LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இனி வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏ.டி.எம் -மி்ல் எடுக்கலாம்

 

வருங்கால வைப்பு நிதியான பி. எஃப். கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறையின் சார்பில், ‘பான் 2.0’ என்ற பெயரில் நிரந்தரக் கணக்கு எண்ணுக்கான மின்னணு வசதிகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதுபோலவே, ‘பி.எப்., 3.0’ என்ற பெயரில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிலும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மாத ஊதியத்தில் தற்போது தொழிலாளர் மற்றும் நிர்வாகம் சரிசமமாக 12 சதவீதத்தை பி.எப்., கணக்கில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கான உச்ச வரம்பை மட்டும் நீக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பாதுகாப்பான மற்றும் அதேநேரம் நிதிச் சந்தையில் நியாயமான வட்டி கிடைக்கக்கூடிய பி.எப்., தொகையை, தொழிலாளர் விரும்பினால் கூடுதலாகவும் சேமிக்க இது வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.



அத்துடன், தொழிலாளர் 12 சதவீதத்துக்குக் கூடுதலான தொகையை பி.எப்., கணக்கில் சேமித்தாலும், நிர்வாகம் தரப்பில் 12 சதவீதம் செலுத்த வேண்டிய விதிமுறையில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், பி.எப்., கணக்குக்கு, ‘டெபிட் கார்டு’ போல அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பி.எப்., பணத்தில் ஒரு பகுதியைத் திரும்பப் பெற விண்ணப்பித்து, ஒப்புதல் கிடைத்ததும், ஏ.டி.எம்-ல் தொகையைத் தேவைக்கேற்பச் சந்தாதாரர் எடுத்துக்கொள்ள இது வழிவகை செய்யும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.


தற்போதைய நிலவரப்படி சுமார் 7 கோடி பி.எஃப். கணக்குகள் இருப்பதாகத் தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது.

 

 

by hemavathi   on 12 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம் விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்
பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு
தபேலா இசைக் கலைஞர்  ஜாகிர் ஹுசைன் காலமானார் தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்
இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்
கேவின்கேர் ,MMA , FWC  இணைந்து நடத்திய  சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர்  விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது. கேவின்கேர் ,MMA , FWC இணைந்து நடத்திய சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர் விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது.
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.