LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பதிற்றுப்பத்து-7

 

எட்டாம் பத்து
பாடினோர் : அரிசில்கிழார்
பாடப்பட்டோ ர் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
71. வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : குறுந் தாள் ஞாயில் 
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் 
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து, 
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை, 
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் 
அம்பண அளவை உறை குவித்தாங்கு, 5
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் 
செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின், 
அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே: 
ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ, 
போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப, 10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் 
குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில் 
ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு 
கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து, 
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப, 15
மத்துக் கயிறு ஆடா வைகற் பொழுது நினையூஉ, 
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க, 
பதி பாழாக வேறு புலம் படர்ந்து, 
விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென, 
அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் 20
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர், 
மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின், 
பலி கொண்டு பெயரும் பாசம் போல,
திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி! 
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி, 25
அறிந்தனை அருளாய்ஆயின், 
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?
72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : உருத்து எழு வெள்ளம் 
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார், 
சூழாது துணிதல் அல்லது, வறிது உடன் 
காவல் எதிரார், கறுத்தோர், நாடு; நின் 
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து, 
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் 5
நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின் 
பண்பு நன்கு அறியார், மடம் பெருமையின்; 
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை,
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி, 
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் 10
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து, 
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து 
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து, 
பொங்கு பிசிர் நுடக்கிய செஞ் சுடர் நிகழ்வின் 
மடங்கல் தீயின் அனையை, 15
சினம் கெழு குருசில்! நின் உடற்றிசினோர்க்கே.
73. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : நிறம் திகழ் பாசிழை 
உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும், 
பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப் 
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே! 
....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த 
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் 5
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் 
.... .... .... .... ... ... ... 
மருதம் சான்ற மலர்தலை விளை வயல் 
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் 
இரவும் பகலும் பாசிழை களையார், 10
குறும் பல் யாணர்க் குரவை அயரும் 
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் 
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை! 
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக் 
கொல்லிப் பொருந! கொடித் தேர்ப் பொறைய! 'நின் 15
வளனும் ஆண்மையும் கைவண்மையும் 
மாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள் 
யான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும் 
சான்றோர் உரைப்பத் தெளிகுவர்கொல்?' என, 
ஆங்கும் மதி மருளக் காண்குவல்; 20
'யாங்கு உரைப்பேன்?' என வருந்துவல், யானே.
74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : நலம் பெறு திருமணி 
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது, 
வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப; 
சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல், 
வேறு படு திருவின் நின் வழி வாழியர், 
கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம், 5
பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம், 
வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி, 
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி,
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின், 
புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் 10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டிற் 
பருதி போகிய புடை கிளை கட்டி,
எஃகுடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன் 
சூடு நிலை உற்றுச் சுடர் விடு தோற்றம் 
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப, 15
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள், 
ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதல் கருவில் 
எண் இயல் முற்றி, ஈர் அறிவு புரிந்து, 
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் 
காவற்கு அமைந்த அரசு துறை போகிய 20
வீறு சால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு- 
அருங் கடன் இறுத்த செருப் புகல் முன்ப!- 
அன்னவை மருண்டனென்அல்லேன்; நின் வயின் 
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை, 
'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், 25
தெய்வமும், யாவதும், தவம் உடையோர்க்கு' என, 
வேறு படு நனந் தலைப் பெயரக் 
கூறினை, பெரும! நின் படிமையானே.
75. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : தீம் சேற்று யாணர் 
இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம், 
அரும் பொறி வய மான் அனையை-பல் வேல், 
பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!- 
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து, 
நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு, 5
அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர், 
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை, 
வன் புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து, 
கள்ளுடை நியமத்து ஒளி விலை கொடுக்கும் 10
வெளி வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் 
செந்நெல் வல்சி அறியார், தம்தம் 
பாடல் சான்ற வைப்பின் 
நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே?
76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : மா சிதறு இருக்கை 
களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து, 
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று, 
முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி, 
பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் 
பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ, 5
பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி, 
இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு 
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை 
கண்டனென் செல்கு வந்தனென்-கால்கொண்டு, 
கருவி வானம் தண் தளி சொரிந்தென, 10
பல் விதை உழவின் சில் ஏராளர் 
பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், 
கழுவுறு கலிங்கம் கடுப்ப, சூடி, 
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் 
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே! 15
77. படைப் பெருமைச் சிறப்பு
துறை : உழிஞை அரவம் 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வென்று ஆடு துணங்கை
'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?' 
என்றனிர்ஆயின்-ஆறு செல் வம்பலிர்!- 
மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய, 
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை 
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின், 5
பண் அமை தேரும், மாவும், மாக்களும், 
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே; 
கந்து கோளீயாது, காழ் பல முருக்கி, 
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி, 
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர் 10
ஆ பரந்தன்ன செலவின், பல் 
யானை காண்பல், அவன் தானையானே.
78. வென்றிச் சிறப்பு
துறை : விறலி ஆற்றுப்படை 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : பிறழ நோக்கு இயவர் 
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம்
அவ் வெளி அருவி உவ் வரையதுவே- 
சில் வளை விறலி! செல்குவை ஆயின், 
வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து,
மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, 5
கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல, 
பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின், 
வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் 
வில் பயில் இறும்பின், தகடூர் நூறி, 
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் 10
ஓடுறு கடு முரண் துமியச் சென்று, 
வெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு 
யாடு பரந்தன்ன மாவின், 
ஆ பரந்தன்ன யானையோன் குன்றே.
79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிறம் படு குருதி 
உயிர் போற்றலையே, செருவத்தானே; 
கொடை போற்றலையே, இரவலர் நடுவண்; 
பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி; 
நின்வயிற் பிரிந்த நல் இசை கனவினும் 
பிறர் நசை அறியா-வயங்கு செந் நாவின், 5
படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர் 
தோளிடைக் குழைந்த கோதை மார்ப!- 
அனைய அளப்பு அருங்குரையை: அதனால், 
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து, 
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென, 10
வில் குலை அறுத்து, கோலின் வாரா 
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர் 
அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய 
அணங்கு உடை மரபின் கட்டில்மேல் இருந்து, 
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து, 15
நிறம் படு குருதி புறம்படின் அல்லது, 
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் 
கடவுள் அயிரையின் நிலைஇ,
கேடு இலவாக, பெரும! நின் புகழே!
80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் 
பெயர் : புண்ணுடை எறுழ்த் தோள் 
வால் மருப்பின் களிற்று யானை 
மா மலையின் கணம் கொண்டு, அவர் 
எடுத்து எறிந்த விறல் முரசம் 
கார் மழையின் கடிது முழங்க; 
சாந்து புலர்ந்த வியல் மார்பின், 5
தொடி சுடர் வரும் வலி முன் கை, 
புண்ணுடை எறுழ்த் தோள், புடையல்அம் கழல் கால், 
பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை, ஒளி வாள்,
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று, உரைஇ,
'இடுக திறையே, புரவு எதிர்ந்தோற்கு' என, 10
அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ, 
அனையை ஆகன்மாறே, பகைவர் 
கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவிக் 
கடும் பரி நெடுந் தேர் மீமிசை நுடங்கு கொடி, 
புல வரைத் தோன்றல் யாவது-சினப் போர், 15
நிலவரை நிறீஇய நல் இசை, 
தொலையாக் கற்ப!-நின் தெம்முனையானே?
பதிகம்
பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,
கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை, 
பல் வேல் தானை அதிகமானோடு
இரு பெரு வேந்தரையும் உடன்நிலை வென்று, 5
முரசும் குடையும் கலனும் கொண்டு,
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு,
துகள் தீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து,
தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய
அருந் திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை 10
மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: குறுந் தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம் திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர், மா சிதறு இருக்கை, வென்று ஆடு துணங்கை, பிறழ நோக்கு இயவர், நிறம் படு குருதி, புண்ணுடை எறுழ்த் தோள், இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, 'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப, அவர், 'யான் இரப்ப, இதனை ஆள்க!' என்று அமைச்சுப் பூண்டார்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான்.
எட்டாம் பத்து முற்றும்.


