LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பரிபாடல்-4

 

10. வையை
(பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு, தோழி தூது விட, சென்ற
பாணன், பாசறைக்கண், தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவு அணியும், ஆங்குப் பட்ட
செய்தியும், கூறியது.)
பாடியவர் :: கரும்பிள்ளைப் பூதனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ் 
மலைவரை மாலை அழி பெயல்_____காலை,
செல வரை காணாக் கடல்தலைக் கூட____
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய 5
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉப், பறை அறையப்
போந்தது____வையைப் புனல்.
புனலாடும் பொருட்டு மகளிர் வையைக் கரை சேர்தல்
புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி,
தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை 10
ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ,
நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்
முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி;
புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும், 15
அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச்
சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி;
வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி;
முதியர், இளையர்: முகைப் பருவத்தர்,
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார்____ 20
இரு திரு மாந்தரும் இன்னினியோரும்_____
விரவு நரையோரும் வெறு நரையோரும்_____
பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்;
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல, 25
பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி_____
கரை சேர்ந்த மகளிர் செயல்
(அலர்வாய் அவிழ்ந்தன்ன பருவத்தையுடைய கற்புடைமகளிர் பரத்தையர் இவர்களின் செயல்)
நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்;
பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்;
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;
வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி, 30
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது,
யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்;
காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து,
சேமத் திரை வீழ்த்து சென்று, அமளி சேர்குவோர்:
முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்
தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட, 35
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம
மட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து,
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏழுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல்,
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்_____ 40
களிறு பிடிகளின் ஒத்த அன்பு
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று,
நலத்த நடவாது நிற்ப; மடப் பிடி,
அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல்
செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக் 45
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று,
மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற,
செய் தொழில் கொள்ளாது, மதி செத்துச் சிதைதர;
கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி
நீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து 50
வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து,
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்______
இதையும் களிறும் பிணையும் இரியச்
சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம். 55
மகளிர், மைந்தர் இவர்கள் செயல்
பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர்,
ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின்,
பல் சனம் நாணிப் பதைபதைப்பு_____மன்னவர்
தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை 60
ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி,
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்.
காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ,
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை_____
கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி, 65
உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள்
பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்
கரப்பார், களி மதரும் போன்ம்.
கள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும்
வெள்ளம் தரும், இப் புனல். 70
மகளிரது நீர் விளையாட்டு
புனல் பொருது மெலிந்தார் திமில் விட,
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ,
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர், 75
அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி,
ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்,
மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப;
மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால்
வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்; 80
செங் குங்குமச் செழுஞ் சேறு,
பங்கம் செய் அகில் பல பளிதம்,
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழலென அரைக்குநர்;
நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை, 85
வித்தி அலையில், 'விளைக! பொலிக! என்பார்;
இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன்,
நல்லது வெ·கி, வினை செய்வார்;
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப,
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்; 90
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்;
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்,
கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார்
வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக் 95
கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை
ஆட்டு அயர்ந்து_____அரி படும் ஐ விரை மாண் பகழி
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்___________
பின்னும், மலர்க் கண் புனல்
புனல் விளையாட்டால் மெலியாத மைதர் செயல்
தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும், 100
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்,
வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும்,
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப்
பைய விளையாடுவாரும், மென் பாவையர்
செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார், 105
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி,
அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர்
ஒளிறு இலங்கு எ·கொடு வாள் மாறு உழக்கி,
களிறு போர் உற்ற களம்போல, நாளும் 110
தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல்.
புனலாடி மீண்டவாறு
மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; 115
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, 120
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
கால் திரிய ஆர்க்கும் புகை. 125
வையையை வாழ்த்துதல்
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்
பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,
செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க____
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,
அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை 130
ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே.
11. வையை
(வரைவு மலிந்த தோழி, 'கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட்டேம்'
என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.)
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: நாகனார்
பண் :: பாலையாழ் 
மழை பொழிய வையையில் நீர் பொருகி ஓடுதல்
'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்___
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி 5
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில்____வாய்ந்த 10
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல். 15
தோழி திருமதத் துறையின் சிறப்புக் கூறுதல்
'வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம், வாள்வீரம்,
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், 20
தாய தோன்றி தீயென மலரா,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
பாய் திரை உந்தித் தருதலான்____ஆய் கோல்
வயவர் அரி மலர்த் துறை என்கோ? 25
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
பருகு படி மிடறு என்கோ?____பெரிய
திருமருத நீர்ப் பூந் துறை.' 30
கண்டார் கூற்று
'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி 35
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;
எண் மதி நிறை, உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இறு நாள் பெற! 40
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:'
என ஆங்கு_______ 45
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு
வையை போர்க்களத்தை ஒத்தல்
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர் குந்தம் ஏந்துவோர், 50
கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்,
புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்,
கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும், 55
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்
உருகெமு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
பொரு களம் போலும் தகைத்தே____பரி கவரும் 60
பாய் தேரான் வையை அகம்.
இளவேனிற் காலத்து ஆடல்
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
புனை வினைப் பொலங் கோதையவரொடு, 65
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் 70
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,
நீர் ஒவ்வா வையை! நினக்கு.
தைந் நீராடல்
கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
மகளிர் செயல்கள்
ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; 95
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று____
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
கொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண். 100
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே_____
மல்லிகா மாலை வளாய். 105
மகளிர் கருத்தும், வேண்டுகோளும்
தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப; 110
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்;
ஆயத்தில் கூடு' எந்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே____
சேய் உற்ற கார் நீர் வரவு.
'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும், 115
' "கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்' என்மாரும்,
'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும்,
' "கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும், 120
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!" என்மாரும்_____
ஒருவன் உவந்தவை காட்டுதல்
'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்: 125
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஒர்மின்:
பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடி,
கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்
தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ நெரித்தாளை 130
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து, பின்னும்,
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்.
என ஆங்கு________
தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்
இன்ன பண்பின் நின் தைந் நீராடல்_______
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட 135
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்_____
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே! 140

