|
||||||||
பிச்சாயி அம்மன் கதை |
||||||||
அது 17ம் நூற்றாண்டு. சைவமும் வைணவமும் தங்களுக்குள் கொண்ட போட்டியால் வளர்ந்து சிறு சிறு கிராமங்களுக்கும் சென்றடைந்துவிட்ட நேரம். அப்போது வாழ்ந்துவந்தார் வீரய்யா என்ற விவசாயி. பெருமாளின் பெரும் பக்தர். அருகிலிருக்கும் பெருமாள் மலையில் பெருமாளை தரிசனம் செய்து, மனமுருகி வேண்டியபின்பே உணவருந்துவது அவருடைய நாள் தவறாத வழக்கம்.
அன்று வயலில் வேலை அதிகமாக இருந்த்து வீரய்யாவுக்கு. அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பசியெடுக்க ஆரமித்தது. வேலைகளை செய்து முடித்துவிட்டு நன்நீரில் கைகால்களை சுத்தம் செய்தார். பின் மதிய உணவுக்காக காத்திருந்தார். பிச்சாயி நிறைமாத கற்பிணியாக இருந்தமையால் உச்சி வெயிலில் அவளால் வேகமாக வரமுடியவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல பசி அதிகமாகிக் கொண்டே போனது. பசிக் கோபமும் வீரய்யாவுக்கு வந்தது.
பிச்சாயி வீரய்யாவிடம் வரும் போது அவருக்கு பசியைவிட கோபமே அதிகமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திருநாமம் இட்டுக்கொள்ள நாமக்கட்டியை கேட்டார். ஆனால் அப்போதுதான் பிச்சாயிக்கு நாமக்கட்டியை மறந்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. வீரய்யா கோபமாக இருக்கிறார் என்பதை அறியாமல் தான் மறந்துவிட்டு வந்ததை பிச்சாயி தெரியப்படுத்த, பசிக்கோபத்துடன் இருந்தவரின் புத்தி தடுமாறியது.
அவளுக்கு தண்டனை தரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அருகில் கிடந்த மண் உருண்டையை பிச்சாயின் மீது கோபமாக வீசினார். ஏற்கனவே உச்சி வெயிலில் நடந்து வந்த களைப்புடன் இருந்தவள் தலையின்மீது மண் உருண்டை தாக்க உடனே மரணமடைந்தாள். நடந்த விபரீத்த்தை உணர்ந்த வீரய்யா தன்னையும் மாய்த்துக் கொண்டார். ஒரு சிறு கோபம் தம்பதிகள் இருவரின் மரணத்திற்கு காரணமானதை பிச்சாயி வீரய்யாவின் கதை எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
கோவில் :
பிச்சாயி அம்மன், வீரய்யா கோவில், பெருமாள் மலை அடிவாரம், துறையூர். |
||||||||
by Swathi on 01 Aug 2013 0 Comments | ||||||||
Tags: துறையூர் பிச்சாயி அம்மன் Pichchai Amman Amman Story அம்மன் கதை | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|