LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!

முழு முதற்கடவுளான விநாயகரின் பிறந்தநாளே விநாயகர் சதுர்த்தியாக,  ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று கொண்டாடப்படுகின்றது. 

இதனை முன்னிட்டு விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு வீதி முனைகளிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மூன்றாம் நாள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் விழாவாகப் பிரசித்தி பெற்று வருகின்றது.

விநாயகருக்கென்றே அமைந்த தனி ஆலயம்,  சிவகங்கை மாவட்டம்  பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனித் தேரில் விநாயகர் பவனி வருவார்.

இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி தேர்ப்பவனி இன்று  (செப்டம்பர் 12) நடைபெற உள்ளது.    கொடியேற்றத்துடன் தொடங்கிய  விழாவில் ஒவ்வொரு நாளும் வெள்ளி வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. 

இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.  ஆண்டுக்கு  ஒரு முறை மட்டும் மூலவர் விநாயகருக்கு செய்யப்படும் சந்தனக்காப்பு அலங்கார தரிசனம் இரவு வரை நடைபெறுகிறது. 

விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசிநாளான நாளை தீர்த்தவாரி உற்சவமும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.  இதனையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

by Swathi   on 12 Sep 2018  0 Comments
Tags: விநாயகர் சதுர்த்தி   விநாயகர்                 
 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் திரைப்படங்கள் !! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் திரைப்படங்கள் !!
வினைதீர்க்கும் விநாயகனே! வினைதீர்க்கும் விநாயகனே!
விநாயகர் சதுர்த்தி - விநாயகர் புராண வரலாறு விநாயகர் சதுர்த்தி - விநாயகர் புராண வரலாறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.