வெளிப்படையாக குற்றம் நடந்திருக்கும், குற்றப்புகாரின் மீது உடனடியாக, எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது மிகவும் அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காவல்துறை சீர்திருத்தம் மற்றும் எப்.ஐ.ஆர் பதிவு தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது, ஒரு குற்றப்புகாரில், வெளிப்படையாக குற்றம் நடந்திருப்பது தெரியும் பட்சத்தில், உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும். இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அவ்வாறு எப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
|