தேவையானவை
1. கைக்குத்தல் அரிசி - 3 கப்
2. ஊறவைத்து வேகவைத்த பயிறு - ஒரு கப்
3. நெய் - 2 டீஸ்பூன்
4. கடுகு - 1/2 டீஸ்பூன்
5. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
6. மிளகாய் வற்றல் - 4
7. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
8. வறுத்துப் பொடித்த உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
9. மஞ்சத்தூள் - 1/4 டீஸ்பூன்
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. வாணலியில் நெய்விட்டு கடுகு தாளிக்கவும். பின் பெருங்காயம் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மஞ்சத்தூள், பொடித்த உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
2. நன்கு கிளறி சாதம், வேகவைத்த பயிறு, தேவையான உப்பு போட்டு மிதமான தீயில் கிளறி இறக்கவும்.
|