LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

பொன்னூசற் பருவம்

 

481 பரவுநர லையினறல் கவர்ந்தகரு முகின்மீப் படர்ந்துவெண் டாரைபொழியப் -
      பற்றியிரு பாலுமிரு வெண்டிரை யெழுந்தப் பயோதர மளாவநாப்பண்,
விரவிமொரு வெள்ளோதி மத்தின்மே லக்கடல் விராயவரை நின்றோர்மயின் -
      மேவியாங் கொண்மர கதம்படுத் தியபுடவி மிசைநிறுவு தூண்வயிரமே,
லிரவுதரு நீலவிட் டக்கிடையின் முத்தவட மியையப் பொருத்திமாட்டு -
      மெறிசுடர்செய் வயிரக் கொழுப்பலகை மேலிவர்ந் தெண்டிசையு மேத்தெடுப்பப்,
புரவுபுரி சோணா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (1)
482 மாண்டசெந் தாமரை நடுப்பொலிவ தெனவம் மணக்கோக நகமலர்த்தும் -
      வண்பரிதி மண்டல நடுப்பொலிவ தென்னவம் மண்டலத் தாலொளிபெறு,
நீண்டவழன் மண்டல நடுப்பொலிவ தென்னவொளி நிறைசெம் மணிப்பலகைமே -
      னிலறை வமர்ந்திருள் குடித்தெழு மணிக்குழை நிலாஞ்செவியி லூசலாட,
வேண்டவருள் கைவளை கலித்தாட முகமதியின் வெண்ணகை
      நிலாவாடநுண் மெல்லிடை துவண்டாட வகிலபுவ னமுமாட மிக்கவள மல்குசீர்த்தி,
பூண்டதிரு நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (2)
483 பழிதப வறங்குடிகொ ணினதுசெங் கையமர் பசுங்கிளியை மானவொளிகூர் -
      பவழச் செழும்பலகை யேறியயி ராணியும் பங்கயத் திருவுமிருபா,
லுழியுமிளிர் மணிவடந் தொட்டாட்ட யோகிய ருளக்கமல மேயவனமே -
      யுண்மைவே தாந்தத் துலாவுமயி லேயெளி துறாதபர ஞானவாழ்வே,
வழிவழி நினக்கடிமை யென்றுதுதி நன்றுபுரி மாட்சியர்க் கெய்ப்பில்வைப்பே -
      மங்களாம் பிகையே யெனக்கனி மனத்தினுயர் வாணிதிரு வூசல்பாடப்,
பொழிவளப் புனனா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (3)
484 கொங்குமலர் நின்னடிக் கமலமலர் மிசைதூய்க் குலாவப் பணிந்தெழுந்து -
      கோலமிகு திருவுருக் கண்டுநெக் குருகிக் குடந்தமுற் றருகுநின்று,
தங்குகரு மலமெனப் படுபலகை யுள்ளாற் றகைப்புண் டதற்கியைதரத் -
      தளையுமிரு வினையாய பாசந் தொடர்ந்தெண் டபுத்தமா யாபுவனமா,
மெங்குமுழி தரவலைத் திடவூச லாடுவ தியாங்கடீர்ந் துய்யும்வண்ண -
      மிலகுமதி நடுவமரு மொருமா னெனத்தரள வெறிசுடர்ப் பலகையேறிப்,
பொங்குபுன னன்னா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (4)
485 இருவரும் புணர்மாத ரிருவருந் திருமுகத் தேற்றபா கத்துநின்று -
      மிலகுமற் றரமாதர் யாவருந் தத்தமக் கேற்றநிலை நின்றுமேத்த,
வொருவரு மிருங்கா ருடுத்தபொன் வரைச்சிகர முற்றிலகு பசுமஞ்ஞைபோ -
      லொளிரிளஞ் சோலைநடு வம்பொன்மணி மேடைமே லுற்றபொற் பலகையேறி,
வெருவரும் பெருவாளை தன்னிளஞ் சிறுமீன் வியப்புற்று நோக்கவீனா -
      மீன்கணம் வெருக்கொள்ள வெடிகொண்டு வானீர் விராய்த்துளைந் தாடிமீளும்,
