LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பதிற்றுப்பத்து-4

 

ஐந்தாம் பத்து
பாடினோர் : பரணர்
பாடப்பட்டோ ர் : கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
41. வென்றிச் சிறப்பு
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சுடர் வீ வேங்கை 
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப;
பண் அமை முழவும், பதலையும், பிறவும்,
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி,
காவில் தகைத்த துறை கூடு கலப் பையர் 5
கை வல் இளையர் கடவுள் பழிச்ச;
மறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறு
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப்
பூவுடை பெருஞ் சினை வாங்கிப் பிளந்து, தன்
மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி, 10
சேஎர் உற்ற செல்படை மறவர்,
தண்டுடை வலத்தர், போர் எதிர்ந்தாங்கு,
வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல, பல கழிந்து, திண் தேர் 15
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே:
தாவல் உய்யுமோ மற்றே-தாவாது 
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ் சமத்து அரசு படக் கடந்து,
வெவ்வர் ஓச்சம் பெருக, தெவ்வர், 20
மிளகு எறி உலக்கையின், இருந் தலை, இடித்து,
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்
எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண்
வலம் படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து
கால் உளைக் கடும் பிசிர் உடைய, வால் உளைக் 25
கடும் பரிப் புரவி ஊர்ந்த நின்,
படும் திரைப் பனிக் கடல், உழந்த தாளே!
42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தசும்பு துளங்கு இருக்கை 
இரும் பனம்புடையல், ஈகை வான் கழல்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5
தும்பை சூடாது மலைந்த மாட்சி,
அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;
இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி, 10
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து;
கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்- 15
மன்பதை மருள, அரசு படக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய, 20
மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து,
வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய,
தண் பல வரூஉம் புணரியின் பலவே.
43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி
துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏறா ஏணி
கவரி முச்சி, கார் விரி கூந்தல்,
ஊசல் மேவல், சேயிழை மகளிர்
உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின்,
பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ 5
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக,
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ,
சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த 10
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!
இரும் பணை திரங்கப் பெரும் பெயல் ஒளிப்ப,
குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,
அருவி அற்ற பெரு வறற் காலையும்,
அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து, 15
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய,
வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து,
ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு,
உறுவர் ஆர ஓம்பாது உண்டு,
நகைவர் ஆர நன் கலம் சிதறி, 20
'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரற்
பாடு விறலியர் பல் பிடி பெறுக!
துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை,
வென்றி மேவல், உரு கெழு சிறப்பின்,
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக! 25
மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு,
கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக, மாவே!' என்றும்,
இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும்
தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின், 30
தொலையாக், கற்ப!-நின் நிலை கண்டிகுமே!- 
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது,
நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி,
நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின் 35
வண் கை வேந்தே! நின் கலி மகிழானே.
44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நோய் தபு நோன் தொடை
நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ,
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க,
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி,
கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும், 5
'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து,
ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்- 
காணிலியரோ-நிற் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை:
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை 10
சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து,
புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு,
அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு,
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, 15
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,
ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந் துணி
வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை
கவலை கவற்றும் குரால்அம் பறந்தலை,
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி, 20
துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி,
வன்னி மன்றத்து விளங்கிய காடே.
45. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஊன் துவை அடிசில்
பொலம் பூந் தும்பை, பொறி கிளர் தூணி,
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்,
ஒசிவுடை வில்லின், ஒசியா நெஞ்சின்,
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்,
விழுமியோர் துவன்றிய அகல் கண் நாட்பின், 5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்!
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து,
பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்ட
நாடு கெழு தாயத்து நனந் தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணை எழு அன்ன, 10
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி,
பிணம் பிறங்கு அழுவத்து, துணங்கை ஆடி,
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடாப் பீடர் உள் வழி இறுத்து,
முள் இடுபு அறியா ஏணி, தெவ்வர் 15
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்,
அனைய பண்பின் தானை மன்னர்- 
இனி யார் உளரோ, முன்னும் இல்லை- 
மழை கொளக் குறையாது, புனல் புக நிறையாது,
விலங்கு வளி கடவும் துளங்கு இருங் கமஞ் சூல், 20
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு,
முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே?
46. கொடைச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கரை வாய்ப் பருதி 
இழையர், குழையர், நறுந் தண் மாலையர்,
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை,
திறல் விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி, 5
பணியா மரபின் உழிஞை பாட,
இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்- 
சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி
ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய,
பல் செருக் கடந்த கொல் களிற்று யானை, 10
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய
வெல் புகழ்க் குட்டுவன் கண்டோ ர்- 
செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே.
47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நல் நுதல் விறலியர் 
அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும்,
பெற்று ஆனாரே, பரிசிலர் களிறே;
வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின், 5
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல,
நல் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.
48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்
துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பேர் எழில் வாழ்க்கை 
பைம் பொற் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒளி நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி,
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு,
கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ!
'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர் 5
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம்
கை வல் இளையர் நேர் கை நிரைப்ப,
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை,
முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும் 10
இதழ் கவின் அழிந்த மாலையொடு, சாந்து புலர்
பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ- 
நின் மலைப் பிறந்து, நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்,
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை, 15
மேவரு சுற்றமோடு உண்டு, இனிது நுகரும்,
தீம் புனல், ஆயம் ஆடும்,
காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!
49. மன்னவனது வரையா ஈகை
துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : செங் கை மறவர்
யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்,
துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்!
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!- 
களிறு பரந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப; 5
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார்,
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,
மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி,
நெய்த்தோர் தொட்ட செங் கை மறவர் 10
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி,
மழை நாட் புனலின் அவல் பரந்து ஒழுக,
படு பிணம் பிறங்க, பாழ் பல செய்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
வளன் அற, நிகழ்ந்து வாழுநர் பலர் பட, 15
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த
பெருஞ் சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே.
50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெருவரு புனல் தார்
மா மலை, முழக்கின் மான் கணம் பனிப்ப,
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி,
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய;
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ,
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக் 5
காவிரி யன்றியும், பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை!
கொல்களிற்று உரவுத் திரை பிறழ, அவ் வில் பிசிர,
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர,
விரவுப் பணை முழங்கு ஒலி, வெரீஇய வேந்தர்க்கு 10
அரணம் ஆகிய, வெருவரு புனல் தார்
கல் மிசையவ்வும், கடலவும், பிறவும்,
அருப்பம் அமைஇய அமர் கடந்து, உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து,
நல் இசை நனந் தலை இரிய, ஒன்னார் 15
உருப்பு அற நிரப்பினை: ஆதலின், சாந்து புலர்பு,
வண்ணம் நீவி, வகை வனப்புற்ற,
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து,
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து, 20
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ,
எவன் பல கழியுமோ-பெரும!-பல் நாள்,
பகை வெம்மையின், பாசறை மரீஇ,
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது,
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் 25
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே?
பதிகம்
வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி,
கான் நவில் கானம் கணையின் போகி, 5
ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி;
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு;
மாறா வல்வில் இடும்பிற் புறத்து இறுத்து;
உறு புலி அன்ன வயவர் வீழ, 10
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி;
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து;
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து;
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, 20
கெடல் அருந் தானையொடு
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை,
கரணம் அமைந்த காசு அறு செய்யுட்
பரணம் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு வாரியையும், தன்மகன் குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ.
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.
ஐந்தாம் பத்து முற்றும்.

