தேவையானவை:
பயத்தங்காய் - ஒரு கட்டு கேரட் - 1 சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் பயத்தங்காய் , கேரட் மெல்லிய நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் . 2.பின்பு ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள காயையும் வதக்கவும்.
3.பின்பு அதில் சாம்பார் பொடி, ம்ஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கலந்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
4.கடைசியாக காய் வெந்ததும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் இறக்கி வைக்கவும்.
|