10. வையை
(பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு, தோழி தூது விட, சென்றபாணன், பாசறைக்கண், தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவு அணியும், ஆங்குப் பட்டசெய்தியும், கூறியது.)
பாடியவர் :: கரும்பிள்ளைப் பூதனார்இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்பண் :: பாலையாழ் 
மலைவரை மாலை அழி பெயல்_____காலை,செல வரை காணாக் கடல்தலைக் கூட____நில வரை அல்லல் நிழத்த, விரிந்தபலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,வரி அரி ஆணு முகிழ் விரி சினைய 5
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,ஆய்ந்து அளவா ஓசை அறையூஉப், பறை அறையப்போந்தது____வையைப் புனல்.
புனலாடும் பொருட்டு மகளிர் வையைக் கரை சேர்தல்
புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி,தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை 10
ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ,நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி;புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும், 15
அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச்சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி;வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி;முதியர், இளையர்: முகைப் பருவத்தர்,வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார்____ 20
இரு திரு மாந்தரும் இன்னினியோரும்_____விரவு நரையோரும் வெறு நரையோரும்_____பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்;அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாளவிதி கூட்டிய இய மென் நடை போல, 25
பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி_____
கரை சேர்ந்த மகளிர் செயல்
(அலர்வாய் அவிழ்ந்தன்ன பருவத்தையுடைய கற்புடைமகளிர் பரத்தையர் இவர்களின் செயல்)

நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்;பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்;மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி, 30
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது,யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்;காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து,சேமத் திரை வீழ்த்து சென்று, அமளி சேர்குவோர்:
முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்
தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட, 35
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேமமட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து,தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்ஏழுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல்,யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்_____ 40
களிறு பிடிகளின் ஒத்த அன்பு
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று,நலத்த நடவாது நிற்ப; மடப் பிடி,அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல்செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக் 45
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று,மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற,செய் தொழில் கொள்ளாது, மதி செத்துச் சிதைதர;கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவிநீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து 50
வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து,சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்______இதையும் களிறும் பிணையும் இரியச்சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்திசை அறி நீகானும் போன்ம். 55
மகளிர், மைந்தர் இவர்கள் செயல்
பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல்அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர்,ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின்,பல் சனம் நாணிப் பதைபதைப்பு_____மன்னவர்தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை 60
ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி,நின்ற நிகழ்ச்சியும் போன்ம்.காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ,ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை_____கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி, 65
உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள்பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்கரப்பார், களி மதரும் போன்ம்.கள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும்வெள்ளம் தரும், இப் புனல். 70
மகளிரது நீர் விளையாட்டு
புனல் பொருது மெலிந்தார் திமில் விட,கனல் பொருத அகிலின் ஆவி கா எழ,நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்துதிகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின்உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர், 75
அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி,ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்,மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப;மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால்வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்; 80
செங் குங்குமச் செழுஞ் சேறு,பங்கம் செய் அகில் பல பளிதம்,மறுகுபட அறை புரை அறு குழவியின்அவி அமர் அழலென அரைக்குநர்;நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை, 85
வித்தி அலையில், 'விளைக! பொலிக! என்பார்;இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன்,நல்லது வெ·கி, வினை செய்வார்;மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப,தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்; 90
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்;மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்,கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல்உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார்வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக் 95
கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகைஆட்டு அயர்ந்து_____அரி படும் ஐ விரை மாண் பகழிஅரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்___________பின்னும், மலர்க் கண் புனல்
புனல் விளையாட்டால் மெலியாத மைதர் செயல்
தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும், 100
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்,வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும்,மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப்பைய விளையாடுவாரும், மென் பாவையர்செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார், 105
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி,அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர்ஒளிறு இலங்கு எ·கொடு வாள் மாறு உழக்கி,களிறு போர் உற்ற களம்போல, நாளும் 110
தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல்.
புனலாடி மீண்டவாறு
மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலைநாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; 115
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, 120
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்துஉள் நின்று தூய பனிநீருடன் கலந்து,கால் திரிய ஆர்க்கும் புகை. 125
வையையை வாழ்த்துதல்
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க____வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை 130
ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே.