ஐந்தாம் பத்து
பாடினோர் : பரணர்பாடப்பட்டோ ர் : கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
41. வென்றிச் சிறப்பு
துறை : காட்சி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : சுடர் வீ வேங்கை 
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனியவணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப;பண் அமை முழவும், பதலையும், பிறவும்,கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி,காவில் தகைத்த துறை கூடு கலப் பையர் 5கை வல் இளையர் கடவுள் பழிச்ச;மறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறுவரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப்பூவுடை பெருஞ் சினை வாங்கிப் பிளந்து, தன்மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி, 10சேஎர் உற்ற செல்படை மறவர்,தண்டுடை வலத்தர், போர் எதிர்ந்தாங்கு,வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும்மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்ஒன்று இரண்டு அல, பல கழிந்து, திண் தேர் 15வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே:தாவல் உய்யுமோ மற்றே-தாவாது வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்முரசுடைப் பெருஞ் சமத்து அரசு படக் கடந்து,வெவ்வர் ஓச்சம் பெருக, தெவ்வர், 20மிளகு எறி உலக்கையின், இருந் தலை, இடித்து,வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண்வலம் படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்துகால் உளைக் கடும் பிசிர் உடைய, வால் உளைக் 25கடும் பரிப் புரவி ஊர்ந்த நின்,படும் திரைப் பனிக் கடல், உழந்த தாளே!

