LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 836 - நட்பியல்

Next Kural >

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல் - சிறைபடுதல்.
தேவநேயப் பாவாணர் உரை:
கை அறியாப் பேதை வினைமேற்கொளின் - செய்யும் வகை யறியாத பேதை ஒரு கருமத்தை யேற்றுச் செய்யின்; பொய்படும் ஒன்றோ - அதிற் புரைவிழுதல் மட்டுமோ. புனைபூணும் - அவன் குற்றப்பட்டு விலங்கு பூணுதலும் நிகழும். 'புரைவிழுதல்' துளைபடுதல் போல் உள்ளழிதல். 'புனை முதனிலைத் தொழிலாகுபெயர். பேதை வினைசெய்யின் வினையுங்' கெட்டுத் தானும் கெடுவான் என்பதாம். பொள் - பொய்.
கலைஞர் உரை:
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
Translation
When fool some task attempts with uninstructed pains, It fails; nor that alone, himself he binds with chains.
Explanation
If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.
Transliteration
Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap Pedhai Vinaimer Kolin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >