LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

பாவப்பட்ட நதி கூவம்…

 

கூவம் நதி ஆங்கிலேய ஆட்சியில் விவசாயத்திற்குப் பயன்படும் நதியாக இருந்தது. ஆனால் இப்போதோ சாக்கடை நிறைந்த பாழ் நதியாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதையும் மனிதன் தன் இஷ்டத்திற்கு இயற்கையை வளைப்பதால் ஏற்படுகின்ற விளைவுகளையும் நம்மாழ்வார் இங்கே அலசுகிறார்.
நம்மாழ்வார்:
ஒரு நண்பர் இப்படிச் சொன்னார். முட்டையை இரண்டு வகையில் உடைக்கலாம். முட்டைக்கு வெளியில் இருந்து நாம் உடைக்கும்போது ஆம்லெட் போட்டுத் தின்னுகிறோம். மாறாக முட்டைக்கு உள்ளிருந்து குஞ்சு ஓட்டை உடைக்கும்போது குஞ்சு வெளியேறி கோழியாக வளர்கிறது.
ஆம்லெட் அந்த நேரத்து ஆனந்தம். ஆனால், குஞ்சு வெளியேறி கோழியாக வளரும்போது தொடர்ந்து ஏராளமான பறவைகள் கிடைக்கின்றன. பறவைகள் பூச்சி, புழுக்களைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகளின் எச்சங்களில் நுண்ணுயிர்கள் மலிந்து செடி, கொடி, மரங்கள் வளர்ந்து, கனி, காய், நிழல், மழை, காற்றை வழங்குகின்றன. முட்டையில் இருந்து இப்படி அளப்பரிய பயன் வர வேண்டுமானால், தாய்க் கோழி, முட்டை மேல் அமர்ந்து 21 நாட்களுக்குச் சீராகச் சூடு தர வேண்டும். அதற்குப் பொறுமையும் பொறுப்பு உணர்வும் தேவைப்படுகிறது. இவை இல்லாமையால் இன்று பூமித்தாய் வழங்கும் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. நாம் விரும்பி வரும் மாற்றங்கள் நம் வளர்ச்சிக்குத் துணை செல்கின்றன. நம்மீது திணிக்கப்படுகின்ற மாற்றங்கள் நமக்குத் துன்பம் இழைக்கின்றன.
நாம் விரும்பும் மாற்றங்கள் அனைத்துமே நமது வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ உதவ முடியும் என்று சொல்ல முடியாது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு நமது உணவுப் பழக்கவழக்கங்கள். உடல் வளர்ச்சிக்கும் உடலின் பராமரிப்புக்கும், மாவுப்பொருள், பருப்பு, எண்ணெய், காய்கறி, பழம், கீரைகள் உட்கொள்ள வேண்டும் என்று படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்.
ஆனால் உடலுக்குத் தீங்கு பயக்கக்கூடிய இனிப்பூட்டிய பனிக்கட்டி, ரசாயன பானங்கள், காபி, தேநீர், மது, புகை இவற்றுக்கே ஏராளமான ஆதாரங்களையும் நிதியையும் செலவிடுகிறோம். தேயிலையும் காபிச் செடியும் பயிர் செய்யவே நமது மலைப்பகுதிகளை மொட்டையடிக்கிறோம். பருவ மழையை இழக்கிறோம். வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிக்கிறோம். யானையும், புலியும், சிறுத்தையும் ஊருக்குள் வந்து கலாட்டா செய்வதாகக் கவலைப்படுகிறோம்.
“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” என்று தொல்காப்பியம் சொல்கிறது. உணவு உற்பத்திக்கான நிலமும், நீரும் உணவு அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. பட்டணத்துத் தெருக்களிலே, வயிற்றுப் பாட்டுக்காக, விலங்குகளாய்த் திரிவதுவே வாழ்க்கை என்று கற்பிக்கப்படுகிறது.
தமிழகத்தின் தலைநகரம், சென்னை. சென்னையின் குறுக்கே பாயும் ஆறு கூவம். இந்தக் கூவம் ஆற்றைக் குறுக்கே வாகனத்தில் கடக்கும்போதே மூக்கை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. கூவம் நதியைச் சுத்தம் செய்வதற்காகக் கோடி கோடியாகச் செலவழித்த பணம் எல்லாம் சாக்கடையில் கொட்டிய ‘புதையல்’ ஆகிப்போனது. சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பு கூவம் நதி குளிக்கத் தகுந்ததாகத்தான் உள்ளது. 1935-க்கு முன்பு உள்ள படங்களில் கூவம் நதி நீர் பாய்ந்து வயல்களில் உழவர்கள் நெற்பயிர் விளைவித்ததைப் பார்க்கிறோம். இன்று என்ன நடக்கிறது?
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி, நொய்யல், பவானி, அமராவதி எல்லா நதிகளுமே கூவமாக ஆகிக் கொண்டு இருக்கின்றன. பட்டணங்களை விரிவுபடுத்துவதால் வளர்ச்சி காண முடியாது. நாடெங்கும் பசுமை ஆக்குவதால் மட்டுமே அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்!

