LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பதிற்றுப்பத்து-6

 

ஏழாம் பத்து
பாடினோர் : கபிலர்
பாடப்பட்டோர் : செல்வக் கடுங்கோ வாழியாதன்
61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்
துறை : காட்சி வாழ்த்து 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : புலாஅம் பாசறை 
'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின், சிறியிலை, 5
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என, 10
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே-ஒளி வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை, 15
நிலவின் அன்ன வெளி வேல் பாடினி
முழவில் போக்கிய வெளி கை 
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.
62. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வரைபோல் இஞ்சி 
இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு,
மழை என மருளும் மா இரும் பல் தோல்,
எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ,
வந்து, புறத்து இறுக்கும்-பசும் பிசிர் ஒள் அழல் 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு,
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்,
துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே! 
புனல் பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி, 10
அணங்குடைத் தடக் கையர் தோட்டி செப்பி,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்,
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி, 15
அரியல் ஆர்கை வன் கை வினைநர்,
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்,
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்
பாடல் சான்ற, அவர் அகன் தலை நாடே.
63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : அருவி ஆம்பல்
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே;
பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ,
நட்டோ ர்க்கு அல்லது கண் அஞ்சலையே,
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே; 5
நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி,
கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து,
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி, 10
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒளி வாட்
செரு மிகு தானை வெல் போரோயே;
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி,
'நீ கண்டனையேம்' என்றனர்: நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்: அதனால், 15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனந் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்,
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் 
ஆயிர வெள்ள ஊழி 20
வாழி, ஆத! வாழிய, பலவே!
64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உரைசால் வேள்வி 
வலம் படு முரசின் வாய் வாட் கொற்றத்துப்
பொலம் பூண் வேந்தர் பலர்தில்; அம்ம!
அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி,
அந்தணர் அருங் கலம் ஏற்ப, நீர் பட்டு, 5
இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து,
களிறு நிலை முணைஇய தார் அருந் தகைப்பின்,
புறஞ் சிறை வயிரியர்க் காணின், 'வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவி,
அலங்கும் பாண்டில், இழை அணிந்து ஈம்' என, 10
ஆனாக் கொள்கையை ஆதலின், அவ் வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி,
காண்கு வந்திசின்-கழல் தொடி அண்ணல்! 15
மை படு மலர்க் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு, உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால்
பசியுடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல்! நின் பாசறையானே. 20
65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்
துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாள் மகிழ் இருக்கை 
எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின்
பரியுடை நல் மா விரி உளை சூட்டி,
மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! 5
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,
வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத் தோள்,
காமர் கடவுளும் ஆளும் கற்பின், 
சேண் நாறு நறு நுதல், சேயிழை கணவ! 10
பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை!
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப! நின்
நாள் மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே-
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் 
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு, 15
சேறு செய் மாரியின், அளிக்கும் நின்
சாறு படு திருவின் நனை மகிழானே.
66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புதல் சூழ் பறவை 
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல! 
'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்
வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, 5
கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து,
தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின் 
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், 10
நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்,
தார் புரிந்தன்ன வாளுடை விழவின்,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, 15
பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. 20
67. கொடைச் சிறப்பு
துறை : பாணாற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் போழ்க் கண்ணி 
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்,
கடன் அறி மரபின் கை வல் பாண!
தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை- 
கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க, 5
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப,
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர,
அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின்
குழூஉச் சிறை எருவை குருதி ஆர, 
தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு 10
உரு இல் பேய் மகள் கவலை கவற்ற,
நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று;
நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு 15
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து;
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்- 
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய், 20
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக்
கல் உயர் நேரிப் பொருநன்,
செல்வக் கோமான் பாடினை செலினே.
 
