LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பதிற்றுப்பத்து-1

 

பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை. 
நூல்
கடவுள் வாழ்த்து
எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க் 
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார் 
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள் 
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப் 
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து 
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல் 
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா 
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும் 
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி 
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய 
சூலம் பிடித்த சுடர்ப் படைக் 
காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!
 மு த ற் ப த் து
(கிடைக்கவில்லை)
இரண்டாம் பத்து
பாடினோர் : குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டோ ர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
11. வெற்றிச் செல்வச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : புண் உமிழ் குருதி 
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல் 
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி, 
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் 
சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை, 5
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு- 
செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப, 
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்,
மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து,
மனாலக் கலவை போல, அரண் கொன்று, 10
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் 
கடியுடை முழு முதல் துமிய ஏஎய்,
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர், 
நார் அரி நறவின், ஆர மார்பின், 15
போர் அடு தானைச் சேரலாத!- 
மார்பு மலி பைந் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் 
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின் 
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே 20
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும், 
ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம் 
தென்அம் குமரியொடு ஆயிடை 
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே. 25
12. வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மறம் வீங்கு பல் புகழ் 
வயவர் வீழ வாள் அரில் மயக்கி,
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே!
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் 
அரிமான் வழங்கும் சாரல், பிற மான் 5
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு,
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது, 
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்- 
கேட்டற்கு இனிது-நின் செல்வம்: கேட்டொறும் 
காண்டல் விருப்பொடு-கமழும் குளவி; 10
வாடாப் பைம் மயிர், இளைய ஆடு நடை,
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்
கன்று புணர் பிடிய; குன்று பல நீந்தி-
வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல் 
தொல் பசி உழந்த பழங்கண் வீழ, 15
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை,
மை ஊன் பெய்த வெண்னெல் வெண் சோறு,
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி;
நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன,
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை, 20
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ;
வணர் இருங் கதுப்பின், வாங்கு அமை மென் தோள், 
வசை இல் மகளிர் வயங்குஇழை அணிய; 
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு 
நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே! 25
13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : பூத்த நெய்தல் 
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும், 
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் 
இருங் கண் எருமை நிரை தடுக்குநவும், 
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் 5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும், 
ஒலி தெங்கின், இமிழ் மருதின், 
புனல் வாயில், பூம் பொய்கை, 
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின், 
நாடு கவின் அழிய, நாமம் தோற்றி; 10
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல, 
நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்-
விரி பூங் கரும்பின் கழனி புல்லென, 
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி, 
கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க, 15
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை 
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து-
உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து, 
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே. 
காடே கடவுள் மேன; புறவே 20
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன; 
ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக் 
கூலம் பகர்நர் குடி புறந்தராஅ, 
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, 
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப, 
நோயொடு பசி இகந்து ஒரீஇ, 
பூத்தன்று-பெரும!-நீ காத்த நாடே!
14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சான்றோர் மெய்ம்மறை
நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
அளப்பு அரியையே;
நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;
போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு 5
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே; 10
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை!
வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்;
வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்;
ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ! 15
பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படை ஏர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக்
கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல, நின்று நீ 20
கெடாஅ நல் இசை நிலைஇத்
தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே!
15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிரைய வெள்ளம்
யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து,
முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு-
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப- 5
கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர,
அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து,
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்,
வெண் பூ வேளையொடு பைஞ் சுரை கலித்து,
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறைமுதல், 10
சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில்,