11. வையை
(வரைவு மலிந்த தோழி, 'கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட்டேம்'என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.)
பாடியவர் :: நல்லந்துவனார்இசையமைத்தவர் :: நாகனார்பண் :: பாலையாழ் 

மழை பொழிய வையையில் நீர் பொருகி ஓடுதல்
'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்___உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி 5
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லைமதியம் மறைய, வரு நாளில்____வாய்ந்த 10
பொதியில் முனிவன் புரை வரைக் கீறிமிதுனம் அடைய, விரி கதிர் வேனில்எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்புரை கெழு சையம் பொழி மழை தாழ,நெரிதரூஉம் வையைப் புனல். 15
தோழி திருமதத் துறையின் சிறப்புக் கூறுதல்
'வரையன புன்னாகமும்,கரையன சுரபுன்னையும்,வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்மனைமாமரம், வாள்வீரம்,சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், 20
தாய தோன்றி தீயென மலரா,ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்பாய் திரை உந்தித் தருதலான்____ஆய் கோல்வயவர் அரி மலர்த் துறை என்கோ? 25
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்பருகு படி மிடறு என்கோ?____பெரியதிருமருத நீர்ப் பூந் துறை.' 30
கண்டார் கூற்று
'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்வழியது பக்கத்து அமரர் உண்டி 35
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;எண் மதி நிறை, உவா இருள் மதி போலநாள் குறைபடுதல் காணுநர் யாரே?சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இறு நாள் பெற! 40
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:'என ஆங்கு_______ 45
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளைபடையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரைஆடற்கு நீர் அமைந்தது, யாறு
வையை போர்க்களத்தை ஒத்தல்
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர் குந்தம் ஏந்துவோர், 50
கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்,புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவைவெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்,கண் ஆரும் சாயற் கழித் துரப்போரைவண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும், 55
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்உருகெமு தோற்றம் உரைக்குங்கால், நாளும்பொரு களம் போலும் தகைத்தே____பரி கவரும் 60
பாய் தேரான் வையை அகம்.
இளவேனிற் காலத்து ஆடல்நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழைஒளி திகழ் தகை வகை செறி பொறிபுனை வினைப் பொலங் கோதையவரொடு, 65
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் 70
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதைகார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,நீர் ஒவ்வா வையை! நினக்கு.
தைந் நீராடல்
கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரைவிரிநூல் அந்தணர் விழவு தொடங்க,புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,வையை! நினக்கு மடை வாய்த்தன்று.மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?நீ உரைத்தி, வையை நதி!
மகளிர் செயல்கள்
ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; 95
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று____நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,கொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண். 100
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்குவளைப் பசுந் தண்டு கொண்டு.கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே_____மல்லிகா மாலை வளாய். 105
மகளிர் கருத்தும், வேண்டுகோளும்
தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப; 110
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,தாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்;ஆயத்தில் கூடு' எந்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே____சேய் உற்ற கார் நீர் வரவு.'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும், 115
' "கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்' என்மாரும்,'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,யாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும்,' "கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும், 120
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!" என்மாரும்_____
ஒருவன் உவந்தவை காட்டுதல்
'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்: 125
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்டகிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஒர்மின்:பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடி,கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ நெரித்தாளை 130
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து, பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்.என ஆங்கு________தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்இன்ன பண்பின் நின் தைந் நீராடல்_______மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட 135
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காமஇன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்_____முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;மறு முறை அமையத்தும் இயைக!நறு நீர் வையை நயத் தகு நிறையே! 140

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.