LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜித் சாருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது - சொல்கிறார் பார்வதி நாயர் !!

பார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்பு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார்.

அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னடம் மலையாளம் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிபருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.

என்னை அறிந்தால் வாய்ப்பை பற்றி கூறும் பொழுது “ காலம் என்னை கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ் படமே அஜித் சார் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. கௌதம் சார் இப்படத்திற்கு அழைக்கும் முன் வரை தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.”

“ அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது. கௌதம் சார், நான் பணிபுரிந்த இயக்குனர்களில் பழகுவதற்கு மிக இலகுவானவர். அவர் இருக்கும் பொழுது படபிடிப்பு தளமே மிக பரப்பாக இருக்கும். என்னை அறிந்தால் குழுவினர்க்கும், தயாரிப்பாளர் AM ரத்னம் அவர்களுக்கும் நன்றி கூறியே ஆக வேண்டும்.”

“எவ்வளவு பெரிய நிலைகளுக்கு சென்றாலும், உச்சத்தில் நின்றாலும் அட்க்குதுடன் இருக்க வேண்டும். இப்படி என்னை அறிந்தால் படத்தின் மூலம் பல விஷயங்கள் கற்றுகொண்டேன்.”, என்று கூறினார் பார்வதி நாயர்.

by Swathi   on 19 Jan 2015  0 Comments
Tags: அஜீத்   என்னை அறிந்தால்   பார்வதி நாயர்   Parvathy Nair   Yennai Arindhaal        
 தொடர்புடையவை-Related Articles
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்... நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்...
அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!! அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.