LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

பட்டினப்பாலை

 

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. 
நூல்
காவிரியின் சிறப்பு
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி 
வான்பொய்ப்பினும் தான்பொய்யா 5
மலைத்தலைய கடற்காவிரி 
புனல்பரந்து பொன்கொழிக்கும்  
சோழ நாட்டின் சிறப்பு
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி 10
நீர்ச்செறுவி னீணெய்தற் 
பூச்சாம்பும் புலத்தாங்கட்
காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெருமை முழுக்குழவி 
கூட்டுநிழல் துயில்வதியும் 15
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை 
முதற்சேம்பின் முளையிஞ்சி
அனகர் வியன்முற்றத்துச் 20
சுடர்நுதல் மடநோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் 
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் 25
விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு  
நகரச் சிறப்பு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்லாய்ப் பஃறி 30
பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்
கழிசூழ் படப்பைக் கலியாணர்ப்
பொழிற் புறவிற் பூந்தண்டலை 
மழைநீங்கிய மாவிசும்பின் 
மதிசேர்ந்த மகவெண்மீன் 35
உருகெழுதிறல் உயர்கோட்டத்து 
முருகமர்பூ முரண்கிடக்கை 
வரியணிசுடர் வான்பொய்கை
இருகாமத் திணையேரிப்
புலிப்பொறிப் போர்க்கதவின் 40
திருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
அறநிலைஇய அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி 
யாறுபோலப் பரந்தொழுகி 45
ஏறுபொரச் சேறாகித்
தேரொடத் துகள் கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டுந் 50
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம் 55
மாயிரும் பெடையோ டிரியல் போகிப் 
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த் 
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் 
முதுமரத்த முரண் களரி  
மக்களின் விளையாட்டுக்கள்
வரிமணல் அகந்திட்டை 60
இருங்கிளை யினனொக்கற்
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும் 
வயலாமைப் புழுக்குண்டும் 
வறளடும்பின் மலர்மலைந்தும் 65
புனலாம்பற் பூச்சூடியும்
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோண்மீன் போல 
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் 70
பெருங்சினத்தாற் புறக்கொடாஅது
இருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர்
கல்லெறியும் கவண்வெரீஇப் 
புள்ளிரியும் புகர்ப்போந்தைப் 
பறழ்ப்பன்றிப் பல்கோழி 75
உறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்  
கடற்கரையில் பகல் விளையாட்டு
கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய 80
குறுங்கூரைக் குடிநாப்பண்
நிலவடைந்த இருள்போல 
வலையுணங்கு மணல்முன்றில் 
வீழ்த்தாழைத் தாட்டழ்ந்த
வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் 85
சினைச்சுறவின் கோடுநட்டு 
மனைச்சேர்த்திய வல்லணங்கினால் 
மடற்றாழை மலர்மலைந்தும் 
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர 90
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
உவவுமடிந் துண்டாடியும்
புலவுமணற் பூங்கானல்
மாமலை யணைந்த கொண்மூப் போலவும் 95
தாய்முலை தழுவிய குழவி போலவும்
தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும்
மலியோத் தொலிகூடல்
தீதுநீங்கக் கடலாடியும்
மாசுபோகப் புனல்படிந்தும் 100
அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
அகலாக் காதலொடு பகல்விளை யாடிப்  
இரவில் துயிலும் நிலை
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் 105
துணைப்புணர்ந்த மடமங்கையர் 
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும் 110
நெடுங்கால் மாடத் தொள்ளெரி நோக்கிக்
கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்
பாட லோர்த்தும் நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்தும்
கண்ணடைஇய கடைக்கங்குலான் 115
மாஅகாவிரி மணங்கூட்டும் 
தூஉவெக்கர்த் துயில் மடிந்து  
ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
வாலிணர் மடற்றாழை
வேலாழி வியந்தெருவின்
நல்லிறைவன் பொருள்காக்கும். 120
தொல்லிசைத் தொழில்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
தேர்பூண்ட மாஅபோல
வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது 125
வான்முகந்தநீர் மலைப்பொழியவும் 
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும் 
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும 130
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின் 
வலியுடை வல்லணங்கினோன் 
புலிபொறித்துப் புறம்போக்கி 135
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்ற 140
ஏழகத் தகரோ டுகளு முன்றிற்  
மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்
குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் 
புழைவாயிற் போகிடைகழி 
மழைதோயும் உயர்மாடத்துச் 145
சேவடிச் செறிகுறங்கிற் 
பாசிழைப் பகட்டல்குல் 
தூசிடைத் துகிர்மேனி 
மயிலியல் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர 150
வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிக் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் 155
குழலகவ யாழ்முரல 
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து  
பலவகைக் கொடிகளின் காட்சி
மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழ கொடியும 160
வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று
உருறுகெழு கரும்பின் ஓண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து 