எட்டாம் பத்து
பாடினோர் : அரிசில்கிழார்பாடப்பட்டோ ர் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
71. வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கு பெயர் : குறுந் தாள் ஞாயில் 
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து, செறு வினை மகளிர் மலிந்த வெக்கை, பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் அம்பண அளவை உறை குவித்தாங்கு, 5கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின், அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே: ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ, போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப, 10மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில் ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து, புலவு வில் இளையர் அங்கை விடுப்ப, 15மத்துக் கயிறு ஆடா வைகற் பொழுது நினையூஉ, ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க, பதி பாழாக வேறு புலம் படர்ந்து, விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென, அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் 20பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர், மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின், பலி கொண்டு பெயரும் பாசம் போல,திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி! உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி, 25அறிந்தனை அருளாய்ஆயின், யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?

72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : உருத்து எழு வெள்ளம் 
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார், சூழாது துணிதல் அல்லது, வறிது உடன் காவல் எதிரார், கறுத்தோர், நாடு; நின் முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து, மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் 5நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின் பண்பு நன்கு அறியார், மடம் பெருமையின்; துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை,நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி, உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் 10வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து, ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து, பொங்கு பிசிர் நுடக்கிய செஞ் சுடர் நிகழ்வின் மடங்கல் தீயின் அனையை, 15சினம் கெழு குருசில்! நின் உடற்றிசினோர்க்கே.

73. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிறம் திகழ் பாசிழை 
உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும், பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப் பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே! ....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் 5தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் .... .... .... .... ... ... ... மருதம் சான்ற மலர்தலை விளை வயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார், 10குறும் பல் யாணர்க் குரவை அயரும் காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை! கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக் கொல்லிப் பொருந! கொடித் தேர்ப் பொறைய! 'நின் 15வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள் யான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும் சான்றோர் உரைப்பத் தெளிகுவர்கொல்?' என, ஆங்கும் மதி மருளக் காண்குவல்; 20'யாங்கு உரைப்பேன்?' என வருந்துவல், யானே.

