LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம்

பூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம்

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரின் சங்ககால பெயர் ‘காவிரிப் பூம்பட்டினம்’ என்பதாகும். காவிரி நதியானது இங்குள்ள கடலில் சங்கமிப்பதால் ‘காவிரி புகும் ஆறு’ என்று பெயரிடப்பட்டு, பிறகு அப்பெயரானது மருவி ‘காவிரிப் பூம்பட்டினம்’ என்றானது. ஆனால் 6ம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் வணிகமயமாக விளங்கிய இந்நகரம் ‘பூம்புகார்’ என்றும், அதற்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘கீழையூர்’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சங்க கால சிறப்புப் பெயரான ‘காவிரிப் பூம்பட்டினம்’ என்ற பெயரே தங்களது ஊருக்கு வேண்டுமென்று அவ்வு+ர் மக்கள் மூன்று தலைமுறைகளாகத் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இக்கிராமத்திற்குப் பணி மாறுதலில் வந்த கிராம நிர்வாக அலுவலரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற வி.ஏ.ஓ. மணிமாறன் முயற்சியில் மயிலாடுதுறை மாவட்ட எல்லை வரையறை தொடர்பான கருத்துக் கேட்பின் போது பூம்புகார் மக்களின் பெயர் மாற்றக் கோரிக்கையை வரலாற்று ஆவணங்களுடன், அனைத்துத் தகவல்களையும் முன்வைத்தார். அதன் பேரில் கடந்த 28ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பின் போது கீழையூர் கிராமத்தின் பெயரும் 6ம் நூற்றாண்டின் வழக்கத்தின் பேரில் காவிரிப்பூம்பட்டினம் என்று மாற்றப்படுவதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இவ்வரசாணையைக் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

by Lakshmi G   on 04 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.