LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

பணமூட்டை புகை மூட்டமானது !

சோற்றில் மண்ணைப் போடுதல்

தர்மமாகுமா?

காற்றில் விசத்தைக் கலத்தல்

நீதியாகுமா?

தூய்மைக்காற்றை மாசுபடுத்தல்

நல்லதாகுமா?

மக்கள் தினம் அவதிபடுதல்

மனிதநேயமா?

நோய்கள் தாக்க வழிசெய்தல்

இதயம் தாங்குமா?

 

உலகெங்கும் உன் சொத்து

மதிப்பே பல கோடி

நாளெல்லாம் அதன் பேச்சு

நிம்மதியோ ஓடிப்போச்சு!

 

ஏழை சிறுகுப்பை எரித்தல்

பெரும் குற்றம் நொடியில்

நீதிதேவன் வாசலில் நிற்பான்

கனமுள்ளவன் காட்டை எரிப்பான்

காப்பதற்கும் அரசும் துணைநிற்கும்

தீ அணைப்பதற்கும் வானில்

பணமழை பெய்யும் நீதிகேட்டால்

முக்கியப் புள்ளிகளாம்

மௌனமே பதிலாகும் என்றும்

ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!

 

மக்கள்  அரசு நீதி காக்கும்

பேதமின்றி கண்ணீர் துடைக்கும்

பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும்

புகைமூட்டக் கண்ணாமூச்சுகள்

காற்றாய்ப் பறந்து போகும்!

 

இயற்கைதனை அழிப்போர்

இறைவனின் எதிரியென்போம்

படைத்தவன் நமக்களித்த

வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும்

அரக்கனை அழிப்போம்

பணத்துக்குச் சோரம் போகும்

கொடியோரின் கருவறுப்போம்

தலைமுறையும் துளிர்க்காமல்

காவல் காப்போம்!

செயற்கைப் பேரிடர்

நந்தவனப் பயிர்களும் உயிர்களும்

அற்ப ஆயுளை முத்தமிடல்  

கொடுமையின் உச்சம்!  

 

இறைவனின் அருட்கொடை

மனிதன் இயற்கையை

நேசிப்பதும் சுவாசிப்பதும்

காப்பதும் வாழ்த்துவதும்

உரிமையும் பெற்றவன்!

 

இயற்கையைக் காக்க

உள்ளத்தையும் உயிரையும்

அள்ளித்தருவோம் மடமையில்

எதிர்போரைக் கிள்ளி எறிவோம்

அடுத்த தலைமுறைக்கு இயற்கையை

விட்டுவைப்போம் செழிப்பாய்

அதுவரையில் உயிராய்க்

காத்து நிற்போம்!

by Swathi   on 08 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.