தேவையானவை :
பனீர்-200 கிராம் பட்டாணி-200 கிராம் வெங்காயம்-2 ப.மிளகாய்-4 உப்பு-தே.அளவு எண்ணை-1 டீஸ்பூன் கடுகு-1/4 டீஸ்பூன் உ.பருப்பு-1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை-1
செய்முறை :
1.பன்னீரை உதிர்த்துக் கொள்ளவும்.பட்டாணியை வெதுவெதுப்பான நீரில் 2 நிமிஷம் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
2.வெங்காயம்,ப.மிளகாயை நீள நீளமாக அரிந்துக் கொள்ளவும்.
3.அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணைய் விட்டு கடுகு,உ.பருப்பு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4.வதங்கியபின் பட்டாணியை சேர்த்து கிளறவும்.மூடி போட்டு சில நிமிடம் வேக விட வேண்டும்.பின் பனீரையும் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும்.
5.தண்ணீர் வற்றி எல்லாம் சேர்ந்தாற் போல் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.
|