LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

பன்னிரு நாமம்

தனியன்
பன்னிரு நாமந் திருவத்தி யூர்ப்பரன் பாதமென்று
நன்னிற நாமம் படைதிக்கி யாவையு நாமறியத்
தென்னந் தமிழ்த்தொடைச் சீரார் கலித்துறை யோதியீந்தான்
மின்னுறு நூமலர் வேங்கட நாதனந் தேசிகனே.

கார்கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி
ஏர்கொண்ட கீர்த்தி யிராமா னுசன்ற னிணையடிசேர்
சீர்கொண்ட தூப்புற்f திருவேங்க டாரியன் சீர்மொழியை
யார்கொண்டு போற்றினு மம்மால் பதத்தை யடைவிக்குமே.

11.1:
கேசவனாய்நின்று கீழைத் திசையிலு நெற்றியிலுந்
தேசுடையாழிகள் ணான்குடன் செம்பசும்பொன் மலைபோல்
வாசிமிகுத்தெனை மங்காமற் காக்கு மறையதனால்
ஆசைமிகுத்த அயன்மகவேதியிலற்புதனே.

11.2:
நாரணானாய் நல்வலம்புரி நாலுமுகந்தெ டுத்தும்
ஊரணிமேகமெனவே யுதரமுமேற்குநின்றும்
ஆரணநூறந் தருளால் அடைகலங்கொண்டருளும்
வாரணவெற்பின்f மழைமுகில்போல் நின்ற மாயவனே.

11.3:
மாதவநாமமும் வான்கதை நான்குமணிநிறமும்
ஓதுமுறைப்படியேந்தி யுரத்திலுமேலுமல்கிப்
போதலர் மாதுடன் புந்தியி லன்பாற் புகுந்தளிக்குந்
தூதனு நாதனு மாய தொல் லத்தி கிரிச்சுடரே.

11.4:
கோவிந்த னென்றுங் குளிர்மதி யாகிக் கொடியவரை
யேவுந் தனுக்க ளுடன்றெற்கிலுமுட் கழுத்து நின்று
மேவுந்திருவருளால் வினைதீர்த்தெனை யாண்டருளும்
பூவன் றொழவத்தி மாமலை மேனின்iன்ற புண்ணியனே.

11.5:
விட்டுவல வயிற்றிங்கண் வடக்கும் விடாது நின்று
மட்டவிழ் தாமரைத் தாது நிறங்கொண்ட மேனியனாய்த்
தொட்ட கலப்பைக ளீரிரண்டாலுந்து யரறுக்குங்
கட்டெழிற்சோலைக் கரிகிரி மேனின்ற கற்பகமே.

11.6:
மதுசூதன னென்வலப்புயந்f தெங்கிழக்கென்றிவற்றிற்
பதியாயிருந்து பொன்மாதுறை பங்கய வண்ணனுமாய்
முதுமாவினைகளறுக்கு முயலங்களீரிரண்டான்
மதுவாரிளம் பொழில் வாரணவெற்பின் மழைமுகிலே.

11.7:
திருவிக்கிரமந்றிகழ் தீநிறத்தன் தெளிவுடைவா
ளுருவிக்கரங்களிலீரிரண்டேந்தி வலக்கழுத்துஞ்
செருவிக்கிரமத் தரக்கர்திக்குஞ் சிறந்தாளுமிறை
மருவிகரிகிரிமேல் வரந்தந்திடு மன்னவனே.

11.8:
வாமனனென்றன் வாமோதரமும் வாயுவிந்திசையுந்
தாமமடைந்து தருண வருக்கனிறத்தனுமாய்ச்
சேமமரக்கலஞ்f செம்பவி யீரிரண்டாற் றிகழு
நாமங்கைமேவிய நான்முகன்வேதியில் நம்பரனே.

11.9:
சீரார்சிரீதரனாய்ச் சிவன்திக்குமிடப்புயமும்
ஏராரிடங்கொண்டு இலங்குவெண்டாமரை மேனியனாய்ப்
பாராய பட்டய மீரிரண் டாலும் பயமறுக்கும்
ஆராவமுது அத்திமாலைமேல் நின்றவச்சுதனே.

11.10:
என்னடிகேசனிறை கீழிடக்கழுத் தென்றிவற்றி
னநன்னிலைமின்னுருவாய் நாலுமுற்கரங்கொண்டளிக்கும்
பொன்னகில் சேர்ந்தலைக்கும் புனல்வேகை வடகரையிற்
றென்னுகந்து தொழும் தேனவேதியர் தெய்வமொன்றே.

11.11:
எம்பற்ப நாபனும் என்பின்மனம்பற்றி மன்னி
நின்றுவெம்பொற் கதிரவனாயிர மேவியமெய்யுருவா
யம்பொற்கரங்களில் ஐம்படைகொண்டஞ்ச லென்றளிக்குஞ்
செம்பொற்றி ருமதிள்சூழ் சிந்துராசலச் சேவகனே.

11.12:
தாமோதரனென்றன் தாமங்கள் ணாலுகரங்களிற்f கொண்டு
ஆமோதரமென வாக்த்தினுட் புறம்பிற் கழுத்துந்
தாமோரிளங்க திரோனென வென்னுளிருளறுக்கு
மாமோக மாற்றும் மதிளத்தியூரின் மரகதமே.

11.13:
கத்திதிரியுங்கலை களைவெல்லுங்f கருத்தில்வைத்துப்
பத்திக்குறுதுணை பன்னிருநாமம் பயில்பவர்க்கு
முத்திக்கு மூலமெனவே மொழிந்த விம்மூன்றுநான்குந்
தித்திக்குமெங்க டிருவத்தியூரைச் சேர்பவர்க்கே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு : கேசவன், நாரணன், மாதவநாமம்,
கோவிந்தன், விட்டு, மதுசூதனன், திரிவிக்கிரமன்,
வாமனன், சீரார், என்னிடிகேசன், எம்பற்பநாபன்,
தாமோதரன், கத்தி, நாவலர்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.