LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பரிபாடல்-2

 

கடவுள் வாழ்த்து
4. திருமால்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: பெட்டனாகனார்
பண் :: பாலையாழ் 
புகழ்தலை ஒழியோம்
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை;
இரணியனைத் தடித்தமை
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியொடு, 20
தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;
வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை
புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35
கருடக் கொடி
சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45
பாம்பு சிறை தலையன;
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;
பகையும் நட்பும் இன்மை
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; 'நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்' எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65
பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73
5. செவ்வேள்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: கண்ணனாகனார்
பண் :: பாலையாழ் 
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய 5
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ-இரு கயந்தலை! 10
வேலனது வெறிப்பாட்டு
மூ-இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
சால்வ! தலைவ! எனப் பேஎ விழவினுள்,
வேலன் ஏத்தும் வெறியும் உளவே; 15
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்;
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
சிறப்பினுள் உயர்பு ஆகலும்,
பிறப்பினுள் இழிபு ஆகலும், 20
ஏனோர் நின் வலத்தினதே;
முருகப் பிரானின் பிறப்பு
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு, 30
விலங்கு என, விண்னோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள; 35
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
சாலார்; தானே தரிக்க என, அவர் அவி 40
உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்; 45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழா அது நிற் சூலினரே;
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, 50
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
தேவர் சேனைக்குத் தலைவனாதல்
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய 55
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத்
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; 60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், 65
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்
தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். 70
முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை-
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீர் இலோரும்,
அழி தவப் படிவத்து அயரியோரும், 75
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்
நின் நிழல்;
முருகப் பெருமானிடம் வேண்டுதல்
அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்-
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! 81
6. வையை
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ் 
வைகையில் பெரு வெள்ளம்
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் 5
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
தாயிற்றே தண் அம் புனல். 10
புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும், வையை வரவு.
வையையின் கரை உடைதலும், ஊரார்கிளர்ந்து எழுதலும்
தொடி தோள் செறிப்பத் தோள்வளை இயங்கக்
கொடி சேரா, திருக் கோவை காழ் கொளத் 15
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க, 20
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
வரைச் சிறை உடைத்ததை வையை: ' வையைத்
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக எனும்
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று
மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்
அன்று, போர் அணியின் புகர்முகம் சிறந்தென, 25
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல:
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்--
ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின் 30
அணி அணி ஆகிய தாரர், கருவியர்,
அடு புனலது செல அவற்றை இழிவர்;
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர், 35
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர்ஊர்பு இடம் திரீஇச்
ஆற்றினது நீரோட்டம்
சேரி இளையர் செல அரு நிலையர்,
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர, 40
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும், யாறு வரலாறு.
அந்தணர்கள் கொண்ட கலக்கம்
நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,
புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு. 45
பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்
மாறு மென் மலரும், தாரும் கோதையும்,
வேரும் தூரும், காயும் கிழங்கும்,
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப 'நலன் அழிந்து,
வேறாகின்று இவ் விரி புனல் வரவு' என, 50
சேறு ஆடு புனலது செலவு
வரை அழி வால் அருவி வாதாலாட்ட,
கரை அழி வால் அருவிக் கால் பாராட்ட,
'இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
புரைவது பூந் தாரான் குன்று' எனக் கூடார்க்கு 55
உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடிச்,
சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்
தான் மலர்ந்தன்றே
தமிழ் வையைத் தண்ணம் புனல். 60
இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்
'விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்,
'தளிர் அறிந்தாய், தாம் இவை.'
களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்
'பணிபு ஒழி பண்ப!--பண்டெல்லாம் நனி உருவத்து;
என்னோ துவள் கண்டீ?--
எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக் 65
கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
செய்ததும் வாயாளோ? செப்பு.'
தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என
'புனை புனை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
பெருக்கு அன்றோ, வையை வரவு?' 70
தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து உரைத்தல்
'ஆம் ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் --- சூள் உறல்!--- வையைப்
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும், 75
குருகு இரை தேரக் கிடக்கும்___பொழி காரில்,
இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்
வையை வயமாக வை.
செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை; 80
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்
அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,
பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் 85
கனற்றுபு காத்தி, வரவு!'
தலைமகன் மேலும் கூறுதல்
'நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்
அல்லா விழுந்தாளை எய்தி, எழுந்து ஏற்று யான்
கொள்ளா அளவை, எழுந் தேற்றாள்: கோதையின் 90
உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது?' என--
காதற் பரத்தை கூற்று
தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்
யாறு உண்டோ? இவ் வையை யாறு .
தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை
'இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்
தலை தொட்டேன், தண் பரங்குன்று!' 95
விறலிக்குத் தலைமகள் கூறுதல்
'சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே
வல் இருள் நீயல்; அது பிழையாகும்' என, 100
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து
வல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்!
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
வாடற்க, வையை! நினக்கு. 106

