தேவையானவை :
சௌசௌ - 1 வெங்காயம் – 1 நறுக்கியது எண்ணை - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் - 3 வரை கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் சௌசௌவ்வை தோல் சீவி, விதையையும் வெள்ளைப் பகுதியையும் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் சௌசௌ துண்டுஜ்களைப் போட்டு அத்துடன் ஒரு கை தண்ணீரைத் தெளித்து காய் குழையாமல் மிதமான தீயில் வேக வைக்கவும். 3.பின்பு ஒரு கடாயில் எண்ணையை விட்டு அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
4.பருப்பு சிவந்ததும், மிளகாய்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலையையும் போட்டு சற்று வதக்கி, பின் அதில் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5.கடைசியாக வேக வைத்துள்ள காய், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.
|