பொருவரும் புனனா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (5)
486 ஒல்லுமிரு நாடிவழி யோடுமிரு காலா லுலாய்த்திரி மனத்தின்வழியே -
      யோடியை யாறும் புகுந்துபுல னைந்துநுக ருற்றுழல லற்றுமேலாச்,
சொல்லுமா னாந்தத் தியாந்துளைந் தாடவொண் சூட்டோதி மந்தாமரைத் -
      தூயபா சடையிவர்ந் தாங்குமுத் தணிபூண்டு சுடர்மர கதப்பலகைமேல்,
வெல்லுமா தரவுற லிவர்ந்தொளிர் பசுஞ்சாலி லிறல்வேழ மறையவுயரும் -
      வித்தக முணர்ந்துவிண் ணுறுசாலி மறையநனி வேழங்க ளோங்கி மலியப்,
புல்லும்வள நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (6)
487 பத்தியெனு மிகுசுவைப் பரவைப் பெருங்கடல் படிந்துவிளை யாடுமனமே -
      பகருநிக மாகமா தீதவா னந்தப் பராங்கட லுதித்தவமுதே, தத்தி
விழு மருவிமலி வரையிற் பிறந்தொளி தவாதபிர ணவகுஞ்சரந் -
      தன்னைப்புணர்ந்தொரு மருப்பிளங் களிறீன்று தழைதரு நலத்தபிடியே,
சித்தியமை யோகிய ருளக்கமல மூறித் தெவிட்டாது பெருகுதேனே -
      தேவர்க்கு மூவர்க்கும் யாவர்க்கு மாறாத செல்வத் தமைந்தவாழ்வே,
புத்தியமை நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (7)
488 இகலரிய பத்திமை யெனப்பகரு மஞ்சனத் தெய்தவெளி யாநிதியமே -
      யெற்றைக்கு மகறல்சற் றிலையாக வவ்வலை யிடைப்படுந் தெய்வமானே,
நகலரிய தென்னா தவக்கோக நகமலரு ணாளுமமர் சூட்டன்னமே -
      நன்றது விளைந்தமன மாகிய பெருந்தளி நயக்குறு மணித்தீபமே,
பகலரிய சந்தமுங் காரகிலும் யானைப் பருங்கோடும் வெள்வயிரமும் -
      பரவுமா ணிக்கமும் வரன்றியிரு கோட்டும் படுத்திரைத் துலவுபொன்னிப்,
புகலரிய நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (8)
489 எண்ணிய பெரும்புவன மெங்கணும் விராய்ப்பொலியு மியல்பின்றி யுந்தேவர்சூ -
      ழிடைமருது முதலைங் குரோசப் பெருந்தல மெனப்பகரு மைந்தகத்து,
நண்ணிய பெரும்புகழ்ச் சோமேசம் விசுவேச நாகேச மபிமுகேச -
      நாடரிய கௌதமே சம்பாண புரமென நவின்றெவரு மேத்துமீச,
மண்ணிய விரைப்பசிய மாலதிவ னேசமென வவிரிவை முதற்ப•றேத்து -
      மாகிய விசேடத்தி னமர்வாய் பெரும்புலவ ராலுமுரை செய்யமுடியாப்,
புண்ணியந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (9)
490 திகழ்தரு மணிச்சிலம் பாதிபுனை பாதமுஞ் செம்பட் டுடுத்த வரையுஞ் - 
      செய்யவற முழுதும்வள ரங்கையும் பரஞான தேசுமலி தருகொங்கையு,
மிகழ்தருத லில்லாத வேயையடு தோளுமழ கியமங் கலக்கழுத்து -
      மிண்டைமலர் வென்றதிரு முகமுமா ரருள்பொழியு மிணைவிழியு முபமானமுற்,
றகழ்தருவி னுதலுமென் புன்றுதியு மேற்றுமகி ழஞ்செவியு முகில்விளர்க்கு -
      மாரளக பாரமு மிகப்பொலிய வண்டபகி ரண்டங்க ளுந்தழைக்கப்,
புகழ்தருந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (10)

 

