LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 533 - அரசியல்

Next Kural >

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.)
மணக்குடவர் உரை:
பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மைக்கருத்து அறநூலார்க்கு மட்டு மன்றி உலகத்திலுள்ள எவ்வகை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாம். இந்நெறிமை ( விதி ) அரசர்க்கு மட்டு மன்றி எல்லாத்தொழிலாளர்க்கும் ஒப்ப வுரியதாயிருத்தலால் , 'உலகத்தெப்பானூ லோர்க்குந் துணிவு' என்றார் . இங்கு உலகம் என்றது தமிழகத்தை . எப்பால் நூலென்றதும் தமிழிலக்கியத் துறைகளையே . இன்றிறந்துபட்டுள்ள பண்டைத் தமிழிலக்கியத்திற் பெரும்பகுதி திருவள்ளுவர் காலத்தில் இறவாதிருந்தது . வடநூலார்க்குந் துணிவு என்று கூறாமையை நோக்குக.
கலைஞர் உரை:
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.
Translation
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Transliteration
Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu Eppaalnoo Lorkkum Thunivu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >