|
|||||
நீலகிரி தேயிலை தொழிற்சாலைகளில் 7000 பேர் வேலையிழக்கும் அபாயம்! |
|||||
நீலகிரி தேயிலை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் 7 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் அடுத்தடுத்து மூடு விழா காணப்படும் தேயிலை தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட அரசு தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 7ஆயிரம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.
அரசு தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலையை தனியாருக்கு விற்கும் அவலநிலை உள்ளதாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
தனியார் தேயிலை தொழிற்சாலைகள் லாபத்தில் இயங்கும் போது, அரசு தொழிற்சாலைக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தொழிலாளர்களின் நிலையை தமிழக அரசு எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி தேயிலை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் 7 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
|
|||||
by Mani Bharathi on 28 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|