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின், புலம் சிதை அரம்பின்,
அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே: 15
கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும்,
வளம் பல நிகழ்தரு நனந் தலை நல் நாட்டு,
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்,
கொடி நிலற் பட்ட பொன்னுடை நியமத்து,
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் 20
வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தார் அணிந்து எழிலிய, தொடி சிதை மருப்பின்,
போர் வல் யானைச் சேரலாத!
'நீ வாழியர், இவ் உலகத்தோர்க்கு' என,
உண்டு உரை மாறிய, மழலை நாவின், 25
மென் சொற் கலப் பையர் திருந்து தொடை வாழ்த்த,
வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை,
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு,
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும்
பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி, 30
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும், பலர் புகழ் பண்பின்,
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய
யாணர் நல் நாடும் கண்டு, மதி மருண்டனென்- 
மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது 35
ஈத்துக் கை தண்டாக் கை கடுந் துப்பின்,
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி,
ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்,
நெடியோன் அன்ன நல் இசை,
ஒடியா மைந்த! நின் பண்பு பல நயந்தே. 40
16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துயிலின் பாயல் 
கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி,
நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல்,
துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு, 5
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்,
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,
மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை,
நீடினை ஆகலின், காண்கு வந்திசினே:
ஆறிய கற்பின், அடங்கிய சாயல், 10
ஊடினும் இனிய கூறும் இன் நகை,
அமிர்து பொதி துவர் வாய், அமர்த்த நோக்கின்,
சுடர் நுதல், அசைநடை உள்ளலும் உரியள்;
பாயல் உய்யுமோ-தோன்றல்! தா இன்று
திரு மணி பொருத திகழ் விடு பசும் பொன் 15
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும், கொளாலும் வல்லோய்! நின்
சாயல் மார்பு நனி அலைத்தன்றே? 20
17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வலம்படு வியன் பணை
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே-
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்- 
துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை, 5
ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
'அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,
ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின், 10
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,
கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!
18. கொடைச் சிறப்பு
துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : கூந்தல் விறலியர்
உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!
வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்,
ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல், 5
கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!
பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்- 
மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி,
மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி, 10
மாரி பொய்க்குவது ஆயினும்,
சேரலாதன் பொய்யலன் நசையே!
19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வளன் அறு பைதிரம் 
கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர்
கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப, 
ஒண் பொறிக் கழற் கால் மாறா வயவர் 
திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப,
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5
உருவச் செந் தினை குருதியொடு தூஉய்,
மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர்,
கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச,
வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து,
அவ் வினை மேவலை: ஆகலின், 10
எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்ற
அரிது பெறு பாயற் சிறு மகிழானும்
கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கிய
நாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்கு
யார் கொல்? அளியை- 15
இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து;
நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின; பழனம் தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து, 20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப,
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த,
'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலை
நல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி, 25
காணுநர் கை புடைத்து இரங்க,
மாணா மாட்சிய மாண்டன பலவே!
20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்
துறை : இயல் மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : அட்டு மலர் மார்பன் 
'நும் கோ யார்?' என வினவின், எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின்,
நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி! 5
வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும்,
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே;
கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே,
கனவினும்; ஒன்னார் தேய, ஓங்கி நடந்து, 10
படியோர்த் தேய்த்து, வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற,
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து,
புலவர் ஏத்த, ஓங்கு புகழ் நிறீஇ,
விரிஉளை மாவும், களிறும், தேரும், 15
வயிரியர், கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
நெடு மதில், நிலை ஞாயில்,
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை, அட்டு மலர் மார்பன்; 20
எமர்க்கும், பிறர்க்கும், யாவர்ஆயினும்,
பரிசில் மாக்கள் வல்லார்ஆயினும்,
கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;
மன் உயிர் அழிய, யாண்டு பல மாறி,
தண் இயல் எழிலி தலையாது ஆயினும், 25
வயிறு பசி கூர ஈயலன்;
வயிறு மாசு இலீயர், அவன் ஈன்ற தாயே!
பதிகம்
மன்னிய பெரும் உகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்-
அமைவரல் அருவி இமையம் விற் பொறித்து,
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு
பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,
நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ,
அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு,
பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்-
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: புண் உமிழ் குருதி, மறம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ.
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டு யாண்டு வீற்றிருந்தான்.
இரண்டாம் பத்து முற்றும்

பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை. 

நூல்

கடவுள் வாழ்த்து
எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க் கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும் இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய சூலம் பிடித்த சுடர்ப் படைக் காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!

 மு த ற் ப த் து
(கிடைக்கவில்லை)

இரண்டாம் பத்து
பாடினோர் : குமட்டூர்க் கண்ணனார்பாடப்பட்டோ ர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
11. வெற்றிச் செல்வச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புண் உமிழ் குருதி 
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல் நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி, அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை, 5கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு- செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப, அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்,மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து,மனாலக் கலவை போல, அரண் கொன்று, 10முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏஎய்,வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர், நார் அரி நறவின், ஆர மார்பின், 15போர் அடு தானைச் சேரலாத!- மார்பு மலி பைந் தார் ஓடையொடு விளங்கும்வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின் பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே 20கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரிபரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும், ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம் தென்அம் குமரியொடு ஆயிடை மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே. 25

12. வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : மறம் வீங்கு பல் புகழ் 
வயவர் வீழ வாள் அரில் மயக்கி,இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப,கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே!தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் அரிமான் வழங்கும் சாரல், பிற மான் 5தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு,முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது, மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்- கேட்டற்கு இனிது-நின் செல்வம்: கேட்டொறும் காண்டல் விருப்பொடு-கமழும் குளவி; 10வாடாப் பைம் மயிர், இளைய ஆடு நடை,அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்கன்று புணர் பிடிய; குன்று பல நீந்தி-வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல் தொல் பசி உழந்த பழங்கண் வீழ, 15எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை,மை ஊன் பெய்த வெண்னெல் வெண் சோறு,நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி;நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன,நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை, 20நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ;வணர் இருங் கதுப்பின், வாங்கு அமை மென் தோள், வசை இல் மகளிர் வயங்குஇழை அணிய; அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே! 25

13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்பெயர் : பூத்த நெய்தல் 
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,ஏறு பொருத செறு உழாது வித்துநவும், கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங் கண் எருமை நிரை தடுக்குநவும், கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் 5வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும், ஒலி தெங்கின், இமிழ் மருதின், புனல் வாயில், பூம் பொய்கை, பாடல் சான்ற பயம் கெழு வைப்பின், நாடு கவின் அழிய, நாமம் தோற்றி; 10கூற்று அடூஉ நின்ற யாக்கை போல, நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்-விரி பூங் கரும்பின் கழனி புல்லென, திரி காய் விடத்தரொடு கார் உடை போகி, கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க, 15ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து-உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து, உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே. காடே கடவுள் மேன; புறவே 20ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன; ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக் கூலம் பகர்நர் குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25மழை வேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசி இகந்து ஒரீஇ, பூத்தன்று-பெரும!-நீ காத்த நாடே!

14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்தூக்கு : செந்தூக்குபெயர் : சான்றோர் மெய்ம்மறை
நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்அளப்பு அரியையே;நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு 5துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,அக்குரன் அனைய கைவண்மையையே;அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே; 10எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்துநோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை!வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்;வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்;ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ! 15பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்படை ஏர் உழவ! பாடினி வேந்தே!இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக்கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்முன் திணை முதல்வர் போல, நின்று நீ 20கெடாஅ நல் இசை நிலைஇத்தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே!

15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : நிரைய வெள்ளம்
யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து,முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு-மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப- 5கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர,அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து,தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்,வெண் பூ வேளையொடு பைஞ் சுரை கலித்து,பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறைமுதல், 10சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில்,புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்புல் இலை வைப்பின், புலம் சிதை அரம்பின்,அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்த நின்பகைவர் நாடும் கண்டு வந்திசினே: 15கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும்,வளம் பல நிகழ்தரு நனந் தலை நல் நாட்டு,விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்,கொடி நிலற் பட்ட பொன்னுடை நியமத்து,சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் 20வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!தார் அணிந்து எழிலிய, தொடி சிதை மருப்பின்,போர் வல் யானைச் சேரலாத!'நீ வாழியர், இவ் உலகத்தோர்க்கு' என,உண்டு உரை மாறிய, மழலை நாவின், 25மென் சொற் கலப் பையர் திருந்து தொடை வாழ்த்த,வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை,செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு,ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும்பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி, 30நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்மேயினர் உறையும், பலர் புகழ் பண்பின்,நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇயயாணர் நல் நாடும் கண்டு, மதி மருண்டனென்- மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது 35ஈத்துக் கை தண்டாக் கை கடுந் துப்பின்,புரைவயின் புரைவயின் பெரிய நல்கி,ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்,நெடியோன் அன்ன நல் இசை,ஒடியா மைந்த! நின் பண்பு பல நயந்தே. 40

