|
||||||||
பனீர் பராத்தா (paneer paratha) |
||||||||
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப் பனீர் - 200 கிராம் வெங்காயம் - 2 சீரகம் - 2 டீஸ்பூன் மஞ்சள்பொடி - ஒரு டீஸ்பூன் காரப்பொடி - 2 டீஸ்பூன் கரம்மசாலா - 1 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி தழை-சிறிது எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.பாத்திரத்தில் கோதுமை மாவை எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைந்து வைக்கவும். 2.கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 3.பிறகு அதில் மஞ்சள் பொடி, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து துருவிய பனீர், தேவையான உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கவும். 4.பின்பு பிசைந்து வைத்திருக்கும் மாவை அதை ஒரு சிறிய பூரி அளவு இட்டு, அதில் பனீர் பூரணம் வைத்து கனமான பராத்தாகளாக இடவும். 5.தவாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் பராத்தாவைப் போடவும்.நன்கு வெந்ததும் எடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|