பெட்ரோல் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சமீபத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்ததோடு, பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சி அடைந்தது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வந்தது. இதனை ஈடு செய்யும் பொருட்டு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியது. இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கினர்.
இந்நிலையில், மீண்டும் சர்வதேச சந்தையில், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததோடு, கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. இருப்பினும் மீண்டும் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 உயர்த்தப்பட்டுள்ளது.
|