|
||||||||
அன்புமணி ராமதாஸ் |
||||||||
பிறப்பு:அக்டோபர் 9, 1968ம் ஆண்டு பிறந்தார்.சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார்.
"பசுமைத்தாயகம்":2004ல் பதவியேற்ற இந்தியக் கூட்டாட்சி அமைச்சர்கள் அனைவரிலும் இவர் மிகவும்
இளைஞர்.இவர் மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஊர்ப்புற மருத்துவத்தில் பெரிதும் ஆர்வம்
காட்டினார். "பசுமைத் தாயகம்" என்னும் அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இவர்.
புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு:பல வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ஏற்கனவே வழங்கும் புகை
பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் எச்சரிக்கை அறிக்கைகள், தணிக்கை நெறிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர்
மரு. அன்புமணி ராமதாஸ். இவரது ஆட்சியில், அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, பொது இடங்களிலும்,
அலுவலகங்களிலும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள்,
சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது
என்பவை இவரது ஆட்சியின் கீழ் தடை செய்யப்பட்டது.கட்சி படுதோல்வி:புகை பிடிப்பது, மது அருந்துவது
போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப்
போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார்.
இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு
ஆளாக்கின. இத்தகைய கடும் எதிர்ப்புகள் 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது கட்சி படுதோல்வி
அடைந்ததற்கான காரணங்களில் முதன்மையானதாகக் கட்சித்தலைமை கருதுகிறது.எனினும், அமெரிக்கப்
புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று
இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் மேலவையில் தொடர்ந்து எதிர்க்கட்சி அணியில் உறுப்பினராகத் தொடர்கிறார்.
பிறப்பு:
அக்டோபர் 9, 1968ம் ஆண்டு பிறந்தார்.சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார்.
"பசுமைத்தாயகம்":
2004ல் பதவியேற்ற இந்தியக் கூட்டாட்சி அமைச்சர்கள் அனைவரிலும் இவர் மிகவும் இளைஞர்.இவர் மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஊர்ப்புற மருத்துவத்தில் பெரிதும் ஆர்வம் காட்டினார். "பசுமைத் தாயகம்" என்னும் அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இவர்.
புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு:
பல வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ஏற்கனவே வழங்கும் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் எச்சரிக்கை அறிக்கைகள், தணிக்கை நெறிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் மரு. அன்புமணி ராமதாஸ். இவரது ஆட்சியில், அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை இவரது ஆட்சியின் கீழ் தடை செய்யப்பட்டது.
கட்சி படுதோல்வி:
புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார். இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின. இத்தகைய கடும் எதிர்ப்புகள் 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணங்களில் முதன்மையானதாகக் கட்சித்தலைமை கருதுகிறது.எனினும், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தின் மேலவையில் தொடர்ந்து எதிர்க்கட்சி அணியில் உறுப்பினராகத் தொடர்கிறார். |
||||||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|