LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- தமிழ் மண்ணில் சாமிகள்

பிச்சாயி அம்மன் கதை

அது 17ம் நூற்றாண்டு. சைவமும் வைணவமும் தங்களுக்குள் கொண்ட போட்டியால் வளர்ந்து சிறு சிறு கிராமங்களுக்கும் சென்றடைந்துவிட்ட நேரம். அப்போது வாழ்ந்துவந்தார் வீரய்யா என்ற விவசாயி. பெருமாளின் பெரும் பக்தர். அருகிலிருக்கும் பெருமாள் மலையில் பெருமாளை தரிசனம் செய்து, மனமுருகி வேண்டியபின்பே உணவருந்துவது அவருடைய நாள் தவறாத வழக்கம்.

 

அன்று வயலில் வேலை அதிகமாக இருந்த்து வீரய்யாவுக்கு. அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பசியெடுக்க ஆரமித்தது. வேலைகளை செய்து முடித்துவிட்டு நன்நீரில் கைகால்களை சுத்தம் செய்தார். பின் மதிய உணவுக்காக காத்திருந்தார். பிச்சாயி நிறைமாத கற்பிணியாக இருந்தமையால் உச்சி வெயிலில் அவளால் வேகமாக வரமுடியவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல பசி அதிகமாகிக் கொண்டே போனது. பசிக் கோபமும் வீரய்யாவுக்கு வந்தது.

 

பிச்சாயி வீரய்யாவிடம் வரும் போது அவருக்கு பசியைவிட கோபமே அதிகமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திருநாமம் இட்டுக்கொள்ள நாமக்கட்டியை கேட்டார். ஆனால் அப்போதுதான் பிச்சாயிக்கு நாமக்கட்டியை மறந்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. வீரய்யா கோபமாக இருக்கிறார் என்பதை அறியாமல் தான் மறந்துவிட்டு வந்ததை பிச்சாயி தெரியப்படுத்த, பசிக்கோபத்துடன் இருந்தவரின் புத்தி தடுமாறியது.

 

அவளுக்கு தண்டனை தரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அருகில் கிடந்த மண் உருண்டையை பிச்சாயின் மீது கோபமாக வீசினார். ஏற்கனவே உச்சி வெயிலில் நடந்து வந்த களைப்புடன் இருந்தவள் தலையின்மீது மண் உருண்டை தாக்க உடனே மரணமடைந்தாள். நடந்த விபரீத்த்தை உணர்ந்த வீரய்யா தன்னையும் மாய்த்துக் கொண்டார். ஒரு சிறு கோபம் தம்பதிகள் இருவரின் மரணத்திற்கு காரணமானதை பிச்சாயி வீரய்யாவின் கதை எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

 

கோவில் :

 

பிச்சாயி அம்மன், வீரய்யா கோவில்,

பெருமாள் மலை அடிவாரம்,

துறையூர்.

by Swathi   on 01 Aug 2013  0 Comments
Tags: துறையூர்   பிச்சாயி அம்மன்   Pichchai Amman   Amman Story   அம்மன் கதை        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.