கடவுள் வாழ்த்து
4. திருமால்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்இசையமைத்தவர் :: பெட்டனாகனார்பண் :: பாலையாழ் 
புகழ்தலை ஒழியோம்
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்குஇறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை;நோனார் உயிரொடு முரணிய நேமியை;
இரணியனைத் தடித்தமை
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்பிருங்கலாதன் பலபல பிணி படவலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்துஅலர்ந்த புகழோன், தாதை ஆகலின்இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-படிமதம் சாம்ப ஒதுங்கி,இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,வெடி படா ஒடி தூண் தடியொடு, 20
தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;
வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை
புருவத்துக் கரு வல் கந்தத்தால்தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,மேவல் சான்றன, எல்லாம். 35
கருடக் கொடி
சேவல் ஓங்கு உயர் கொடியோயே!சேவல் ஓங்கு உயர் கொடிநின் ஒன்று உயர் கொடி பனை;நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;நின் ஒன்று உயர் கொடி யானை; 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;அவன் மடிமேல் வலந்தது பாம்பு;பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45
பாம்பு சிறை தலையன;பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவைகொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;
பகையும் நட்பும் இன்மை
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,மாற்று ஏமாற்றல் இலையே; 'நினக்குமாற்றோரும் இலர்; கேளிரும் இலர்' எனும்வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;நின்னில் சிறந்த நிறை கடவுளவை;அன்னோர் அல்லா வேறும் உள; அவைநின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65
பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினைஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;அவரவர் ஏவலாளனும் நீயே;அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

5. செவ்வேள்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்இசையமைத்தவர் :: கண்ணனாகனார்பண் :: பாலையாழ் 
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய 5
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகைமாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,மலை ஆற்றுப் படுத்த மூ-இரு கயந்தலை! 10
வேலனது வெறிப்பாட்டு
மூ-இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!சால்வ! தலைவ! எனப் பேஎ விழவினுள்,வேலன் ஏத்தும் வெறியும் உளவே; 15
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்;சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;சிறப்பினுள் உயர்பு ஆகலும்,பிறப்பினுள் இழிபு ஆகலும், 20
ஏனோர் நின் வலத்தினதே;
முருகப் பிரானின் பிறப்பு
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,நாகம் நாணா, மலை வில்லாக,மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றிஇமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு, 30
விலங்கு என, விண்னோர் வேள்வி முதல்வன்விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்ததுஅரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவுதிரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள; 35
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கைநொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,சாலார்; தானே தரிக்க என, அவர் அவி 40
உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்; 45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்நிறைவயின் வழா அது நிற் சூலினரே;நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, 50
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,அறு வேறு துணியும் அறுவர் ஆகி,ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
தேவர் சேனைக்குத் தலைவனாதல்
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய 55
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்துவளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத்திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; 60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்தமறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், 65
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும்,வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். 70
முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை-செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,சேரா அறத்துச் சீர் இலோரும்,அழி தவப் படிவத்து அயரியோரும், 75
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்நின் நிழல்;
முருகப் பெருமானிடம் வேண்டுதல்
அன்னோர் அல்லது இன்னோர்சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவைபொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்அருளும், அன்பும், அறனும், மூன்றும்-உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! 81

