LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

பூமரத்துச் சந்தி

 

சந்தியோ பெரும்சந்தி
ஒரு சாதிப் பொடியன்கள் சுற்றுகின்ற வட்டாரம்
நாலுபக்கம் கண்ணெறிந்து துணிச்சலுடன்
பார்த்தால்
வேலிக்குள் ஆளுசும்பும் பகுதி. 
சந்தி முழுநாளும் இருளுறையக் காரணமாய்
நிற்கிறது வாகை,
பேய்ச்சி பூஅள்ளித் தலையில் வைத்ததுபோல்
ஊத்தை நிழல் வாகை பூக்க,
ஓராயிரம் இல்லை ஒன்பதினாயிரம் இல்லை
பதினையாயிரம்
காகங்கள் கூடும் பின் கலையும் கொப்புகளில்
கூட்டம் நடத்தும் கைதட்டும் ஒரு சிலது
தலைகீழாய்க் கூடப் பறக்கும். 
சந்தியோ பெரும் சந்தி.
நாலு வாகனங்கள் பெயர்ந்து பிரியுமிடம்.
வாகை பூத்துத் தெருவெல்லாம் பூப்பரவ
அப்பக் கிழவிக்கும் ஓராசை,
பித்தம் வெடித்து தோற் சுருங்கிப் பொருக்குப்
பறந்த கால்களைத் தூக்கிவைத்துப் பூப்பூவாய்
கிளிப்பிள்ளை போல நடக்க.
ஆசையைப் பார் ஆசை
வாலுசத்திப் பின்புறத்தைப் பணித்துப்
புழுக்கையிடும்
மணியாட்டுப் பெட்டைக்கும் இப்பொழுது
பூத் தேவை.
பள்ளிக்குப் போகின்ற சரக்குகளைக் கண்டு
உறுமி இளைக்கின்ற சொறி நாய்க்கும் கூடத்தான்.
நிழல்வாகைப் பூப்பொறுக்க பிள்ளைகளும் வரும்.
பள்ளிக்கூடம் இல்லாத நாள்பார்த்து
உருவி உதிர்த்தி பூப்பொறுக்கி விளையாடும்.
சந்தியோ பெரும்சந்தி
ஒரு சாதிப் பொடியன்கள் சைக்கிள்விட்டு
சைக்கிள்விட்டு
பள்ளம் விழுந்த இவ்விடத்தில் இன்னுமொரு
'கொளுகல்' கதைக்கும் கண்மூக்கு முளைக்கிறது. 

 

சந்தியோ பெரும்சந்தி

ஒரு சாதிப் பொடியன்கள் சுற்றுகின்ற வட்டாரம்

நாலுபக்கம் கண்ணெறிந்து துணிச்சலுடன்

பார்த்தால்

வேலிக்குள் ஆளுசும்பும் பகுதி. 

 

சந்தி முழுநாளும் இருளுறையக் காரணமாய்

நிற்கிறது வாகை,

பேய்ச்சி பூஅள்ளித் தலையில் வைத்ததுபோல்

ஊத்தை நிழல் வாகை பூக்க,

 

ஓராயிரம் இல்லை ஒன்பதினாயிரம் இல்லை

பதினையாயிரம்

காகங்கள் கூடும் பின் கலையும் கொப்புகளில்

கூட்டம் நடத்தும் கைதட்டும் ஒரு சிலது

தலைகீழாய்க் கூடப் பறக்கும். 

 

சந்தியோ பெரும் சந்தி.

நாலு வாகனங்கள் பெயர்ந்து பிரியுமிடம்.

வாகை பூத்துத் தெருவெல்லாம் பூப்பரவ

அப்பக் கிழவிக்கும் ஓராசை,

பித்தம் வெடித்து தோற் சுருங்கிப் பொருக்குப்

பறந்த கால்களைத் தூக்கிவைத்துப் பூப்பூவாய்

கிளிப்பிள்ளை போல நடக்க.

 

ஆசையைப் பார் ஆசை

வாலுசத்திப் பின்புறத்தைப் பணித்துப்

புழுக்கையிடும்

மணியாட்டுப் பெட்டைக்கும் இப்பொழுது

பூத் தேவை.

 

பள்ளிக்குப் போகின்ற சரக்குகளைக் கண்டு

உறுமி இளைக்கின்ற சொறி நாய்க்கும் கூடத்தான்.

 

நிழல்வாகைப் பூப்பொறுக்க பிள்ளைகளும் வரும்.

பள்ளிக்கூடம் இல்லாத நாள்பார்த்து

உருவி உதிர்த்தி பூப்பொறுக்கி விளையாடும்.

 

சந்தியோ பெரும்சந்தி

ஒரு சாதிப் பொடியன்கள் சைக்கிள்விட்டு

சைக்கிள்விட்டு

பள்ளம் விழுந்த இவ்விடத்தில் இன்னுமொரு

'கொளுகல்' கதைக்கும் கண்மூக்கு முளைக்கிறது. 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.