481 பரவுநர லையினறல் கவர்ந்தகரு முகின்மீப் படர்ந்துவெண் டாரைபொழியப் -

      பற்றியிரு பாலுமிரு வெண்டிரை யெழுந்தப் பயோதர மளாவநாப்பண்,

விரவிமொரு வெள்ளோதி மத்தின்மே லக்கடல் விராயவரை நின்றோர்மயின் -

      மேவியாங் கொண்மர கதம்படுத் தியபுடவி மிசைநிறுவு தூண்வயிரமே,

லிரவுதரு நீலவிட் டக்கிடையின் முத்தவட மியையப் பொருத்திமாட்டு -

      மெறிசுடர்செய் வயிரக் கொழுப்பலகை மேலிவர்ந் தெண்டிசையு மேத்தெடுப்பப்,

புரவுபுரி சோணா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (1)

 

482 மாண்டசெந் தாமரை நடுப்பொலிவ தெனவம் மணக்கோக நகமலர்த்தும் -

      வண்பரிதி மண்டல நடுப்பொலிவ தென்னவம் மண்டலத் தாலொளிபெறு,

நீண்டவழன் மண்டல நடுப்பொலிவ தென்னவொளி நிறைசெம் மணிப்பலகைமே -

      னிலறை வமர்ந்திருள் குடித்தெழு மணிக்குழை நிலாஞ்செவியி லூசலாட,

வேண்டவருள் கைவளை கலித்தாட முகமதியின் வெண்ணகை

      நிலாவாடநுண் மெல்லிடை துவண்டாட வகிலபுவ னமுமாட மிக்கவள மல்குசீர்த்தி,

பூண்டதிரு நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (2)

 

483 பழிதப வறங்குடிகொ ணினதுசெங் கையமர் பசுங்கிளியை மானவொளிகூர் -

      பவழச் செழும்பலகை யேறியயி ராணியும் பங்கயத் திருவுமிருபா,

லுழியுமிளிர் மணிவடந் தொட்டாட்ட யோகிய ருளக்கமல மேயவனமே -

      யுண்மைவே தாந்தத் துலாவுமயி லேயெளி துறாதபர ஞானவாழ்வே,

வழிவழி நினக்கடிமை யென்றுதுதி நன்றுபுரி மாட்சியர்க் கெய்ப்பில்வைப்பே -

      மங்களாம் பிகையே யெனக்கனி மனத்தினுயர் வாணிதிரு வூசல்பாடப்,

பொழிவளப் புனனா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (3)

 

484 கொங்குமலர் நின்னடிக் கமலமலர் மிசைதூய்க் குலாவப் பணிந்தெழுந்து -

      கோலமிகு திருவுருக் கண்டுநெக் குருகிக் குடந்தமுற் றருகுநின்று,

தங்குகரு மலமெனப் படுபலகை யுள்ளாற் றகைப்புண் டதற்கியைதரத் -

      தளையுமிரு வினையாய பாசந் தொடர்ந்தெண் டபுத்தமா யாபுவனமா,

மெங்குமுழி தரவலைத் திடவூச லாடுவ தியாங்கடீர்ந் துய்யும்வண்ண -

      மிலகுமதி நடுவமரு மொருமா னெனத்தரள வெறிசுடர்ப் பலகையேறிப்,

பொங்குபுன னன்னா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (4)

 

485 இருவரும் புணர்மாத ரிருவருந் திருமுகத் தேற்றபா கத்துநின்று -

      மிலகுமற் றரமாதர் யாவருந் தத்தமக் கேற்றநிலை நின்றுமேத்த,

வொருவரு மிருங்கா ருடுத்தபொன் வரைச்சிகர முற்றிலகு பசுமஞ்ஞைபோ -

      லொளிரிளஞ் சோலைநடு வம்பொன்மணி மேடைமே லுற்றபொற் பலகையேறி,

வெருவரும் பெருவாளை தன்னிளஞ் சிறுமீன் வியப்புற்று நோக்கவீனா -

      மீன்கணம் வெருக்கொள்ள வெடிகொண்டு வானீர் விராய்த்துளைந் தாடிமீளும்,

பொருவரும் புனனா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (5)

