LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

பொபி ஸான்ட்ஸின் மரணம்

'பொபி ஸான்ட்ஸ்'
உலகின் நரம்புகளை ஓர்கணம்
அதிரச் செய்ததுன் மரணம்!
முகமிழந்த மனிதா¢ன் மத்தியிலிருந்த
என் உரோமங்கள் சிலிர்ப்புற்றன,
தோழ!

வாழ்க்கை என்பது கடவுளின் தீர்மானமாகக்
கொண்டவர் மத்தியில்
உன்னைப் போன்ற எண்ணம் கொண்ட
நாங்களும் இருந்தோம்.
'வாழ்க்கை என்பது மனிதனின் சிருஷ்டி'
என்ற படிக்கு
மிகச் சில பேராய் ஓங்கிய குரலில்
நாங்கள் கத்தினோம்!

வாழ்வு இல்லை என்பதை
உணர்ந்து
இன்றைக் கெங்கள் மக்கள்
எழுந்து வருகிறார்.

எங்களால் இயன்ற வழிகளில்
நாங்கள் மானிடர் என்பதை
உரத்துக்டி கத்துவோம்.

நியூயோர்க் நகரத்துப் பூங்காவில்
காதலி மார்பில் துவளும் மனிதனும்
'ஹேக்' நகர நீதவான்களும்
இன்னும் எஞ்சிய எல்லா மனிதரும்
எங்கள் உறுதி உணர்வர்.

அலையலையாய் மக்கள் எழுந்துவரும்
காலைப் பொழுதிலும்
பனி உறைகிறது...
யுபொபி ஸான்ட்ஸ்ரு
உந்தன் நினைவில்
வாழ்வை மீட்பதன் வலிமை உணர்கிறேன்!

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.