வாலரிசிப் பலிசிதறிப் 165
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர் 170
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்
வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத் 
தூங்குநாவாய் துவன்றிருக்கை 
மிசைச்கூம்பி னசைச்கொடியும் 175
மீந்தடிந்து விடக்கறுத்து
ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில் 
மணற்குவைஇ மலர்சிதறிப் 
பலர்புகுமனைப் பலிப்புதவின்
நறவுநொடைக் கொடியோடு 180
பிறபிறவு நனிவிரைஇப்
பல்வே றுருவிற் பதாகை நீழல்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்  
வளம் பல நிறைந்த தெருக்கள்
செல்லா நல்லிசை யுமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் 185
காலின் வந்த கருங்கறி மூடையும் 
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் 
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயுனும். 190
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி 
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்  
வணிகர்களின் வாழ்க்கை முறை
நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிதுதுஞ்சிக் 195
கிளை கலித்துப் பகைபேணாது 
வலைஞர்முன்றில் மீன்பிறழவும் 
விலைஞர்குரம்பை மாவீண்டவும்
கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் 200
நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர் 205
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர் 
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாத 210
பல்பண்டம் பகர்ந்துவீசும்
தொல்கொண்டித் துவன்றிருக்கைப்  
பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு 215
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் 
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் 
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்  
தலைவனது அவல நிலை
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
வாரேன் வாழிய நெஞ்சே  
திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை
கூருகிர்க்
220
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு 
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் 225
செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழினெய்திப்  
பகைவர்மேல் போருக்கு எழுதல்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள் 230
உகிருடை யடிய ஓங்கெழில் யானை 
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் 
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் 235
பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம் 
மாக்கண் அகலறை அதிர்வன முழங்க 
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று  
பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்
தண்பணை எடுப்பி
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீட 240
மாவிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவிய மயங்கி நீரற்று
அறுகோட் டிரலையொடு மான்பிணை உகளவும் 245
கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற்
பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப 250
பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவும்
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துக் 255
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்
அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்
கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும 260
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி 
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டில்
ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
தொடுதோ லடியரி துடிபடக் குழீஇக் 265
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து 
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழியப்
பெரும்பாழ் செய்தும் அமையான்  
திருமாவளவனது ஆற்றல்
மருங்கற 270
மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே 
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தன்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்கத்
தொல்லரு வாளர் தொழில் கேட்ப 275
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர் 
மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள் 
மாத்தனை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப 280
புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்  
சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிக்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் 285
கோயிலொடு குடிநிறீஇ 
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇ
பொருவேமெனப் பெயர்கொடுத்து
ஒருவேனெப் புறக்கொடாத 290
திருநிலைஇய பெருமன் னெயில் 
மின்னொளியெறிப்பத் தம்மொளி மழுங்கி 
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
பொற்றொடிப் புதல்வர் ஒடி யாடவும் 295
முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண்
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன்  
தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறல்
தெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன் 300
கோலினுந் தண்ணிய தடமென் தோள.  
பட்டினப்பாலை முற்றும்.
தனிப் பாடல்
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால் 
இச் சக்கரமே அளந்ததால்- செய்ச் செய் 
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய், புனல் நீர்நாடன் 
கரிகாலன் கால் நெருப்பு உற்று.

