கதையே இல்லாமல் படத்தை இயக்க முடியுமா என்றால் முடியும் என "கதை, திரைக்கதை வசனம் இயக்கம்" என்ற படத்தை இயக்கி காட்டியிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து, ஒரு புதிய படத்தை இயக்க போவதாக அறிவித்திருந்தார் பார்த்திபன். இந்த படத்திற்கு முதலில் உப்புமா படம் என்று தலைப்பு வைத்திருந்தார். இப்போது கதை இருக்கு என்று மாற்றி இருக்கிறார். கதையில்லாமல் படம் எடுத்து காட்டியாச்சு. கதையோடு ஒரு படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கேன். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம். அதில் நடித்தவர்களும் இதில் நடிக்கலாம் எதையும் முடிவு செய்யவில்லை.
ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியியில் தீவிரமாக இருக்கிறேன்" என்கிறார் பார்த்திபன். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் துணை இயக்குனர்கள் சிலர் படத்துக்காக கதை விவாதம் நடத்துவார்கள். இந்தப் படத்தில் கதையை உருவாக்கி விட்டு அதை படம் எடுக்க எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறார்கள் என்கிற கதையாம்.
|