LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா -ந.க.இராஜ்குமார்

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில், தமிழ் நண்பர்கள் இணைந்து நடத்திய தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா  அவர்களின் பிறந்த நாள் விழா செப்டம்பர் - 29 , 2018 அன்று காலை 11 மணி முதல் மாலை 6 .30  மணி வரை வெகு விமர்சையாக நடைப் பெற்றது.

இனிய விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. நிகழ்வில் மாணவ மாணவியர்களுக்கு  தந்தை பெரியாரின் உருவப்படத்தை மையப்படுத்தி ஓவியப்போட்டியும் அதனை தொடர்ந்து இரு பெரும் தலைவர்களின் வாழ்வியலை முன்னிலைப்படுத்தி வினாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டியில் மாணாக்கர்கள் ஆர்வத்துடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் பங்கேற்று எழுப்பிய வினாக்களுக்கு விரைவாகவும் மிகச்சரியாகவும் பதிலளித்த விதம் விழா நோக்கத்தை வெற்றிகரமாக்கியது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து பெரியோர்களுக்கான பேச்சுப்போட்டி “பகுத்தறிவு பகலவன் பெரியார்”, “கடமை கண்ணியம் கட்டுப்பாடு - பேரறிஞர் அண்ணா” மற்றும் “அமெரிக்காவும் தமிழ்நாடும் - சமூகநீதி ஓர் ஒப்புமைப் பார்வை” என்கிற தலைப்புகளில் நடைபெற்றது.  இதில் பங்கேற்றோர் இருபெரும் தலைவர்களான பெரியார், அண்ணா அவர்களின் உயரிய பண்பு நலன்களையும், சிறப்புகளையும் அனைவரின் இதயத்திலும் கொண்டு வந்து நிறுத்தினர். போட்டியின் முடிவில்  திருமிகு. செல்வகுமார், திருமிகு. பிரசில்லா, திருமிகு. விஜயலட்சுமி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

இந்நிகழ்வில்  தமிழ் பண்பாட்டை இனிதே வெளிப்படுத்தும் வகையில் மகளிர் பங்கேற்ற கும்மி அடித்தல் நிகழ்வு பெரும் குதூகலத்தைத் தந்தது.  அதனைத் தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டின் சின்னமான பறை இசையை நண்பர்கள் வெகு சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்.  பறை, கும்மி இரண்டும் இவ்விழாவினுடைய சிறப்பம்சமாக அமைந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் ஆரவாரம் செய்து இன்புற்றனர்.

இதனைத் தொடர்ந்து "சமூக நீதி காவலர்கள் பெரியார் அண்ணா" என்கிற தலைப்பில் திருமிகு.பிரசாத் பாண்டியன் அவர்கள் நெறியாள்கையில்

சிறப்பானதோர் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பகுத்தறிவு தலைப்பில் திருமிகு. தீபன், சுயமரியாதை தலைப்பில் திருமிகு. அல்லி நடேஷ், பெண்ணுரிமை தலைப்பில் திருமிகு.மெர்லின், சமூகநீதி தலைப்பில் திருமிகு. கிருஷ்ணன் மற்றும் சமத்துவம் தலைப்பில் திருமிகு.தேவநாதன் அவர்களும் பெருமைக்குரிய இரண்டு தலைவர்களும் சமுதாய உயர்வுக்காக ஆற்றிய பணிகளையும், அவர்களது சிந்தனைகளையும் அவைக்கு அப்படியே படம்பிடித்து காட்டினர். நெறியாள்கை செய்த திருமிகு. பிரசாத் அவர்கள்  பெரியார், அண்ணாவைப் பற்றி சிறப்பாகப் பேசி,  தன் பேச்சுத் திறனால் அரங்கத்தில் உள்ள அத்தனை போரையும் ஆட்கொண்டார்.