கூவம் நதி ஆங்கிலேய ஆட்சியில் விவசாயத்திற்குப் பயன்படும் நதியாக இருந்தது. ஆனால் இப்போதோ சாக்கடை நிறைந்த பாழ் நதியாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதையும் மனிதன் தன் இஷ்டத்திற்கு இயற்கையை வளைப்பதால் ஏற்படுகின்ற விளைவுகளையும் நம்மாழ்வார் இங்கே அலசுகிறார்.


நம்மாழ்வார்:


ஒரு நண்பர் இப்படிச் சொன்னார். முட்டையை இரண்டு வகையில் உடைக்கலாம். முட்டைக்கு வெளியில் இருந்து நாம் உடைக்கும்போது ஆம்லெட் போட்டுத் தின்னுகிறோம். மாறாக முட்டைக்கு உள்ளிருந்து குஞ்சு ஓட்டை உடைக்கும்போது குஞ்சு வெளியேறி கோழியாக வளர்கிறது.


ஆம்லெட் அந்த நேரத்து ஆனந்தம். ஆனால், குஞ்சு வெளியேறி கோழியாக வளரும்போது தொடர்ந்து ஏராளமான பறவைகள் கிடைக்கின்றன. பறவைகள் பூச்சி, புழுக்களைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகளின் எச்சங்களில் நுண்ணுயிர்கள் மலிந்து செடி, கொடி, மரங்கள் வளர்ந்து, கனி, காய், நிழல், மழை, காற்றை வழங்குகின்றன. முட்டையில் இருந்து இப்படி அளப்பரிய பயன் வர வேண்டுமானால், தாய்க் கோழி, முட்டை மேல் அமர்ந்து 21 நாட்களுக்குச் சீராகச் சூடு தர வேண்டும். அதற்குப் பொறுமையும் பொறுப்பு உணர்வும் தேவைப்படுகிறது. இவை இல்லாமையால் இன்று பூமித்தாய் வழங்கும் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. நாம் விரும்பி வரும் மாற்றங்கள் நம் வளர்ச்சிக்குத் துணை செல்கின்றன. நம்மீது திணிக்கப்படுகின்ற மாற்றங்கள் நமக்குத் துன்பம் இழைக்கின்றன.

நாம் விரும்பும் மாற்றங்கள் அனைத்துமே நமது வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ உதவ முடியும் என்று சொல்ல முடியாது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு நமது உணவுப் பழக்கவழக்கங்கள். உடல் வளர்ச்சிக்கும் உடலின் பராமரிப்புக்கும், மாவுப்பொருள், பருப்பு, எண்ணெய், காய்கறி, பழம், கீரைகள் உட்கொள்ள வேண்டும் என்று படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்.


ஆனால் உடலுக்குத் தீங்கு பயக்கக்கூடிய இனிப்பூட்டிய பனிக்கட்டி, ரசாயன பானங்கள், காபி, தேநீர், மது, புகை இவற்றுக்கே ஏராளமான ஆதாரங்களையும் நிதியையும் செலவிடுகிறோம். தேயிலையும் காபிச் செடியும் பயிர் செய்யவே நமது மலைப்பகுதிகளை மொட்டையடிக்கிறோம். பருவ மழையை இழக்கிறோம். வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிக்கிறோம். யானையும், புலியும், சிறுத்தையும் ஊருக்குள் வந்து கலாட்டா செய்வதாகக் கவலைப்படுகிறோம்.


“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” என்று தொல்காப்பியம் சொல்கிறது. உணவு உற்பத்திக்கான நிலமும், நீரும் உணவு அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. பட்டணத்துத் தெருக்களிலே, வயிற்றுப் பாட்டுக்காக, விலங்குகளாய்த் திரிவதுவே வாழ்க்கை என்று கற்பிக்கப்படுகிறது.


தமிழகத்தின் தலைநகரம், சென்னை. சென்னையின் குறுக்கே பாயும் ஆறு கூவம். இந்தக் கூவம் ஆற்றைக் குறுக்கே வாகனத்தில் கடக்கும்போதே மூக்கை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. கூவம் நதியைச் சுத்தம் செய்வதற்காகக் கோடி கோடியாகச் செலவழித்த பணம் எல்லாம் சாக்கடையில் கொட்டிய ‘புதையல்’ ஆகிப்போனது. சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பு கூவம் நதி குளிக்கத் தகுந்ததாகத்தான் உள்ளது. 1935-க்கு முன்பு உள்ள படங்களில் கூவம் நதி நீர் பாய்ந்து வயல்களில் உழவர்கள் நெற்பயிர் விளைவித்ததைப் பார்க்கிறோம். இன்று என்ன நடக்கிறது?


காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி, நொய்யல், பவானி, அமராவதி எல்லா நதிகளுமே கூவமாக ஆகிக் கொண்டு இருக்கின்றன. பட்டணங்களை விரிவுபடுத்துவதால் வளர்ச்சி காண முடியாது. நாடெங்கும் பசுமை ஆக்குவதால் மட்டுமே அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்!

by Swathi   on 30 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.