74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நலம் பெறு திருமணி 
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப; சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல், வேறு படு திருவின் நின் வழி வாழியர், கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம், 5பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம், வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி, தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி,கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின், புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் 10தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டிற் பருதி போகிய புடை கிளை கட்டி,எஃகுடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன் சூடு நிலை உற்றுச் சுடர் விடு தோற்றம் விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப, 15நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள், ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதல் கருவில் எண் இயல் முற்றி, ஈர் அறிவு புரிந்து, சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற்கு அமைந்த அரசு துறை போகிய 20வீறு சால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு- அருங் கடன் இறுத்த செருப் புகல் முன்ப!- அன்னவை மருண்டனென்அல்லேன்; நின் வயின் முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை, 'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், 25தெய்வமும், யாவதும், தவம் உடையோர்க்கு' என, வேறு படு நனந் தலைப் பெயரக் கூறினை, பெரும! நின் படிமையானே.

75. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தீம் சேற்று யாணர் 
இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம், அரும் பொறி வய மான் அனையை-பல் வேல், பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!- வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து, நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு, 5அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர், வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை, வன் புலம் தழீஇ மென்பால் தோறும்அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து, கள்ளுடை நியமத்து ஒளி விலை கொடுக்கும் 10வெளி வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல் வல்சி அறியார், தம்தம் பாடல் சான்ற வைப்பின் நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே?

76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மா சிதறு இருக்கை 
களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து, ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று, முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி, பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ, 5பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மா சிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென்-கால்கொண்டு, கருவி வானம் தண் தளி சொரிந்தென, 10பல் விதை உழவின் சில் ஏராளர் பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கம் கடுப்ப, சூடி, இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே! 15

77. படைப் பெருமைச் சிறப்பு
துறை : உழிஞை அரவம் வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : வென்று ஆடு துணங்கை
'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?' என்றனிர்ஆயின்-ஆறு செல் வம்பலிர்!- மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய, கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின், 5பண் அமை தேரும், மாவும், மாக்களும், எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே; கந்து கோளீயாது, காழ் பல முருக்கி, உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி, சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர் 10ஆ பரந்தன்ன செலவின், பல் யானை காண்பல், அவன் தானையானே.

78. வென்றிச் சிறப்பு
துறை : விறலி ஆற்றுப்படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : பிறழ நோக்கு இயவர் 
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம்அவ் வெளி அருவி உவ் வரையதுவே- சில் வளை விறலி! செல்குவை ஆயின், வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து,மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, 5கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல, பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின், தகடூர் நூறி, பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் 10ஓடுறு கடு முரண் துமியச் சென்று, வெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு யாடு பரந்தன்ன மாவின், ஆ பரந்தன்ன யானையோன் குன்றே.

79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : நிறம் படு குருதி 
உயிர் போற்றலையே, செருவத்தானே; கொடை போற்றலையே, இரவலர் நடுவண்; பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி; நின்வயிற் பிரிந்த நல் இசை கனவினும் பிறர் நசை அறியா-வயங்கு செந் நாவின், 5படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப!- அனைய அளப்பு அருங்குரையை: அதனால், நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து, கொல் களிற்று யானை எருத்தம் புல்லென, 10வில் குலை அறுத்து, கோலின் வாரா வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர் அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய அணங்கு உடை மரபின் கட்டில்மேல் இருந்து, தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து, 15நிறம் படு குருதி புறம்படின் அல்லது, மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரையின் நிலைஇ,கேடு இலவாக, பெரும! நின் புகழே!
80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : புண்ணுடை எறுழ்த் தோள் 
வால் மருப்பின் களிற்று யானை மா மலையின் கணம் கொண்டு, அவர் எடுத்து எறிந்த விறல் முரசம் கார் மழையின் கடிது முழங்க; சாந்து புலர்ந்த வியல் மார்பின், 5தொடி சுடர் வரும் வலி முன் கை, புண்ணுடை எறுழ்த் தோள், புடையல்அம் கழல் கால், பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை, ஒளி வாள்,ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று, உரைஇ,'இடுக திறையே, புரவு எதிர்ந்தோற்கு' என, 10அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ, அனையை ஆகன்மாறே, பகைவர் கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவிக் கடும் பரி நெடுந் தேர் மீமிசை நுடங்கு கொடி, புல வரைத் தோன்றல் யாவது-சினப் போர், 15நிலவரை நிறீஇய நல் இசை, தொலையாக் கற்ப!-நின் தெம்முனையானே?

பதிகம்
பொய் இல் செல்வக் கடுங்கோவுக்குவேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை, பல் வேல் தானை அதிகமானோடுஇரு பெரு வேந்தரையும் உடன்நிலை வென்று, 5முரசும் குடையும் கலனும் கொண்டு,உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு,துகள் தீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து,தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்தியஅருந் திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை 10மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: குறுந் தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம் திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர், மா சிதறு இருக்கை, வென்று ஆடு துணங்கை, பிறழ நோக்கு இயவர், நிறம் படு குருதி, புண்ணுடை எறுழ்த் தோள், இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, 'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப, அவர், 'யான் இரப்ப, இதனை ஆள்க!' என்று அமைச்சுப் பூண்டார்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான்.
எட்டாம் பத்து முற்றும்.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.