68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏம வாழ்க்கை
கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு,
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண், 
கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் 
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர, 
வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது 5
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய,
நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து 
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது,
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு,
கட் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன், 10
அருங் கள் நொடைமை தீர்ந்த பின், மகிழ் சிறந்து,
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுபகொல்- 
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ, 15
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதிச்
செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல், 
அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப! நின் தாள் நிழலோரே? 20
69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் 
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : மண் கெழு ஞாலம் 
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி,
வரைமிசை அருவியின் வயின் வயின் நுடங்க,
கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம்
கால் உறு கடலின் கடிய உரற,
எறிந்து சிதைந்த வாள், 5
இலை தெரிந்த வேல்,
பாய்ந்து ஆய்ந்த மா,
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படுபிணம் பிறங்க நூறி, பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே!- 10
நின்போல், அசைவு இல் கொள்கையர் ஆகலின், அசையாது
ஆண்டோ ர் மன்ற, இம் மண் கெழு ஞாலம்- 
நிலம் பயம் பொழிய, சுடர் சினம் தணிய, 
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப, 
விசும்பு மெய் அகல, பெயல் புரவு எதிர, 15
நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த,
இலங்கு கதிர்த் திகிரி நின் முந்திசினோரே.
70. வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் 
பெயர் : பறைக் குரல் அருவி
களிறு கடைஇய தாள்,
மா உடற்றிய வடிம்பு,
சமம் ததைந்த வேல்,
கல் அலைத்த தோள்,
வில் அலைத்த நல் வலத்து, 5
வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு, 
தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி, 
உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து, 
கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த 10
வலம் படு வான் கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை,
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக்,
கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதற் 15
புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற,
வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை; 
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, 20
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி,
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25
அயிரை நெடு வரை போல,
தொலையாதாக, நீ வாழும் நாளே!
பதிகம்
மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை
ஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன்,
நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி,
வெருவரு தானை கொடு செருப் பல கடந்து, 5
ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி,
மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,
புரோசு மயக்கி, 10
மல்லல் உள்ளமோடு மாசு அற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: புலா அம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ் பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு ஞாலம், பறைக் குரல் அருவி; இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
ஏழாம் பத்து முற்றும்.

ஏழாம் பத்து
பாடினோர் : கபிலர்பாடப்பட்டோர் : செல்வக் கடுங்கோ வாழியாதன்
61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்
துறை : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புலாஅம் பாசறை 
'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,பாவை அன்ன நல்லோள் கணவன்,பொன்னின் அன்ன பூவின், சிறியிலை, 5புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,மலர்ந்த மார்பின், மா வண் பாரிமுழவு மண் புலர, இரவலர் இனைய,வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என, 10இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின்நல் இசை தர வந்திசினே-ஒளி வாள்உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை, 15நிலவின் அன்ன வெளி வேல் பாடினிமுழவில் போக்கிய வெளி கை விழவின் அன்ன, நின் கலி மகிழானே.

62. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : வரைபோல் இஞ்சி 
இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு,மழை என மருளும் மா இரும் பல் தோல்,எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவியொடுமைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ,வந்து, புறத்து இறுக்கும்-பசும் பிசிர் ஒள் அழல் 5ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு,ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்,துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே! புனல் பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி, 10அணங்குடைத் தடக் கையர் தோட்டி செப்பி,பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்,புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்தகளன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி, 15அரியல் ஆர்கை வன் கை வினைநர்,அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்,ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்பாடல் சான்ற, அவர் அகன் தலை நாடே.

63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : அருவி ஆம்பல்
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே;பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ,நட்டோ ர்க்கு அல்லது கண் அஞ்சலையே,வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே; 5நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி,கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து,குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி, 10ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒளி வாட்செரு மிகு தானை வெல் போரோயே;ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி,'நீ கண்டனையேம்' என்றனர்: நீயும்நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்: அதனால், 15செல்வக் கோவே! சேரலர் மருக!கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலிநனந் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்,அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் ஆயிர வெள்ள ஊழி 20வாழி, ஆத! வாழிய, பலவே!

64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்
துறை : காட்சி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : உரைசால் வேள்வி 
வலம் படு முரசின் வாய் வாட் கொற்றத்துப்பொலம் பூண் வேந்தர் பலர்தில்; அம்ம!அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கியஉரைசால் வேள்வி முடித்த கேள்வி,அந்தணர் அருங் கலம் ஏற்ப, நீர் பட்டு, 5இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து,களிறு நிலை முணைஇய தார் அருந் தகைப்பின்,புறஞ் சிறை வயிரியர்க் காணின், 'வல்லேஎஃகு படை அறுத்த கொய் சுவற் புரவி,அலங்கும் பாண்டில், இழை அணிந்து ஈம்' என, 10ஆனாக் கொள்கையை ஆதலின், அவ் வயின்மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெடஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார்உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி,காண்கு வந்திசின்-கழல் தொடி அண்ணல்! 15மை படு மலர்க் கழி மலர்ந்த நெய்தல்இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு, உயர்ந்தமழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால்பசியுடை ஒக்கலை ஒரீஇயஇசை மேம் தோன்றல்! நின் பாசறையானே. 20

