LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் - முனைவர் இரா. பிரபாகரன்

பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் - முனைவர் இரா. பிரபாகரன்

கல்விப் பயணம்:

    தமிழ்மொழியின் சிறப்பு என்னவென்றால் மற்ற மொழியில் விற்பன்னராக இருப்பவர் கூட தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டவராக இருப்பார். இதுவே தமிழ் மொழியின் ஆகச்சிறந்த சிறப்பு ஆகும். அவ்வழி இரா. பிரபாகரன் அவர்கள் இளங்கலை, முதுகலையில் கணிதம் பயின்றவர். தன்னுடைய பள்ளிப் படிப்பில் பலமுறை இடைநின்று பல ஊர்களுக்குச் சென்று படித்தவர். 1960களின் இறுதியில் அமெரிக்கா சென்றவர். தற்போதும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

திருக்குறள் ஆர்வம்:

    இரா. பிரபாகரன் அவர்களின் தந்தை திருக்குறள் மீது தீராத காதல் கொண்டவர். சிறுவயதிலேயே தன்னுடைய குழந்தைகளுக்கும் திருக்குறள் ஆர்வத்தை விதைத்தவர். இதனாலேயே பிரபாகரன் அவர்களும் திருக்குறள் மீது காதல் கொண்டவராக வளர்ந்தார். இதனாலே இவர் அமெரிக்கா சென்ற பிறகும், பல ஆண்டுகள் கழித்தும் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நிகழ்த்தினார்.

இயற்றிய புத்தகங்கள்:

    புறநானூறு 400 பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார். குறுந்தொகை நூலுக்கும் உரை எழுதியுள்ளார். திருக்குறளின் பெருமையை மற்ற மொழியினரும் அறிய வேண்டும் என்று எண்ணி வுரந யுபநடநளள றுளைனழஅ என்ற நூலை இயற்றினார்.

பன்னாட்டு மாநாடுகள்:

    முனைவர் இரா. பிரபாகரன் அவர்கள் தமிழ் மொழி மீது கொண்ட பற்றால் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் அமெரிக்காவில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். பிறகு பன்னாட்டுப் புறநானூறு மாநாடும், பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடும் நடத்தப்பட்டன. இந்த மாநாடுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசளிக்கப்பட்டன.

திருக்குறள் - பொது முறை:

    மறை என்றால் மறைக்கப்பட்டது என்று பொருள். திருக்குறளை ‘பொது மறை’ என்று கூறுவது பொருத்தமற்றது. ஏனெனில் திருக்குறளில் மறைக்கப்பட்ட செய்திகளோ, இரகசிய செய்திகளோ கிடையாது எனவே திருக்குறளை ‘பொது முறை’ என்றே கூற வேண்டும். திருக்குறளை முக்கியமாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே திருக்குறளை அவர்களுக்குப் புரியும் வண்ணம் கதைகள் மூலமாகவோ, பிற வழிகள் மூலமாகவோ எடுத்துச் சொல்ல வேண்டும்.

சங்க இலக்கியம்:

    சங்க கால வாழ்வியலை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது சங்க இலக்கியம். வீரம், கொடை, அன்பு, அருள், நட்பு, விருந்தோம்பல், கல்வி, காதல், கற்பு என அனைத்து பண்புகளையும் எடுத்துரைக்கிறது. சங்க கால பெண்களும் வீரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். சங்க இலக்கியத்தை 470 புலவர்கள் இயற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் அடிப்படையிலேயே புலவர்கள் கிடையாது. ஆனால் அக்காலத்தில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே தான் பல துறைகளைச் சார்ந்தவர்களும் பாடல்களை இயற்றியுள்ளனர். சங்க இலக்கியத்தில் 39 பெண் புலவர்கள் இடம் பெறுகின்றனர். வேறு எந்த நாட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண் புலவர்கள் பாடல்கள் இயற்றியதாகச் சான்றுகள் இல்லை. இவை அனைத்தும் சங்க இலக்கியத்தின் சிறப்புகள் ஆகும்.

தமிழர்கள் உணர வேண்டியவை:

    தமிழர்கள் அனைவரும் தமிழால் ஒன்றுபட வேண்டும். அடிப்படையில் தமிழர்கள் தங்களுடைய அடையாளமாகத் தமிழை எண்ண வேண்டும். தமிழ் மொழி வழியாகவே கல்வி பயில வேண்டும். தமிழைச் சரியாக உச்சரிக்க வேண்டும். சாதி, மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ‘தான் தமிழன்’ என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும்.

by Lakshmi G   on 24 Sep 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.