LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

பறவைக்கும் கடிதம் எழுது

 

கண் கழன்று விழுகிறது.
இங்குள்ள அக்கிரமம் தாங்கொண்ணா
மனம் சிதறி வெடிக்கிறது.
வா!
எங்காவது தூரத்திற்கு ஓடுவோம்.
மாலைக் கருக்கலில் வானத்தில் மூலைக்கு உள்ளால்
ஒரு பறவை பறக்குமே
அதனிடம் கேட்டு நிம்மதியான ஒரு இடத்தைத் தெரிவுசெய்து கொள்ளலாம்.
வா!
மூட்டை முடிச்சுகளைக் கட்டு
இங்கிருந்தால்
உணர்ச்சி நரம்புகளில் வெடிப்புக் கூடிவிடும்.
சதை நார்கள்கூடக்
கிழியும்.
அந்தப் பறவைக்கு நீ
ஒரு கடிதம் எழுதியாவது போடு.
உன் வாலில் தொங்குகிறோம் என்று சொல். 
மூளை
அடைக்கோழியின் முட்டைபோல்
இப்போது இருக்கிறது.
அதில் பதிவு செய்யப்பட்ட அவளது நினைவுகளும்
ஞாபக மறதியாய்ப் போகின்ற அளவுக்கு
ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு சூரியனாய்
நிலம் கொதிக்கிறது.
பறவையைக் கூப்பிடு
அதோ செக்கலுக்குள் வருகிறது.
காற்றில் மிதந்து வருகின்ற அதற்கு
நமது பெருமூச்சுகளைத் தூதனுப்பு.
அதற்கென்ன
இறக்கையெல்லாம் சுதந்திரத்தின் சிரிப்பு!
தனை மறந்த பாட்டு!
காற்று மெத்தையிலே பயணம்!
பறவையைக் கூப்பிடு!
உன் காலில் தொங்குகிறோம் என்றாவது சொல்.
அதன் நகம் கிழிந்து நமக்கு முடை வராது.
உயிரைச் சீலைக்குள் முடிந்து வாழுதல் கடினம்.

 

கண் கழன்று விழுகிறது.

இங்குள்ள அக்கிரமம் தாங்கொண்ணா

மனம் சிதறி வெடிக்கிறது.

வா!

எங்காவது தூரத்திற்கு ஓடுவோம்.

மாலைக் கருக்கலில் வானத்தில் மூலைக்கு உள்ளால்

ஒரு பறவை பறக்குமே

அதனிடம் கேட்டு நிம்மதியான ஒரு இடத்தைத் தெரிவுசெய்து கொள்ளலாம்.

 

வா!

மூட்டை முடிச்சுகளைக் கட்டு

இங்கிருந்தால்

உணர்ச்சி நரம்புகளில் வெடிப்புக் கூடிவிடும்.

சதை நார்கள்கூடக்

கிழியும்.

அந்தப் பறவைக்கு நீ

ஒரு கடிதம் எழுதியாவது போடு.

உன் வாலில் தொங்குகிறோம் என்று சொல். 

 

மூளை

அடைக்கோழியின் முட்டைபோல்

இப்போது இருக்கிறது.

அதில் பதிவு செய்யப்பட்ட அவளது நினைவுகளும்

ஞாபக மறதியாய்ப் போகின்ற அளவுக்கு

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு சூரியனாய்

நிலம் கொதிக்கிறது.

 

பறவையைக் கூப்பிடு

அதோ செக்கலுக்குள் வருகிறது.

காற்றில் மிதந்து வருகின்ற அதற்கு

நமது பெருமூச்சுகளைத் தூதனுப்பு.

அதற்கென்ன

இறக்கையெல்லாம் சுதந்திரத்தின் சிரிப்பு!

தனை மறந்த பாட்டு!

காற்று மெத்தையிலே பயணம்!

 

பறவையைக் கூப்பிடு!

உன் காலில் தொங்குகிறோம் என்றாவது சொல்.

அதன் நகம் கிழிந்து நமக்கு முடை வராது.

உயிரைச் சீலைக்குள் முடிந்து வாழுதல் கடினம்.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.