16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : துயிலின் பாயல் 
கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி,நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல்,துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள்பூணா ஐயவி தூக்கிய மதிலநல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு, 5ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்,கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை,நீடினை ஆகலின், காண்கு வந்திசினே:ஆறிய கற்பின், அடங்கிய சாயல், 10ஊடினும் இனிய கூறும் இன் நகை,அமிர்து பொதி துவர் வாய், அமர்த்த நோக்கின்,சுடர் நுதல், அசைநடை உள்ளலும் உரியள்;பாயல் உய்யுமோ-தோன்றல்! தா இன்றுதிரு மணி பொருத திகழ் விடு பசும் பொன் 15வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,புரையோர் உண்கண் துயில் இன் பாயல்பாலும், கொளாலும் வல்லோய்! நின்சாயல் மார்பு நனி அலைத்தன்றே? 20

17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : வலம்படு வியன் பணை
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே-பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்- துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை, 5ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,'அரணம் காணாது, மாதிரம் துழைஇயநனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின், 10அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,விசும்பு தோய் வெண்குடை நுவலும்பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!

18. கொடைச் சிறப்பு
துறை : இயல்மொழி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : கூந்தல் விறலியர்
உண்மின் கள்ளே! அடுமின் சோறே!எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்,ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல், 5கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்- மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி,மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்டதண் இயல் எழிலி தலையாது மாறி, 10மாரி பொய்க்குவது ஆயினும்,சேரலாதன் பொய்யலன் நசையே!

19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்குபெயர் : வளன் அறு பைதிரம் 
கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர்கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப, ஒண் பொறிக் கழற் கால் மாறா வயவர் திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப,செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5உருவச் செந் தினை குருதியொடு தூஉய்,மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர்,கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச,வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து,அவ் வினை மேவலை: ஆகலின், 10எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்றஅரிது பெறு பாயற் சிறு மகிழானும்கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கியநாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்குயார் கொல்? அளியை- 15இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து;நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீவாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்அன்ன ஆயின; பழனம் தோறும்அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து, 20நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப,அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த,'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலைநல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி, 25காணுநர் கை புடைத்து இரங்க,மாணா மாட்சிய மாண்டன பலவே!

20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்
துறை : இயல் மொழி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்பெயர் : அட்டு மலர் மார்பன் 
'நும் கோ யார்?' என வினவின், எம் கோஇரு முந்நீர்த் துருத்தியுள்முரணியோர்த் தலைச் சென்று,கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின்,நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி! 5வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும்,மாற்றோர் தேஎத்து மாறிய வினையே;கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியாநண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே,கனவினும்; ஒன்னார் தேய, ஓங்கி நடந்து, 10படியோர்த் தேய்த்து, வடி மணி இரட்டும்கடாஅ யானைக் கண நிரை அலற,வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து,புலவர் ஏத்த, ஓங்கு புகழ் நிறீஇ,விரிஉளை மாவும், களிறும், தேரும், 15வயிரியர், கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி,கடி மிளை, குண்டு கிடங்கின்,நெடு மதில், நிலை ஞாயில்,அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்டஅடாஅ அடு புகை, அட்டு மலர் மார்பன்; 20எமர்க்கும், பிறர்க்கும், யாவர்ஆயினும்,பரிசில் மாக்கள் வல்லார்ஆயினும்,கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;மன் உயிர் அழிய, யாண்டு பல மாறி,தண் இயல் எழிலி தலையாது ஆயினும், 25வயிறு பசி கூர ஈயலன்;வயிறு மாசு இலீயர், அவன் ஈன்ற தாயே!
பதிகம்

மன்னிய பெரும் உகழ், மறு இல் வாய்மொழி,இன் இசை முரசின், உதியஞ்சேரற்குவெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்-அமைவரல் அருவி இமையம் விற் பொறித்து,இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடுபேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ,அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு,பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்-இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: புண் உமிழ் குருதி, மறம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ.
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டு யாண்டு வீற்றிருந்தான்.

இரண்டாம் பத்து முற்றும்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.