LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது

கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய 'பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்' என்ற ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்து உள்ளது.

திரைப்பட விருதுகளில் சர்வதேச அளவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதுக்கு சினிமாத்துறையினர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆண்டுதோறும் இந்த விருது விழா உலக திரைப்பட கலைஞர்கள் திரள மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது.

அமெரிக்காவில் வாழும் ஈரானைச் சேர்ந்த பெண் ராக்யா செப்தாக்சி இயக்கிய ஆவண குறும்படம், பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ். இந்த படம் மாதவிடாய்க் காலங்களில் இந்திய கிராமங்களில் ஏழைப் பெண்கள் படும் அவலங்களைப் பற்றிச் சொல்கிறது. இத்தகைய பெண்களுக்காகவே மலிவு விலை நாப்கின் தயாரித்து விற்பனை செய்து வருபவர் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். 

இந்த படத்தில் இவரது பணியை பாராட்டிச் சொல்லி இருப்பதுடன் இவர் இந்த ஆவணப் படத்தில் தோன்றிப் பேசும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதுக்கு இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த படத்துடன் 4 படங்கள் போட்டியில் இருந்தன. இந்த 4 படங்களையும் பின்னுக்கு தள்ளி பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை தட்டிச் சென்றது.

சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஆர்.ரஹ்மான், பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டனர். விழாவில் குறிப்பிட்ட விருதுக்கான பட்டியலை அறிவிக்கும் வாய்ப்பையும் பிரியங்கா பெற்றார்.

by Mani Bharathi   on 28 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.