LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!

வரும் 2016ம் ஆண்டு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்த டெல்லி தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிக பழமையான தமிழ் சங்கங்களுள் ஒன்றாக கருதப்படும் டெல்லி தமிழ் சங்கம், கடந்த 1946ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கியது முதல், தமிழ் மொழியை தலைநகரில் வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை இத்தமிழ்ச் சங்கம் மேற்கொண்டு வருகிறது.

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருக்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களை அழைக்க தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுவரை, தமிழ் மொழியை மையமாகக் கொண்டு எந்த ஒரு மாநாடும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு அனைத்து இந்திய தமிழ் சங்கங்களின் மாநாடு நடைபெற்றது. ஆனால், தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்குபெறும் ஒரு முக்கிய மாநாடு டெல்லியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 மற்றும் 6-ம் தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தவும், இந்த மாநாட்டை துவக்கி வைக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், நிறைவு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அழைக்க டெல்லி தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ் மக்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 500 தமிழ் அறிஞர்கள், மொழி ஆர்வலர்கள் மற்றும் முக்கிய நபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் 50 பேரை அழைக்க டெல்லி தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் நடைபெறும் இந்த மாநாடு உலகளவில் முக்கியத்துவம் பெரும் என டெல்லி வாழ் தமிழர்கள் கருதுகின்றனர்.

by Swathi   on 08 Sep 2015  0 Comments
Tags: Literature Conference   Tamil Conference   Tamil Conference Delhi   Delhi Tamil sangam   Delhi Tamil Sangam 2016   Delhi Tamil Sangam Events   பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு  
 தொடர்புடையவை-Related Articles
உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !! உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!
13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்
வாசிங்டனில் புறநானூறு வாசிங்டனில் புறநானூறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.