65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்
துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : நாள் மகிழ் இருக்கை 
எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின்பரியுடை நல் மா விரி உளை சூட்டி,மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்தகாஞ்சி சான்ற வயவர் பெரும!வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! 5பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத் தோள்,காமர் கடவுளும் ஆளும் கற்பின், சேண் நாறு நறு நுதல், சேயிழை கணவ! 10பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை!பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப! நின்நாள் மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே-தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு, 15சேறு செய் மாரியின், அளிக்கும் நின்சாறு படு திருவின் நனை மகிழானே.

66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : புதல் சூழ் பறவை 
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனியஇடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி,படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல! 'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, 5கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து,தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகியஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர்உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், 10நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல்தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்,தார் புரிந்தன்ன வாளுடை விழவின்,போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்தகடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, 15பூத்த முல்லைப் புதல் சூழ் பறவைகடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. 20

67. கொடைச் சிறப்பு
துறை : பாணாற்றுப்படைவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : வெண் போழ்க் கண்ணி 
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடுபந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்,கடன் அறி மரபின் கை வல் பாண!தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை- கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க, 5வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப,பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர,அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின்குழூஉச் சிறை எருவை குருதி ஆர, தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு 10உரு இல் பேய் மகள் கவலை கவற்ற,நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று;நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர்,வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு 15வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து;சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்- மலர்ந்த காந்தள் மாறாது ஊதியகடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய், 20பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக்கல் உயர் நேரிப் பொருநன்,செல்வக் கோமான் பாடினை செலினே.
 68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : ஏம வாழ்க்கை
கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு,வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண், கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர, வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது 5உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய,நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது,வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு,கட் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன், 10அருங் கள் நொடைமை தீர்ந்த பின், மகிழ் சிறந்து,நாமம் அறியா ஏம வாழ்க்கைவட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும்இன் நகை மேய பல் உறை பெறுபகொல்- பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ, 15நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதிச்செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல், அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும்மணம் கமழ் மார்ப! நின் தாள் நிழலோரே? 20

69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்பெயர் : மண் கெழு ஞாலம் 
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி,வரைமிசை அருவியின் வயின் வயின் நுடங்க,கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம்கால் உறு கடலின் கடிய உரற,எறிந்து சிதைந்த வாள், 5இலை தெரிந்த வேல்,பாய்ந்து ஆய்ந்த மா,ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடுபடுபிணம் பிறங்க நூறி, பகைவர்கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே!- 10நின்போல், அசைவு இல் கொள்கையர் ஆகலின், அசையாதுஆண்டோ ர் மன்ற, இம் மண் கெழு ஞாலம்- நிலம் பயம் பொழிய, சுடர் சினம் தணிய, பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப, விசும்பு மெய் அகல, பெயல் புரவு எதிர, 15நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த,இலங்கு கதிர்த் திகிரி நின் முந்திசினோரே.
70. வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : பறைக் குரல் அருவி
களிறு கடைஇய தாள்,மா உடற்றிய வடிம்பு,சமம் ததைந்த வேல்,கல் அலைத்த தோள்,வில் அலைத்த நல் வலத்து, 5வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு, தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி, உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து, கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த 10வலம் படு வான் கழல் வயவர் பெரும!நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை,பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக்,கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதற் 15புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற,வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்விஉயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை; வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, 20இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி,தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!மாடோ ர் உறையும் உலகமும் கேட்பஇழுமென இழிதரும் பறைக் குரல் அருவிமுழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25அயிரை நெடு வரை போல,தொலையாதாக, நீ வாழும் நாளே!

பதிகம்
மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்தநெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தைஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன்,நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி,வெருவரு தானை கொடு செருப் பல கடந்து, 5ஏத்தல் சான்ற இடனுடை வேள்விஆக்கிய பொழுதின் அறத்துறை போகி,மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்குஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,புரோசு மயக்கி, 10மல்லல் உள்ளமோடு மாசு அற விளங்கியசெல்வக் கடுங்கோ வாழியாதனைக்கபிலர் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: புலா அம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ் பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு ஞாலம், பறைக் குரல் அருவி; இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
ஏழாம் பத்து முற்றும்.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.