தொடர்ந்து " இலட்சியப் பெரியார் இலட்சம் கைகளில் என்ற முழக்கத்தோடு தமிழகத்தில் உள்ள  நன்செய் பிரசுரம் வெளிட்டிருக்கும் தந்தை பெரியார் எழுதிய  "பெண் ஏன் அடிமையானாள்? " புத்தகம் திருமிகு. இராஜ்குமார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு,  நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துப் பெண்களுக்கும்  வழங்கப்பட்டது.

அதனை அடுத்து மேட்டூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை திருமிகு. வசந்த கோகிலா அவர்கள் நாகூர் அனிபாவின் “எங்களை ஏங்கவிட்டு  எங்கே சென்றாய்.. அண்ணா..” என்ற பாடலைத் தன் கம்பீர குரலால் பாடி அரங்கத்தை தன் வசப்படுத்டினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ் இருக்கை அமைப்பு செயலாளர், முனைவர் திருமிகு. சொர்ணம் சங்கரபாண்டி அவர்கள் "சாமானியர்களின் சாதனைகள்" என்கிற தலைப்பில் திராவிடர் இயக்கமும் திராவிட கட்சியும் செய்த சாதனைகளை புள்ளி விவரங்களுடன் புதுப்புது தகவல்களுடன் ஆற்றிய உரை புது எழுச்சியைத் தந்தது. 

தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருமிகு. கனிமொழி அவர்கள் "தமிழகத்தின் விடிவெள்ளி பெரியார்" என்கிற தலைப்பில் பெரியார் பற்றிய அறிய தகவல்களை அரங்கிற்கு எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து,  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் விழா ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில்

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இச்சிறப்பான விழாவை திருமிகு.இரமா ஆறுமுகம் மற்றும் திருமிகு. ஜெசிபிரியா பிரசாத் ஆகியோர்  தம் அழகுத் தமிழாலாலும், இடையிடையே பல அரிய தகவல்களை அரங்குக்குத் தந்தும் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இறுதியாக ஒருங்கிணைப்பாளர் திருமிகு. துரைக்கண்ணன் அவர்கள் நன்றியுரை கூற அழகுடனும், எழுச்சியுடனும் இனிதே விழா நிறைவுற்றது.

டெலவர் பகுதியில் இயங்கிவரும் ரஜினி தென்னிந்திய உணவகம், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மத்திய உணவு வழங்கி மேலும் விழாவை சிறப்பித்தனர்.

பெரியார் அண்ணா பிறந்தநாள் விழாவில் 165 பேருக்கும் மேலான தமிழ் உணர்வாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டதும், 35க்கும் மேலான குழந்தைகள் போட்டிகளில் கலந்துகொண்டதும், அமெரிக்கத் தமிழர்களிடம் பெரியார், அண்ணாவின் கொள்கைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெளிவாகக் காட்டியாதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

by Swathi   on 03 Oct 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023 சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023
மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு
வட அமெரிக்காவில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி வட அமெரிக்காவில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி
செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு  6 நாட்கள் நடக்கிறது செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு 6 நாட்கள் நடக்கிறது
மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன்  சாமிவேலு  அவர்களுக்குப் புகழ்வணக்கம்! மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன் சாமிவேலு அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
சாலையின் பெயர் வள்ளுவர் வழி சாலையின் பெயர் வள்ளுவர் வழி
TNF 48 தேசிய மாநாட்டு விழா TNF 48 தேசிய மாநாட்டு விழா
"வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 1" - நேரலை
கருத்துகள்
06-Oct-2018 10:12:29 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். தமிழகத்திற்கு மட்டுமல்ல தென்இந்தியாவிற்கே அண்ணாவும், பெரியாரும் விடிவெள்ளிகள் தாம். ஆத்திகத்தின் பெயரால் மக்கள் சுரண்டப்பட்ட , ஏமாற்றப்பட்ட போது இயற்கை தந்த கொடையாளர்கள் தாம் இவர்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.