42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : தசும்பு துளங்கு இருக்கை 
இரும் பனம்புடையல், ஈகை வான் கழல்,மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசிநெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5தும்பை சூடாது மலைந்த மாட்சி,அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி, 10சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து;கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல்உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்- 15மன்பதை மருள, அரசு படக் கடந்து,முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்துமான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்தேரொடு சுற்றம் உலகு உடன் மூய, 20மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து,வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய,தண் பல வரூஉம் புணரியின் பலவே.

43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி
துறை : இயல்மொழி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : ஏறா ஏணி
கவரி முச்சி, கார் விரி கூந்தல்,ஊசல் மேவல், சேயிழை மகளிர்உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின்,பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள்விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ 5கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரைவட திசை எல்லை இமயம் ஆக,தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ,சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த 10போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!இரும் பணை திரங்கப் பெரும் பெயல் ஒளிப்ப,குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,அருவி அற்ற பெரு வறற் காலையும்,அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து, 15கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய,வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து,ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு,உறுவர் ஆர ஓம்பாது உண்டு,நகைவர் ஆர நன் கலம் சிதறி, 20'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரற்பாடு விறலியர் பல் பிடி பெறுக!துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை,வென்றி மேவல், உரு கெழு சிறப்பின்,கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக! 25மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு,கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும்அகவலன் பெறுக, மாவே!' என்றும்,இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும்தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின், 30தொலையாக், கற்ப!-நின் நிலை கண்டிகுமே!- நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது,நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி,நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர்உண்டெனத் தவாஅக் கள்ளின் 35வண் கை வேந்தே! நின் கலி மகிழானே.

44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : நோய் தபு நோன் தொடை
நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ,வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க,பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்றஅரிய என்னாது ஓம்பாது வீசி,கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும், 5'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து,ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்- காணிலியரோ-நிற் புகழ்ந்த யாக்கைமுழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை:நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை 10சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து,புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு,அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்னமோகூர் மன்னன் முரசம் கொண்டு,நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, 15முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந் துணிவைத்தலை மறந்த துய்த் தலைக் கூகைகவலை கவற்றும் குரால்அம் பறந்தலை,முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி, 20துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்தமன்னர் மறைத்த தாழி,வன்னி மன்றத்து விளங்கிய காடே.

45. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : ஊன் துவை அடிசில்
பொலம் பூந் தும்பை, பொறி கிளர் தூணி,புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்,ஒசிவுடை வில்லின், ஒசியா நெஞ்சின்,களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்,விழுமியோர் துவன்றிய அகல் கண் நாட்பின், 5எழுமுடி மார்பின் எய்திய சேரல்!குண்டு கண் அகழிய மதில் பல கடந்து,பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்டநாடு கெழு தாயத்து நனந் தலை அருப்பத்துக்கதவம் காக்கும் கணை எழு அன்ன, 10நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி,பிணம் பிறங்கு அழுவத்து, துணங்கை ஆடி,சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்ஓடாப் பீடர் உள் வழி இறுத்து,முள் இடுபு அறியா ஏணி, தெவ்வர் 15சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்,அனைய பண்பின் தானை மன்னர்- இனி யார் உளரோ, முன்னும் இல்லை- மழை கொளக் குறையாது, புனல் புக நிறையாது,விலங்கு வளி கடவும் துளங்கு இருங் கமஞ் சூல், 20வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு,முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே?

