LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

முழுமைப் பேறு

 

நமது அகத்தவப் பயிற்சி, தியானம் [Meditation], தற்சோதனை [Introspection], உச்சமேம்பாடடைதல் [Sublimation], முழுமைப் பேறு [Perfection] ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாகும...். தியானத்தில் ஆரம்ப கட்டத்தில் மனம் உயிரில் லயமாக்கப்பட்டு மயக்க நிலை நீங்கி விழிப்பு நிலை ஏற்படுத்துகிறது. தற்சோதனை மூலம் குற்றங் குறைகளை உணர்ந்து விளக்கத்திற்கும் பழக்கத்திற்கும் உள்ள போராட்டம் நீங்கப்பெற்று மனம் செம்மைப்படுத்தப்படுகிறது. தனக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து, தான் ஆற்றவேண்டிய சமுதாயக் கடமையை நன்கு உணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுத்துகிறது.
பிறகு தன் கடமைகளை ஆற்றிக்கொண்டே தானே பரம் பொருளாக இருக்கும் உண்மையை துரியாதீத தவத்தின் மூலம் உணர்ந்து உச்ச மேம்பாட்டையடைய வழி செய்யப்படுகிறது. கடைசியாக எப்பொழுதும் பரம்பொருள் நிலையிலேயே இருந்து செயல்படும் முழுமைப் பேரும் கிடைக்கப் பெறுகிறது. யாருக்கும் தீமை நினைக்கவும் முடியாத அளவு ஆன்மீக விழிப்பு, எல்லா உயிரும் பரம்பொருளின் பிரதிபலிப்பே என்ற ஆன்ம விழிப்பு [Esoteric awareness] ஏற்பட்டு விடுகிறது. ஈதல் இசை பட வாழ்தல் என்பதன் உட்கருத்தும் விளங்குகிறது. மனதின் மூலத்தைத் தெரிந்து கொள்ளும் போது அதுவேதான் உயிர் எனத் தெரியும். உயிர் நிலையை உணர வேண்டுமாயின் அதற்கு மனம் அடங்கி மிக நுண்ணிய அதிர்வலைக்கு நாம் வரவேண்டும். சாதாரணமாக நம் மனம் எப்போதும் பொருள் கவர்ச்சியிலேயே இருப்பதால் அவற்றிற்கேற்ப அதன் ஓட்டமும் அதிர்வலைகளும் மூலாதாரத்தையே நோக்கி செயல்படும். கீழ்நோக்கியே செயல்படும். ஆகவே நுண்ணிய இயக்கத்திற்கு வரவேண்டுமானால் மனம் அடங்க வேண்டும். இயக்க வேகம் குறைய வேண்டும். இதைத்தான் நம் குண்டலினி யோகத்தால் நாம் சாதிக்கிறோம்.
 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

நமது அகத்தவப் பயிற்சி, தியானம் [Meditation], தற்சோதனை [Introspection], உச்சமேம்பாடடைதல் [Sublimation], முழுமைப் பேறு [Perfection] ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாகும...். தியானத்தில் ஆரம்ப கட்டத்தில் மனம் உயிரில் லயமாக்கப்பட்டு மயக்க நிலை நீங்கி விழிப்பு நிலை ஏற்படுத்துகிறது. தற்சோதனை மூலம் குற்றங் குறைகளை உணர்ந்து விளக்கத்திற்கும் பழக்கத்திற்கும் உள்ள போராட்டம் நீங்கப்பெற்று மனம் செம்மைப்படுத்தப்படுகிறது. தனக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து, தான் ஆற்றவேண்டிய சமுதாயக் கடமையை நன்கு உணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுத்துகிறது.

 

பிறகு தன் கடமைகளை ஆற்றிக்கொண்டே தானே பரம் பொருளாக இருக்கும் உண்மையை துரியாதீத தவத்தின் மூலம் உணர்ந்து உச்ச மேம்பாட்டையடைய வழி செய்யப்படுகிறது. கடைசியாக எப்பொழுதும் பரம்பொருள் நிலையிலேயே இருந்து செயல்படும் முழுமைப் பேரும் கிடைக்கப் பெறுகிறது. யாருக்கும் தீமை நினைக்கவும் முடியாத அளவு ஆன்மீக விழிப்பு, எல்லா உயிரும் பரம்பொருளின் பிரதிபலிப்பே என்ற ஆன்ம விழிப்பு [Esoteric awareness] ஏற்பட்டு விடுகிறது. ஈதல் இசை பட வாழ்தல் என்பதன் உட்கருத்தும் விளங்குகிறது. மனதின் மூலத்தைத் தெரிந்து கொள்ளும் போது அதுவேதான் உயிர் எனத் தெரியும். உயிர் நிலையை உணர வேண்டுமாயின் அதற்கு மனம் அடங்கி மிக நுண்ணிய அதிர்வலைக்கு நாம் வரவேண்டும். சாதாரணமாக நம் மனம் எப்போதும் பொருள் கவர்ச்சியிலேயே இருப்பதால் அவற்றிற்கேற்ப அதன் ஓட்டமும் அதிர்வலைகளும் மூலாதாரத்தையே நோக்கி செயல்படும். கீழ்நோக்கியே செயல்படும். ஆகவே நுண்ணிய இயக்கத்திற்கு வரவேண்டுமானால் மனம் அடங்க வேண்டும். இயக்க வேகம் குறைய வேண்டும். இதைத்தான் நம் குண்டலினி யோகத்தால் நாம் சாதிக்கிறோம்.

 

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

by Swathi   on 17 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.