|
||||||||
பூமரத்துச் சந்தி |
||||||||
சந்தியோ பெரும்சந்தி
ஒரு சாதிப் பொடியன்கள் சுற்றுகின்ற வட்டாரம்
நாலுபக்கம் கண்ணெறிந்து துணிச்சலுடன்
பார்த்தால்
வேலிக்குள் ஆளுசும்பும் பகுதி.
சந்தி முழுநாளும் இருளுறையக் காரணமாய்
நிற்கிறது வாகை,
பேய்ச்சி பூஅள்ளித் தலையில் வைத்ததுபோல்
ஊத்தை நிழல் வாகை பூக்க,
ஓராயிரம் இல்லை ஒன்பதினாயிரம் இல்லை
பதினையாயிரம்
காகங்கள் கூடும் பின் கலையும் கொப்புகளில்
கூட்டம் நடத்தும் கைதட்டும் ஒரு சிலது
தலைகீழாய்க் கூடப் பறக்கும்.
சந்தியோ பெரும் சந்தி.
நாலு வாகனங்கள் பெயர்ந்து பிரியுமிடம்.
வாகை பூத்துத் தெருவெல்லாம் பூப்பரவ
அப்பக் கிழவிக்கும் ஓராசை,
பித்தம் வெடித்து தோற் சுருங்கிப் பொருக்குப்
பறந்த கால்களைத் தூக்கிவைத்துப் பூப்பூவாய்
கிளிப்பிள்ளை போல நடக்க.
ஆசையைப் பார் ஆசை
வாலுசத்திப் பின்புறத்தைப் பணித்துப்
புழுக்கையிடும்
மணியாட்டுப் பெட்டைக்கும் இப்பொழுது
பூத் தேவை.
பள்ளிக்குப் போகின்ற சரக்குகளைக் கண்டு
உறுமி இளைக்கின்ற சொறி நாய்க்கும் கூடத்தான்.
நிழல்வாகைப் பூப்பொறுக்க பிள்ளைகளும் வரும்.
பள்ளிக்கூடம் இல்லாத நாள்பார்த்து
உருவி உதிர்த்தி பூப்பொறுக்கி விளையாடும்.
சந்தியோ பெரும்சந்தி
ஒரு சாதிப் பொடியன்கள் சைக்கிள்விட்டு
சைக்கிள்விட்டு
பள்ளம் விழுந்த இவ்விடத்தில் இன்னுமொரு
'கொளுகல்' கதைக்கும் கண்மூக்கு முளைக்கிறது.
சந்தியோ பெரும்சந்தி ஒரு சாதிப் பொடியன்கள் சுற்றுகின்ற வட்டாரம் நாலுபக்கம் கண்ணெறிந்து துணிச்சலுடன் பார்த்தால் வேலிக்குள் ஆளுசும்பும் பகுதி.
சந்தி முழுநாளும் இருளுறையக் காரணமாய் நிற்கிறது வாகை, பேய்ச்சி பூஅள்ளித் தலையில் வைத்ததுபோல் ஊத்தை நிழல் வாகை பூக்க,
ஓராயிரம் இல்லை ஒன்பதினாயிரம் இல்லை பதினையாயிரம் காகங்கள் கூடும் பின் கலையும் கொப்புகளில் கூட்டம் நடத்தும் கைதட்டும் ஒரு சிலது தலைகீழாய்க் கூடப் பறக்கும்.
சந்தியோ பெரும் சந்தி. நாலு வாகனங்கள் பெயர்ந்து பிரியுமிடம். வாகை பூத்துத் தெருவெல்லாம் பூப்பரவ அப்பக் கிழவிக்கும் ஓராசை, பித்தம் வெடித்து தோற் சுருங்கிப் பொருக்குப் பறந்த கால்களைத் தூக்கிவைத்துப் பூப்பூவாய் கிளிப்பிள்ளை போல நடக்க.
ஆசையைப் பார் ஆசை வாலுசத்திப் பின்புறத்தைப் பணித்துப் புழுக்கையிடும் மணியாட்டுப் பெட்டைக்கும் இப்பொழுது பூத் தேவை.
பள்ளிக்குப் போகின்ற சரக்குகளைக் கண்டு உறுமி இளைக்கின்ற சொறி நாய்க்கும் கூடத்தான்.
நிழல்வாகைப் பூப்பொறுக்க பிள்ளைகளும் வரும். பள்ளிக்கூடம் இல்லாத நாள்பார்த்து உருவி உதிர்த்தி பூப்பொறுக்கி விளையாடும்.
சந்தியோ பெரும்சந்தி ஒரு சாதிப் பொடியன்கள் சைக்கிள்விட்டு சைக்கிள்விட்டு பள்ளம் விழுந்த இவ்விடத்தில் இன்னுமொரு 'கொளுகல்' கதைக்கும் கண்மூக்கு முளைக்கிறது.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|