46. கொடைச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : கரை வாய்ப் பருதி 
இழையர், குழையர், நறுந் தண் மாலையர்,சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை,திறல் விடு திருமணி இலங்கு மார்பின்வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்தொடை படு பேரியாழ் பாலை பண்ணி, 5பணியா மரபின் உழிஞை பாட,இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்- சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதிஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய,பல் செருக் கடந்த கொல் களிற்று யானை, 10கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டுஉடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டியவெல் புகழ்க் குட்டுவன் கண்டோ ர்- செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே.

47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : நல் நுதல் விறலியர் 
அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும்,பெற்று ஆனாரே, பரிசிலர் களிறே;வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்துவளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின், 5பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல,நல் நுதல் விறலியர் ஆடும்தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.

48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்
துறை : இயல்மொழி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : பேர் எழில் வாழ்க்கை 
பைம் பொற் தாமரை பாணர்ச் சூட்டி,ஒளி நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி,கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு,கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ!'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர் 5கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம்கை வல் இளையர் நேர் கை நிரைப்ப,வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை,முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும் 10இதழ் கவின் அழிந்த மாலையொடு, சாந்து புலர்பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ- நின் மலைப் பிறந்து, நின் கடல் மண்டும்மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்,பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை, 15மேவரு சுற்றமோடு உண்டு, இனிது நுகரும்,தீம் புனல், ஆயம் ஆடும்,காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!

49. மன்னவனது வரையா ஈகை
துறை : விறலி ஆற்றுப்படைவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : செங் கை மறவர்
யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்,துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்!கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!- களிறு பரந்து இயல, கடு மா தாங்க,ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப; 5எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார்,வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர்வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி,நெய்த்தோர் தொட்ட செங் கை மறவர் 10நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி,மழை நாட் புனலின் அவல் பரந்து ஒழுக,படு பிணம் பிறங்க, பாழ் பல செய்து,படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,வளன் அற, நிகழ்ந்து வாழுநர் பலர் பட, 15கருஞ் சினை விறல் வேம்பு அறுத்தபெருஞ் சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே.

50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்தூக்கு : செந்தூக்குபெயர் : வெருவரு புனல் தார்
மா மலை, முழக்கின் மான் கணம் பனிப்ப,கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி,கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய;வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ,செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக் 5காவிரி யன்றியும், பூ விரி புனல் ஒருமூன்று உடன் கூடிய கூடல் அனையை!கொல்களிற்று உரவுத் திரை பிறழ, அவ் வில் பிசிர,புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர,விரவுப் பணை முழங்கு ஒலி, வெரீஇய வேந்தர்க்கு 10அரணம் ஆகிய, வெருவரு புனல் தார்கல் மிசையவ்வும், கடலவும், பிறவும்,அருப்பம் அமைஇய அமர் கடந்து, உருத்தஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து,நல் இசை நனந் தலை இரிய, ஒன்னார் 15உருப்பு அற நிரப்பினை: ஆதலின், சாந்து புலர்பு,வண்ணம் நீவி, வகை வனப்புற்ற,வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து,கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து, 20பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ,எவன் பல கழியுமோ-பெரும!-பல் நாள்,பகை வெம்மையின், பாசறை மரீஇ,பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது,கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் 25பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே?

பதிகம்
வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி,கான் நவில் கானம் கணையின் போகி, 5ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசைஇன் பல் அருவிக் கங்கை மண்ணி;இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு;மாறா வல்வில் இடும்பிற் புறத்து இறுத்து;உறு புலி அன்ன வயவர் வீழ, 10சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி;அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து;பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்முழாரை முழு முதல் துமியப் பண்ணி,வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15பல் இருங் கூந்தல் முரற்சியால்குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல்ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து;நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, 20கெடல் அருந் தானையொடுகடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை,கரணம் அமைந்த காசு அறு செய்யுட்பரணம் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு வாரியையும், தன்மகன் குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ.
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.
ஐந்தாம் பத்து முற்றும்.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.