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. 
நூல்

காவிரியின் சிறப்பு

வசையில்புகழ் வயங்குவெண்மீன்திசைதிரிந்து தெற்கேகினும்தற்பாடிய தளியுணவிற்புட்டேம்பப் புயன்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா 5மலைத்தலைய கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும்  

சோழ நாட்டின் சிறப்பு

விளைவறா வியன்கழனிக்கார்க்கரும்பின் கமழாலைத்தீத்தெறுவிற் கவின்வாடி 10நீர்ச்செறுவி னீணெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கட்காய்ச்செந்நெற் கதிரருந்துமோட்டெருமை முழுக்குழவி கூட்டுநிழல் துயில்வதியும் 15கோட்டெங்கிற் குலைவாழைக்காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்இனமாவின் இணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளையிஞ்சிஅனகர் வியன்முற்றத்துச் 20சுடர்நுதல் மடநோக்கின்நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழைபொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் 25விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு  

நகரச் சிறப்பு

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றிநெல்லொடு வந்த வல்லாய்ப் பஃறி 30பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்கழிசூழ் படப்பைக் கலியாணர்ப்பொழிற் புறவிற் பூந்தண்டலை மழைநீங்கிய மாவிசும்பின் மதிசேர்ந்த மகவெண்மீன் 35உருகெழுதிறல் உயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கைஇருகாமத் திணையேரிப்புலிப்பொறிப் போர்க்கதவின் 40திருத்துஞ்சுந் திண்காப்பிற்புகழ்நிலைஇய மொழிவளரஅறநிலைஇய அகனட்டிற்சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகி 45ஏறுபொரச் சேறாகித்தேரொடத் துகள் கெழுமிநீறாடிய களிறுபோலவேறுபட்ட வினையோவத்துவெண்கோயில் மாசூட்டுந் 50தண்கேணித் தகைமுற்றத்துப்பகட்டெருத்தின் பலசாலைத்தவப்பள்ளித் தாழ்காவின்அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம் 55மாயிரும் பெடையோ டிரியல் போகிப் பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த் தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் முதுமரத்த முரண் களரி  

மக்களின் விளையாட்டுக்கள்

வரிமணல் அகந்திட்டை 60இருங்கிளை யினனொக்கற்கருந்தொழிற் கலிமாக்கள்கடலிறவின் சூடுதின்றும் வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும் 65புனலாம்பற் பூச்சூடியும்நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்நாண்மீன் விராய கோண்மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் 70பெருங்சினத்தாற் புறக்கொடாஅதுஇருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர்கல்லெறியும் கவண்வெரீஇப் புள்ளிரியும் புகர்ப்போந்தைப் பறழ்ப்பன்றிப் பல்கோழி 75உறைக்கிணற்றுப் புறச்சேரிமேழகத் தகரொடு சிவல்விளை யாடக்  

கடற்கரையில் பகல் விளையாட்டு

கிடுகுநிரைத் தெஃகூன்றிநடுகல்லின் அரண்போலநெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய 80குறுங்கூரைக் குடிநாப்பண்நிலவடைந்த இருள்போல வலையுணங்கு மணல்முன்றில் வீழ்த்தாழைத் தாட்டழ்ந்தவெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் 85சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினால் மடற்றாழை மலர்மலைந்தும் பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்புன்றலை இரும்பரதவர 90பைந்தழைமா மகளிரொடுபாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாதுஉவவுமடிந் துண்டாடியும்புலவுமணற் பூங்கானல்மாமலை யணைந்த கொண்மூப் போலவும் 95தாய்முலை தழுவிய குழவி போலவும்தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும்மலியோத் தொலிகூடல்தீதுநீங்கக் கடலாடியும்மாசுபோகப் புனல்படிந்தும் 100அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும்பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்அகலாக் காதலொடு பகல்விளை யாடிப்  

இரவில் துயிலும் நிலை

பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் 105துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும்மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்மகளிர்கோதை மைந்தர் மலையவும் 110நெடுங்கால் மாடத் தொள்ளெரி நோக்கிக்கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்பாட லோர்த்தும் நாடக நயந்தும்வெண்ணிலவின் பயன்றுய்த்தும்கண்ணடைஇய கடைக்கங்குலான் 115மாஅகாவிரி மணங்கூட்டும் தூஉவெக்கர்த் துயில் மடிந்து  

ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்

வாலிணர் மடற்றாழைவேலாழி வியந்தெருவின்நல்லிறைவன் பொருள்காக்கும். 120தொல்லிசைத் தொழில்மாக்கள்காய்சினத்த கதிர்ச்செல்வன்தேர்பூண்ட மாஅபோலவைகல்தொறும் அசைவின்றிஉல்குசெயக் குறைபடாது 125வான்முகந்தநீர் மலைப்பொழியவும் மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும் மாரிபெய்யும் பருவம்போலநீரினின்று நிலத்தேற்றவும்நிலத்தின்று நீர்ப்பரப்பவும 130அளந்தறியாப் பலபண்டம்வரம்பறியாமை வந்தீண்டிஅருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி 135மதிநிறைந்த மலிபண்டம்பொதிமூடைப் போரேறிமழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்வரையாடு வருடைத் தோற்றம் போலக்கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்ற 140ஏழகத் தகரோ டுகளு முன்றிற்  

மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்

குறுந்தொடை நெடும்படிக்காற்கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் புழைவாயிற் போகிடைகழி மழைதோயும் உயர்மாடத்துச் 145சேவடிச் செறிகுறங்கிற் பாசிழைப் பகட்டல்குல் தூசிடைத் துகிர்மேனி மயிலியல் மானோக்கிற்கிளிமழலை மென்சாயலோர 150வளிநுழையும் வாய்பொருந்திஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்னசெறிதொடி முன்கை கூப்பிக் செவ்வேள்வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் 155குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்பவிழவறா வியலாவணத்து  

பலவகைக் கொடிகளின் காட்சி

மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்தியமலரணி வாயிற் பலர்தொழ கொடியும 160வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்றுஉருறுகெழு கரும்பின் ஓண்பூப் போலக்கூழுடைக் கொழுமஞ்சிகைத்தாழுடைத் தண்பணியத்து வாலரிசிப் பலிசிதறிப் 165பாகுகுத்த பசுமெழுக்கிற்காழூன்றிய கவிகிடுகின்மேலூன்றிய துகிற்கொடியும்பல்கேள்வித் துறைபோகியதொல்லாணை நல்லாசிரியர் 170உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்வெளிலிளக்குங் களிறுபோலத்தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை மிசைச்கூம்பி னசைச்கொடியும் 175மீந்தடிந்து விடக்கறுத்துஊன்பொரிக்கும் ஒலிமுன்றில் மணற்குவைஇ மலர்சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவின்நறவுநொடைக் கொடியோடு 180பிறபிறவு நனிவிரைஇப்பல்வே றுருவிற் பதாகை நீழல்செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்  

வளம் பல நிறைந்த தெருக்கள்

செல்லா நல்லிசை யுமரர் காப்பின்நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் 185காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்கங்கை வாரியும் காவிரிப் பயுனும். 190ஈழத் துணவும் காழகத் தாக்கமும்அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்  

வணிகர்களின் வாழ்க்கை முறை

நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலும்ஏமாப்ப இனிதுதுஞ்சிக் 195கிளை கலித்துப் பகைபேணாது வலைஞர்முன்றில் மீன்பிறழவும் விலைஞர்குரம்பை மாவீண்டவும்கொலைகடிந்தும் களவுநீக்கியும்அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் 200நல்லனெடு பகடோம்பியும்நான்மறையோர் புகழ்பரப்பியும்பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்கொடுமேழி நசையுழவர் 205நெடுநுகத்துப் பகல்போலநடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்துதமவும் பிறவு மொப்ப நாடிக்கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாத 210பல்பண்டம் பகர்ந்துவீசும்தொல்கொண்டித் துவன்றிருக்கைப்  

பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்

பல்லாயமொடு பதிபழகிவேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு 215மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்  

தலைவனது அவல நிலை

வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழியவாரேன் வாழிய நெஞ்சே  

திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை

கூருகிர்க்220கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றிஅருங்கரை கவியக் குத்திக் குழிகொன்றுபெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதின் உணர நாடி நண்ணார் 225செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்துஉருகெழு தாயம் ஊழினெய்திப்  

பகைவர்மேல் போருக்கு எழுதல்

பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள் 230உகிருடை யடிய ஓங்கெழில் யானை வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டுவேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் 235பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம் மாக்கண் அகலறை அதிர்வன முழங்க முனைகெடச் சென்று முன்சம முருக்கித்தலைதவச் சென்று  

பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்

தண்பணை எடுப்பிவெண்பூக் கரும்பொடு செந்நெல் நீட 240மாவிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கிக்கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்செறுவும் வாவிய மயங்கி நீரற்றுஅறுகோட் டிரலையொடு மான்பிணை உகளவும் 245கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கிஅந்தி மாட்டிய நந்தா விளக்கின்மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழவம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற்பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப 250பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவும்அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்ததிரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துக் 255சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பிஅழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும 260கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டில்ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்துபைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்தொடுதோ லடியரி துடிபடக் குழீஇக் 265கொடுவி லெயினர் கொள்ளை யுண்டஉணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும்அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழியப்பெரும்பாழ் செய்தும் அமையான்  

திருமாவளவனது ஆற்றல்

மருங்கற 270மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்தன்முன்னிய துறைபோகலிற்பல்லொளியர் பணிபொடுங்கத்தொல்லரு வாளர் தொழில் கேட்ப 275வடவர் வாடக் குடவர் கூம்பத்தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர் மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள் மாத்தனை மறமொய்ம்பிற்செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப 280புன்பொதுவர் வழிபொன்றஇருங்கோவேள் மருங்குசாயக்  

சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்

காடுகொன்று நாடாக்கிக்குளந்தொட்டு வளம்பெருக்கிக்பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் 285கோயிலொடு குடிநிறீஇ வாயிலொடு புழையமைத்துஞாயிறொறும் புதைநிறீஇபொருவேமெனப் பெயர்கொடுத்துஒருவேனெப் புறக்கொடாத 290திருநிலைஇய பெருமன் னெயில் மின்னொளியெறிப்பத் தம்மொளி மழுங்கி விசிபிணி முழவின் வேந்தர் சூடியபசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்பொற்றொடிப் புதல்வர் ஒடி யாடவும் 295முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண்அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்திருமா வளவன்  

தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறல்

தெவ்வர்க் கோக்கியவேலினும் வெய்ய கானமவன் 300கோலினுந் தண்ணிய தடமென் தோள.  

பட்டினப்பாலை முற்றும்.

தனிப் பாடல்

முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால் இச் சக்கரமே அளந்ததால்- செய்ச் செய் அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய், புனல் நீர்நாடன் கரிகாலன் கால் நெருப்பு உற்று.

by Swathi   on 29 Mar 2012  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
02-Dec-2017 09:12:15 உதயசங்கர் said : Report Abuse
நான் தங்களிடம் பட்டினப்பாலை பாடலும் தெளிவுரைகள் ..ஒவ்வொரு வரிகளுக்கும் பாடலும் வார்த்தை அர்த்தங்களும் ..கேட்டிருந்தேன் ஆனால் பாடல் மட்டுமே எனது ஈமெயில் கு ..அனுப்பி உள்ளீர்கள் ..எனக்கு பாடல் வரிகளும் முழு அர்த்தமும் ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் வேண்டும் தங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த ..நன்றி
 
02-Dec-2017 09:11:58 உதயசங்கர் said : Report Abuse
நான் தங்களிடம் பட்டினப்பாலை பாடலும் தெளிவுரைகள் ..ஒவ்வொரு வரிகளுக்கும் பாடலும் வார்த்தை அர்த்தங்களும் ..கேட்டிருந்தேன் ஆனால் பாடல் மட்டுமே எனது ஈமெயில் கு ..அனுப்பி உள்ளீர்கள் ..எனக்கு பாடல் வரிகளும் முழு அர்த்தமும் ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் வேண்டும் தங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த ..நன்றி
 
29-Nov-2017 14:32:47 R உதயசங்கர் said : Report Abuse
பட்டினப்பாலை பாடல்களும் அதன் முழு தெளிவுரையும் நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன் அது வலைத்தமிழ் பகுதியில் தான் இருந்தது ஆனால் இப்போது அதை தேடுகிறேன் கிடைக்கவில்லை அதில் பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தங்கல் கூடவே இருந்தது அதை காணவில்லை அதை எழுதியவர் பெயர் இருந்தது அதும் எனக்கு மறந்து விட்டது ..பாடலும் அர்த்தமும் இணைந்தவை யாருக்காவது தெரிந்தால் ..பதிவிடுங்கள்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.