மனதை நெகிழ வைத்துள்ள விருத்தாச்சலம் சம்பவம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
திருநங்கையாக மாறிய தன் மகனுக்கு ஒரு பெற்றோர் பூப்புனித நீராட்டு விழாவினை நடத்தி உள்ளனர். கொளஞ்சி,அமுதா தம்பதியினரின் மகன் நிஷாந்த். 21 வயதினை உடையவர். தனக்கு பெண்ணாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை வீட்டில் தெரிவித்தவுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் நிஷாந்த். திருநங்கைகளுடன் இருந்து, அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.நிஷா என தன் பெயரை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்த தனது மகனை வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்து பெண் பிள்ளைக்கு செய்வது போலவே பூப்புனித நீராட்டு விழாவினை நடத்தியுள்ளனர் பெற்றோர். நண்பர்களும், உறவினர்களும் பங்குபெற்று வாழ்த்தியுள்ளனர். தனது மகனை புரிந்து பெண்ணாகவே நினைத்து இச்சடங்கினை அவர்கள் செய்துள்ளனர்.
உடலமைப்பில் ஆணாக இருப்பினும் உணர்வுகளில் பெண்ணாக உணருபவர்கள் திருநங்கைகள். அவர்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது மிகச்சிறந்த விழிப்புணர்வுக்கான உதாரணம். திருநங்கைகளை கண்ணியத்துடன் நடந்துவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை பொதுமக்கள் உணர்வதும் அவசியமாகிறது.
|