பாய்

மணி ஏழோ எட்டோ
கவலையில்லை
வாசலில்
பல் துளக்கியவாறே பேச துணிவாய்

போகும்போதும்
வரும்போதும் முறைக்கும்
அப்பா இல்லை
வீட்டிலிருந்தே மாற்றும் எஃப் எம் பாடலில்
மறைக்காது என் காதலைச்
சொல்வாய்..

வீட்டுப்பாடம்
என்று அமர்ந்துக்கொண்டு
புத்தகத்துள் என்
முகம் பார்த்து சிரிப்பாய்

எல்லாம்
அன்று நன்றாகத்தான் இருந்தது,

இன்று
ஏதுமில்லை
அந்த –
எப் எம் பாடல் கேட்டால்கூட வலி
படமொன்றுப் பார்க்கக்கூட
பயம்

உன்னை
நினைவுபடுத்தும்
எதையுமே நான் செய்வதில்லை
வாழ்க்கை
இப்படித்தான் போல்
நடக்கையில் இனிக்கும் நாட்களைப் போலல்லாது
பிரிவுக்குப்பின்
நினைவில்கூட உயிரைக் கொல்கிறது!!

அதனால் தான்
இதோ.. இங்குள்ளவர்களுக்கு தெரியும்
நானுன்னை –
நினைப்பதேயில்லை..

 

- வித்யாசாகர்

by Swathi   on 02 Apr 2015  0 Comments
Tags: Vidumurai   Kadhal   Kadhal Kavithai   Tamil Kadhal Kavithai   Vidhyasagar Kavithai   பள்ளிக்கூடம்   விடுமுறை  
 தொடர்புடையவை-Related Articles
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன் பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன்
அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம் அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம்
அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன் அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன்
சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன் சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன்
இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன் இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன்
எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன் எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.