6. வையை
பாடியவர் :: நல்லந்துவனார்இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்பண் :: பாலையாழ் 
வைகையில் பெரு வெள்ளம்
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் 5
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,மாசு இல் பனுவற் புலவர் புகழ் புலநாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்தாயிற்றே தண் அம் புனல். 10
புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்வகைசாலும், வையை வரவு.வையையின் கரை உடைதலும், ஊரார்கிளர்ந்து எழுதலும்தொடி தோள் செறிப்பத் தோள்வளை இயங்கக்கொடி சேரா, திருக் கோவை காழ் கொளத் 15
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க, 20
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,வரைச் சிறை உடைத்ததை வையை: ' வையைத்திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக எனும்உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று
மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்
அன்று, போர் அணியின் புகர்முகம் சிறந்தென, 25
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல:ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்--ஈரணி அணியின், இகல் மிக நவின்று,தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின் 30
அணி அணி ஆகிய தாரர், கருவியர்,அடு புனலது செல அவற்றை இழிவர்;கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர், 35
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகைஓர் இயவு உறுத்தர ஊர்ஊர்பு இடம் திரீஇச்
ஆற்றினது நீரோட்டம்
சேரி இளையர் செல அரு நிலையர்,வலியர் அல்லோர் துறைதுறை அயர,மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர, 40
சாறும் சேறும் நெய்யும் மலரும்நாறுபு நிகழும், யாறு வரலாறு.
அந்தணர்கள் கொண்ட கலக்கம்
நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்துவேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு. 45
பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்
மாறு மென் மலரும், தாரும் கோதையும்,வேரும் தூரும், காயும் கிழங்கும்,பூரிய மாக்கள் உண்பது மண்டிநார் அரி நறவம் உகுப்ப 'நலன் அழிந்து,வேறாகின்று இவ் விரி புனல் வரவு' என, 50
சேறு ஆடு புனலது செலவு
வரை அழி வால் அருவி வாதாலாட்ட,கரை அழி வால் அருவிக் கால் பாராட்ட,'இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்புரைவது பூந் தாரான் குன்று' எனக் கூடார்க்கு 55
உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடிச்,சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்தான் மலர்ந்தன்றேதமிழ் வையைத் தண்ணம் புனல். 60
இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்

'விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்,'தளிர் அறிந்தாய், தாம் இவை.'
களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்
'பணிபு ஒழி பண்ப!--பண்டெல்லாம் நனி உருவத்து;என்னோ துவள் கண்டீ?--எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக் 65
கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்செய்ததும் வாயாளோ? செப்பு.'
தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என
'புனை புனை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவைநீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்பெருக்கு அன்றோ, வையை வரவு?' 70
தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து உரைத்தல்
'ஆம் ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்சுருக்கமும் ஆக்கமும் --- சூள் உறல்!--- வையைப்பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும், 75
குருகு இரை தேரக் கிடக்கும்___பொழி காரில்,இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்வையை வயமாக வை.செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை; 80
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் 85
கனற்றுபு காத்தி, வரவு!'
தலைமகன் மேலும் கூறுதல்
'நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்அல்லா விழுந்தாளை எய்தி, எழுந்து ஏற்று யான்கொள்ளா அளவை, எழுந் தேற்றாள்: கோதையின் 90
உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது?' என--
காதற் பரத்தை கூற்று
தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்யாறு உண்டோ? இவ் வையை யாறு .
தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை
'இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்தலை தொட்டேன், தண் பரங்குன்று!' 95
விறலிக்குத் தலைமகள் கூறுதல்
'சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனிகன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தேவல் இருள் நீயல்; அது பிழையாகும்' என, 100
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்துவல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்!களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்வாடற்க, வையை! நினக்கு. 106

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.