 

486 ஒல்லுமிரு நாடிவழி யோடுமிரு காலா லுலாய்த்திரி மனத்தின்வழியே -

      யோடியை யாறும் புகுந்துபுல னைந்துநுக ருற்றுழல லற்றுமேலாச்,

சொல்லுமா னாந்தத் தியாந்துளைந் தாடவொண் சூட்டோதி மந்தாமரைத் -

      தூயபா சடையிவர்ந் தாங்குமுத் தணிபூண்டு சுடர்மர கதப்பலகைமேல்,

வெல்லுமா தரவுற லிவர்ந்தொளிர் பசுஞ்சாலி லிறல்வேழ மறையவுயரும் -

      வித்தக முணர்ந்துவிண் ணுறுசாலி மறையநனி வேழங்க ளோங்கி மலியப்,

புல்லும்வள நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (6)

 

487 பத்தியெனு மிகுசுவைப் பரவைப் பெருங்கடல் படிந்துவிளை யாடுமனமே -

      பகருநிக மாகமா தீதவா னந்தப் பராங்கட லுதித்தவமுதே, தத்தி

விழு மருவிமலி வரையிற் பிறந்தொளி தவாதபிர ணவகுஞ்சரந் -

      தன்னைப்புணர்ந்தொரு மருப்பிளங் களிறீன்று தழைதரு நலத்தபிடியே,

சித்தியமை யோகிய ருளக்கமல மூறித் தெவிட்டாது பெருகுதேனே -

      தேவர்க்கு மூவர்க்கும் யாவர்க்கு மாறாத செல்வத் தமைந்தவாழ்வே,

புத்தியமை நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (7)

 

488 இகலரிய பத்திமை யெனப்பகரு மஞ்சனத் தெய்தவெளி யாநிதியமே -

      யெற்றைக்கு மகறல்சற் றிலையாக வவ்வலை யிடைப்படுந் தெய்வமானே,

நகலரிய தென்னா தவக்கோக நகமலரு ணாளுமமர் சூட்டன்னமே -

      நன்றது விளைந்தமன மாகிய பெருந்தளி நயக்குறு மணித்தீபமே,

பகலரிய சந்தமுங் காரகிலும் யானைப் பருங்கோடும் வெள்வயிரமும் -

      பரவுமா ணிக்கமும் வரன்றியிரு கோட்டும் படுத்திரைத் துலவுபொன்னிப்,

புகலரிய நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (8)

 

489 எண்ணிய பெரும்புவன மெங்கணும் விராய்ப்பொலியு மியல்பின்றி யுந்தேவர்சூ -

      ழிடைமருது முதலைங் குரோசப் பெருந்தல மெனப்பகரு மைந்தகத்து,

நண்ணிய பெரும்புகழ்ச் சோமேசம் விசுவேச நாகேச மபிமுகேச -

      நாடரிய கௌதமே சம்பாண புரமென நவின்றெவரு மேத்துமீச,

மண்ணிய விரைப்பசிய மாலதிவ னேசமென வவிரிவை முதற்ப•றேத்து -

      மாகிய விசேடத்தி னமர்வாய் பெரும்புலவ ராலுமுரை செய்யமுடியாப்,

புண்ணியந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (9)

 

490 திகழ்தரு மணிச்சிலம் பாதிபுனை பாதமுஞ் செம்பட் டுடுத்த வரையுஞ் - 

      செய்யவற முழுதும்வள ரங்கையும் பரஞான தேசுமலி தருகொங்கையு,

மிகழ்தருத லில்லாத வேயையடு தோளுமழ கியமங் கலக்கழுத்து -

      மிண்டைமலர் வென்றதிரு முகமுமா ரருள்பொழியு மிணைவிழியு முபமானமுற்,

றகழ்தருவி னுதலுமென் புன்றுதியு மேற்றுமகி ழஞ்செவியு முகில்விளர்க்கு -

      மாரளக பாரமு மிகப்பொலிய வண்டபகி ரண்டங்க ளுந்தழைக்கப்,

புகழ்தருந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -

      பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.